Wednesday, August 23, 2006

சூட்டை கிளப்பிய வைகோ பேச்சு -2

தமிழக சட்டசபையில் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் சிறிய விரிசலை கிளப்பிய வைகோவின் பேச்சின் இரண்டாம் பாகம்

**********

2000 ஆம் ஆண்டும் 2001 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்தனர். சிங்கள இராணுவத்தோடு இனி சண்டைபோட முடியாது என்றா அறிவித்தார்கள். இல்லை...நாங்கள் பலம் வாய்ந்தவர்கள் என்று ஆனையிறவிலே நிரூபித்துவிட்டு.. உலக யுத்த சரித்திரத்திலே மகத்தான சாதனைகளைச் செய்தவர்கள்.. ஆம் பொதுமக்கள் ஒருவருக்குக் கூட எதுவித ஆபத்தும் ஏற்படாமல் 27 விமானங்களை கட்டுநாயக்கவிலே சுட்டுவீழ்த்தி விட்டு நாங்கள் பலமானவர்கள்- போரினால் வெல்லமுடியாதவர்கள் என்று காட்டிவிட்டு போர் நிறுத்தம் செய்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.


ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்பதாக இலங்கை அரசு அறிவித்ததா? போர் நிறுத்தத்தை தொடர்ந்து நீட்டித்த பிறகே கடைசி நேரத்தில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தது. இந்த போர் நிறுத்தம் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்டது. சர்வதேச சமூகத்தின் முன்பாக குற்றவாளிக் கூண்டிலே நிற்க வேண்டிய நிலையிலே போர் நிறுத்ததிலே சிறிலங்கா அரசு கையெழுத்திட்டது.

அதன் பின்னர் பேச்சுவர்த்தைகள் நடத்தப்பட்டன. தாய்லாந்திலே விடுதலைப் புலிகளின் பிரதிநிதி அருமை அன்டன் பாலசிங்கத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தார்கள். தாய்லாந்து அதிபர் நம்முடைய பாலசிங்கத்தை யுவர் எக்செலன்சி என்று அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பளித்தார்.
ஏற்கெனவே தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஆட்சி நடத்துகிறார்கள். உலக நாட்டிலே எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான நிர்வாகம் ஈழத்திலே நடைபெறுகிறது. நல்ல அரசு நடத்த வேண்டுமானால் அங்கு போய் பாடம் கற்றுக்கொண்டு வரலாம்.

அந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து சுமூகத் தீர்வைக் கலைத்தது யார்? சிங்களவர்கள்தானே. அப்போது சிட்டுக்குருவிகளைப் போல் விடுதலைப் புலிகளிடம் சிறிய விமானங்கள் இருப்பது இந்தியாவுக்கு ஆபத்தாம்.

நீங்கள் கொடுக்கப் போகிற ராடார்கள் யாரை கண்காணிக்க? நீங்கள் கொடுக்கிற ஆயுதங்களை வைத்துக் கொண்டு யாருடன் அவர்கள் சண்டைக்குப் போகிறார்கள் சிங்களவர்கள்?

சீனாக்காரன், பாகிஸ்தான் ஆயுதங்களைத் தருவதால் நீங்கள் ஆயுதம் தருவதாகச் சொல்கிறீர்களே? சீனாக்காரனும் பாகிஸ்தானியக்காரனுமா அங்கே வாழ்கிறான்? எங்கள் தமிழர்கள் அல்லவா வாழ்கிறார்கள்.
சிங்கள இராணுவத்துக்காக ராடார்களைக் கொடுக்கிறீர்களே...அந்த இராணுவத்தைக் கொண்டு எங்கள் தமிழர்கள் கொல்லப்படுகிறபோது அந்தத் தமிழர்களுக்கு நீங்கள் பாதுகாப்பளிக்க வேண்டாமா?

இந்தியாவை சிங்களவர்கள் முன்னிறுத்துக் காட்டுவதே தங்களுக்கு இந்தியா சார்பாக இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்ளத்தான். அங்கே போர் மூளக்கூடாது என்றுதான் நாம் விரும்புகிறோம். அங்கே விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு வாழ்வுரிமை இல்லை. அங்கே உள்ள தமிழன் நாதியற்றுப் போகவில்லை. நாயகம் முழுமையும் உள்ள தமிழன் உள்ளார்.

ஈழத்திலே உள்ள தமிழர்கள் வதைக்கப்பட்டால் தமிழர்களை ஒடுக்கிவிடலாம் என்று சிங்களவர்கள் எண்ணிவிடுவார்களேயானால்..நயவஞ்சகமாக இந்தியாவை தந்திரமாக தக்க வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணினால் அது ஒருக்காலும் நடக்காது.

சிங்கள அரசின் வஞ்சக வலையில் இந்திய அரசு ஒருபோதும் விழாது என்று நம்புகிறோம். தமிழர்கள் மீது இனப்படுகொலையை ஏவிடலாம் என்று எண்ணினால் நாம் அனுமதிக்கமாட்டோம். ஈழத் தமிழர்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.

இலங்கைக்கு எந்த உதவியும் நீங்கள் செய்யக் கூடாது. ஆயுதங்களை, ராடார்களை கொடுக்காதீர். கொடுத்தால் என்ன ஆயிற்று? யார் என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். இங்கே இருக்கிற இளைஞர்கள் வைகோவைப் போல் அமைதியாக இருக்கிறவர்கள் அல்ல.
இதனால் ஏற்படக் கூடிய உணர்வு.... இங்கே கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது. இந்த இளைஞர்களின் இதயத்தில் பெற்றோலை ஊற்றி எரியூட்டாதீர்கள். தங்கள் இனத்துக்கு ஏற்படும் அநீதி கண்டு அவர்கள் கொதித்தால் ......

கொசாவோவுக்கு குரல் கொடுக்கிறீர்கள்...மதத்துக்காக குரல் கொடுக்கிறீர்கள். எங்கள் இனத்துக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.

வன்முறை இங்கே வரக்கூடாது. அதை நீங்கள் விதைத்துவிடக் கூடாது. எதிர்காலத்திலே வன்முறை விதைகளை தூவிவிடாதீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்க மன்மோகன்சிங் அரசுக்கு முழு ஆதரவளிக்கிறோம். மதிக்கிறோம். தமிழர்களால் உருவாக்கப்பட்ட- 40 நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசு தமிழினத்துக்கு கேடு செய்துவிடக் கூடாது என்பதற்காக இந்தத் தீர்மானத்தை முன்வைக்கிறோம். ஐ.நா. சபையிலே புதிய புதிய கொடிகள் பறக்கின்றன. எங்கள் தமிழீழக் கொடி அங்கே பறக்கும். தமிழீழம் விரைவில் மலரும்.

என்னதான் சொன்னார் வைகோ -1









தமிழர்களுடைய உணர்ச்சி அழியாது. நீறுபூத்த நெருப்பாக இருக்கும். நாங்கள் கருத்துகளைப் பேசுவதற்கு முன்பாக எங்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று எண்ணிக்கொண்டு ஒரு கருத்தை உங்களுக்குள் உருவாக்கிக் கொண்டு பத்திரிகையாளர்கள் பார்ப்பதால் பிரச்சனையின் இன்னொரு பக்கம் 50 ஆண்டுகாலத்துக்கும் மேலான வரலாறு- தமிழர்களின் பக்கம் உள்ள நியாயம் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.

இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இருக்கிறவன் சொல்கிறான். இலங்கைத் தீவிலே தமிழீழம் அமைய வேண்டும் என்று சொல்பவர்களைப் பிரிவினை வாதிகள் என்று சொல்லுகிற மேதாவிகளைப் பார்த்துக் கேட்கிறேன்.

1999 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிந்து செல்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது இதை நீங்கள் ஏன் சொல்லவில்லை?

ஒரு நாட்டினது இறையாண்மையைத் தீர்மானிப்பது யார்? அந்நாட்டு மக்கள். இறையாண்மை, ஒருமைப்பாடு என்பது என்ன? அங்கே தமிழீழத் தனிநாடு வந்தால் இங்கே தனித் தமிழ்நாடு வந்துவிடும் என்று பேசுகிறார்கள். தனிநாடு அமைவது தொடர்பான கருத்துக்களைப் பேசுவதற்கு நீங்கள் யார்? உலகத்துக்கு நாட்டமைகளா?

அப்படியானால் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை பிரித்து உலக வரைபடத்திலே வங்கதேசத்தை உருவாக்கிக் கொடுக்க இந்திய இராணுவம் சென்றதே... அப்போது எங்கே போனீர்கள்? வாருங்கள்...வாதாட வாருங்கள். எங்கள் பக்கம் நியாயமிருக்கிறது.

ஆயுதப் போராட்டம் ஏன் வந்தது அங்கே? யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கபட்டது. நடு வீதிகளிலே தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். தமிழர்கள் மாமிசம் கிடைக்கும் என்று தொங்கவிட்டார்களே...அதனால்தானே தங்களைப் பாதுகாக்க ஆயுதப் போராட்டத்தை தொடங்கினார்கள். அதேகாலகட்டத்தில் அமெரிக்காவில் 1981 மாசாசூட்டெஸ் மாகாணத்திலே ஈழத்தை ஆதரித்து ஈழத் திருநாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இலங்கையில் ஒப்பந்தம் போடுகிற போதெல்லாம் நயவஞ்சகமாக அதை கிழித்தெறிகிறவர்கள் சிங்களவர்கள். 1983-ல் வெலிக்கடைச் சிறையில் கோரமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த காலகட்டத்தில் தமிழகமே கொதித்தெழுந்தது.ஈழத்திலே இனப் படுகொலை நடக்கிறது என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை. அன்று நாடாளுமன்றத்திலே இந்திரா காந்தி அம்மையாரும் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், அந்தத் தீவின் பூர்வகுடித் தமிழ் மக்கள் என்றார் இந்திரா காந்தி அம்மையார்.

அன்று ஜெயவர்த்தன நயவஞ்சகமாக இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். இன்று மகிந்த ராஜபக்ச ஒப்பந்தம் போட்டுக்கொள்ளச் சொல்லுகிறார். தமிழர்களின் அவலத்தை அகிலத்துக்குச் சொல்ல ஆராய்ச்சி மணி அடித்தது நோர்வே நாடுதானே. அவர்கள்தானே இத்தனை ஆண்டுகாலம் குரல் கொடுத்தார்கள். இரு சிறுநீரகங்களும் செயலிழந்துபோன பால சிங்கத்தைக் காப்பாற்றியது நோர்வே.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை மீறுவதாகச் சொல்கிறார்கள். போர் நிறுத்தத்தை முதலிலே அறிவித்தது யார்? விடுதலைப் புலிகள்தானே.

(தொடரும்)

Thursday, August 10, 2006

குதிரை விளையாட்டு

வரலாற்றை மாற்றி எழுதுவது என்பது இந்துத்வாவாதிகளுக்கு புதிதல்ல என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் வரலாறு எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன. பண்டைய தமி்ழ் இலக்கியத்தை வைதீகப்படுத்திய விஷயங்களை பற்றி வேல்சாமி போன்ற அறிஞர்கள் நிறைய எழுதியுள்ளனர்.

இந்த கட்டுரையின் முந்றைய பாகங்களின் சுட்டி.....

http://dravidatamils.blogspot.com/2006/07/1_22.html

http://dravidatamils.blogspot.com/2006/07/2.html

http://dravidatamils.blogspot.com/2006/08/3.html

http://dravidatamils.blogspot.com/2006/08/4_05.html

கடந்த பாகத்தில் சிந்து வெளி முத்திரைகளை படித்து விட்டதாகவும் அங்க குதிரைகளும் குதிரைவண்டிகளும் பயன்படுத்தியதற்கு ஆதாரங்களை காட்டி விட்டதாகவும் சில இந்துத்வாவாதிகள் கூறியதையும் அதை நிபுணர்கள் சிலர் மறுத்துள்ளார்கள் என்ற தகவலையும் படித்தோம்.

அதைப்பற்றிய விளக்கங்களை இன்று காண்போம். இன்று வரை இந்த சிந்துவெளி முத்திரைகளை யாரும் சந்தேகத்திற்கிடமின்றி டிகோட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முத்திரைகளை படித்து விட்டதாக எழுதிய ராஜாராம், ஜா என்ற இருவருமே இந்துத்வா ஆசாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழே நான் கொடுத்துள்ள கட்டுரையில் ராஜாராம் என்பவரது அறிவை புகழ இவர்கள் கொடுத்திருக்கும் உதாரணத்தை அனைவரும் படித்து அனுபவிக்க வேண்டும். புல்லரிக்கிறது.

குதிரை படத்தை கம்ப்யூட்டர் மார்பிங் செய்துள்ளதை பிட்டு பிட்டு வைத்துள்ளதை காட்டும் படத்தை கிழேயுள்ள சுட்டிகளில் கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டும்.




பேராசிரியர் விட்சலின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்

//It was quickly shown that the methods of Jha and Rajaram were so flexible that virtually any desired message co uld be read into the texts. One Indologist claimed that using methods like these he could show that the inscriptions were written in Old Norse or Old English. Others pointed to the fact that the decoded messages repeatedly turned up "missing links" betwe en Harappan and Vedic cultures - supporting Rajaram's Hindutva revisions of history. The language of Harappa was declared to be "late Vedic" Sanskrit, some 2,000 years before the language itself existed. Through the decoded messages, the horseless Indus Valley Civilisation - distinguishing it sharply from the culture of the Rigveda - was awash with horses, horse keepers, and even horse rustlers. To support his claims, Rajaram pointed to a blurry image of a "horse seal" - the first pictorial evidence eve r claimed of Harappan horses.
Chaos followed. Within weeks, the two of us demonstrated that Rajaram's "horse seal" was a fraud, created from a computer distortion of a broken "unicorn bull" seal. This led Indologist wags to dub it the Indus Valley "Piltdown horse" - a comic allusion to the "Piltdown man" hoax of the early twentieth century. The comparison was, in fact, apt, since the "Piltdown man" was created to fill the missing link between ape and man - just as Rajaram's "horse seal" was intended to fill a gap between Harappa and Vedic cultures.
Once the hoax was uncovered, $1000 was offered to anyone who could find one Harappan researcher who endorsed Rajaram's "horse seal." The offer found no takers. //

//As we have seen, Rajaram claims that the language of Harappa was "late Vedic" Sanskrit. This conflicts with countless facts from archaeology, linguistics, and other fields. Indeed, "late Vedic" did not exist until some two thousand years after the start of mature Harappan culture! //

மேலும் தன்னுடைய கூற்றாக ஹராப்பா மக்கள் பேசியது வேத கால சம்ஸ்கிருதம் என்று ஒரு போடு போடுகிறார் ராஜாராம்.உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பேயறைந்து போல் ஆனார்களாம்.இதற்கு அவர் கொடுத்த ஆதாரம் மொழியியல் என்ற அறிவியலையே மறுதலிக்கிறதாம்.

குறைந்தது 2000 வருடத்திற்கு பின்பு உருவான மொழியை முன்பே இருந்த நாகரீகத்துடன் இணைத்து இவர் எழுதிய புதிய இந்திய வரலாறு மிக பிரசித்தம் இந்துத்வா வட்டாரத்தில். ஆனால் அறிவியல் வட்டாரத்தில் இதன் மதிப்பு ஸிரோதான். பி.பி.சியில் வந்தது என்று இவர்கள் உரத்து கூறிவிட்டு பின்னர் பி.பி.சியின் மறுப்பிற்கு பிறகு வாயை திறக்காமல் இருப்பதை கவனிக்கவேண்டும்.

மைக்கேல் விட்சல் மேலும் கூறுகையில்

//In the past few decades, a new kind of history has been propagated by a vocal group of Indian writers, few of them trained historians, who lavishly praise and support each other's works. Their aim is to rewrite Indian history from a nationalistic and rel igious point of view. Their writings have special appeal to a new middle class confused by modern threats to traditional values. With alarming frequency their movement is backed by powerful political forces, lending it a mask of respectability that it do es not deserve. //

சம்பந்தப்பட்ட சுட்டிகள் இங்கே

http://www.hinduonnet.com/fline/fl1720/17200040.htm

http://www.hinduonnet.com/fline/fl1720/17200041.htm

http://www.hinduonnet.com/fline/fl1720/17200150.htm

நான் ஏற்கனவே கூறியது போல் பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த புதிய வரலாற்றை இவர்கள் வெற்றிகரமாக எழுதியே விடுவார்கள்என்பது தான் நிஜம். ஆனால் அறிவியலை திரித்து இந்துத்வாவாதிகள் ஆடும் ஆட்டத்திற்கு அறிவுலகில் எந்த மதிப்பும் இல்லை.

கடைசியாக:

திராவிடர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் மரபியல் ரீதியாக எதையும் நிரூபித்து 'ஆரிய எதிர்ப்பை'த் தொடங்கவில்லை, 'பிரித்தாளும் சதி'யைத் தூண்டவில்லை. 'ஆரிய' என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பிரிவினரின் குறிப்பிட்ட சில வழிமுறைகளை அங்கீகரிக்க விரும்பாத சமூக எதிர்வினையின் அடையாளமாகத்தான் 'திராவிட' என்னும் அடையைப் பார்க்க முடிகிறது . நாகரீக சமுதாயத்திலும் மற்றவர்களை ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்தை தடுத்தல், ஆன்மீகத்தை வைத்து அடக்கியாள முயற்சி செய்தல், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மற்றவர்களை முன்னேற விடாமல் செய்தல் ஆகிய செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.இவைகளை எதிர்க்கவேண்டியது அவசியம்.

தமிழ்தேசியம்,திராவிடம் பற்றி சுப.வீ

தமிழர்கள் யார் என்பதை வரையறுப்பது? பண்டைய இலக்கியங்களில் அடிப்படையில் தமிழ் தேசியத்தை வரையறுக்கமுடியுமா? தமிழ் மரபுகள் மற்றும் விளையாட்டுக்கள் மீட்டுறுவாக்கம் தேவையா? ஆகிய கேள்விகளுக்கு பதில்களும் மற்றும் , இந்தி எதிர்ப்பு, திராவிடம், தேசியம், உ.வே.சாவின் தமிழ் பற்று,பெரியாரியம், மார்க்சியம் ஆகியவைப்பற்றியும் சுப.வீரபாண்டியன் விரிவாக பேசிய இந்த பேட்டி இந்த சுட்டியில் உள்ளது.

http://www.keetru.com/ungal_noolagam/jul06/subavee.html

ஆர்வம் உள்ள நண்பர்கள் இதைப்படித்து இதன் அடிப்படையில் ஒரு நல்ல விவாதத்தை நடத்தலாம் என்பது எங்கள் வேண்டுகோள்.

Wednesday, August 09, 2006

வை.கோ - பிரதமர் சந்திப்பு

பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை வைகோ பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். 25 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது.


இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார். மேலும் பிரதமரிடம் வைகோ நேரில் தெரிவித்ததாவது:-தமிழ்நாட்டில் ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக இருப்பவரும், சிங்கள அரசின் ஏஜெண்டாகச் செயல்படுவருமான டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இந்தியாவுக்கு வந்து, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்களையும், வெளியுறவுச் செயலர் சியாம்சரண் அவர்களையும் சந்தித்ததோடு, செய்தியாளர்கள் கூட்டத்தையும் கூட்டி, அறிக்கைகள் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது ஆகும்.

இதற்குப் பிரதமர், இந்தப் பிரச்சனை இதுவரை தன் கவனத்துக்கு வரவில்லை என்றும், இதுகுறித்து விசாரிப்பதாகவும் கூறினார்.அதேபோல, சிங்கள அரசின் கைக்கூலியாகச் செயல்படுகின்ற ஓரிருவர், தமிழ்நாட்டில் அகதிகள் முகாமிலும், கடலோரப் பகுதிகளிலும், சிங்கள அரசுக்கு ஆதரவான கைக்கூலிப் படைக்கு பணம் கொடுத்து ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், அப்படிப்பட்ட ஒரு நபர் அண்மையில் பெங்களூரில் கைது செய்யப்பட்டு, உடனே விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், மத்திய அரசு இந்தப் பின்னணியில் செயல்பட்டதாகவும், வெளியாகி உள்ள செய்தி கவலை அளிப்பதாக வைகோ பிரதமரிடம் கூறினார்.

"இது மாதிரியான நடவடிக்கைகளுக்கு அரசு நிச்சயமாக இடம் அளிக்காது என்றும், இதுகுறித்து உடனடியாக தகுந்த முறையில் விசாரிக்கிறேன்" என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.நளினி-முருகன் ஆகியோரின் மகள் அரித்ராவுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வந்து தன் பெற்றோரைப் பார்க்கவும், கல்வி பயிலவும் விசா அனுமதி கொடுக்கக வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டபோது, "நிச்சயமாக இதைக் கவனிக்கிறேன்" என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும், "உங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்" என்று பிரதமர் கூறியபோது, "எனக்கு எந்தப் பாதுகாப்பும் வேண்டாம் - நான் பொதுமக்களுடன் சாதாரணமாக நடமாடிக் கொண்டு இருப்பவன், உங்களுடைய பரிவுக்கு நன்றி" என்று வைகோ கூறினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் வைகோ, பிரதமரின் ஆலோசகர் திரு எம்.கே.நாராயணன் அவர்களைச் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் வைகோ, பிரதமரின் ஆலோசகர் திரு எம்.கே.நாராயணன் அவர்களைச் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்துப் பேசினார்.


தகவல் உதவி: தென் செய்தி மற்றும் நண்பர் உணர்வன்

Saturday, August 05, 2006

ஆர்யக்கூத்தில் அம்பேத்கார் - 4

திடீரென்று அம்பேத்கார் மீது பல இந்துத்வாவாதிகளுக்கு பாசம் பொத்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அம்பேத்காரே கூறிவிட்டார்.ஆரியர்கள் என்று யாரும் இல்லை என்று இவர்களில் சிலர் கூறி திரிகின்றனர். அப்படியானால் அம்பேத்கர் கூறிய அனைத்து கருத்துக்களையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள தயாரா என்று வாதம் கூட வேண்டாம். உண்மையில் அம்பேத்கர் கூறியது என்ன என்பதை பற்றி அ.மார்க்ஸ் எழுதுகிறார்.

1916 மே யில் கொலம்பியா பல்கலைக்கழகக் கருத்தரங்கத்தில் அம்பேத்கர் வாசித்த கட்டுரை அடுத்த ஆண்டு ‘இந்தியன் ஆன்டிகுயரி’ இதழில் வெளிவந்தது. ‘இந்தியாவில் சாதிகள்: தோற்றம், செயல்பாடு, வளர்ச்சி’ என்பது கட்டுரைத் தலைப்பு. ‘ஆரியப் படையெடுப்பு’ திராவிடர்களை அடிமைப்படுத்தியது, கீழ்ச் சாதிகளாக ஆக்கியது ஆகியவற்றை இதில் அவர் மறுக்கிறார். மேலை நாட்டவர்களின் சிந்தனை நிறக்கறை படிந்ததாக இருப்பதன் விளைவாக ‘சாதிப் பிரச்சினை’யின் வேர்களை இனத்தில் தேட நேர்ந்தது என்றார். சாதி என்பது சில அடிப்படையான நிகழ்வு அல்ல, அது ஒரு சமூக நிகழ்வு என்பது அம்பேத்கரின் கருத்து.1916 ம் ஆண்டு அம்பேத்கார் இந்து மதத்தில் இருந்தே மதத்தை சீர்ப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்ததாக நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.ஆனால் அது நிராசையானது.

பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட அம்பேத்கரின் முதிர்ச்சியடைந்த எழுத்துக்களில் ஒன்று "சூத்திரர்கள் யார்?’’ (1947). ஆரியப் படை எடுப்பு என்கிற கருத்தாக்கத்தை மறுப்பதில் அவருக்கு கருத்து மாற்றமில்லை என்ற போதிலும் சாதியின் தோற்றம் குறித்த அவரது பார்வையின் அழுத்தப் புள்ளி இப்போது இடம் பெயர்கிறது. வேதங்களை, குறிப்பாக ரிக் வேகத்தை ஆழமாக ஆய்வு செய்கிறார். புருஷ சுக்தத்தின் வருணங்களின் தோற்றம் குறித்த கதை (விராட் புருஷனின் வாயிலிருந்து பார்ப்பனன், தோளிலிருந்து சத்திரியன், தொடையிலிருந்து வைசியன், பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றியதாகச் சொல்லப்படும் புனைவு)யை மேலை வேதங்களில் மானுடத் தோற்றம் (ஆதாம் _ ஏவாள் கதை) குறித்த புனைவுகளில் ஒப்பிட்டு அவர் சொல்லுகிற கருத்துக்கள் மிக முக்கியமானவை. பிரபஞ்சத் தோற்றம் குறித்த மேலைக் கருத்தாக்கத்தில் (தனி) மனிதன் முக்கியம் பெறுகிறான். இங்கோ ஒரு குழுமம் (வருணம் / சாதி) அடிப்படை அலகாக இருக்கிறது.

"இந்தியச் சமூகத்தின் தீய அம்சங்களை ஒழித்து ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சமத்துவ அடிப்படையில் அதில் இடம் பிடித்துவிட முடியும் என நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன். இத்தகைய எண்ணத்தால் தூண்டப்பட்டதே மகத் சஹதார் குள சத்தியாக்கிரகமும் நாசிக் கோயில் நுழைவுச் சத்தியாக்கிரகமும். இதை மனதிற் கொண்டே மநு ஸ்மிருதியை எதிர்த்தோம். பெருந்திரளாகப் பூணூல் அணியும் நிகழ்வுகளை நடத்தினோம். அனுபவம் எனக்கு (இப்போது) நல்ல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. இந்துக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்ட பிரிவுவினருக்குச் சமத்துவம் சாத்தியமேயில்லை என்பதை நான் இப்போது முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளேன். ஏனெனில் அசமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்துச் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்து சமூகத்தின் அம்சமாகத் தொடர நாங்கள் விரும்பவில்லை.’’ என்கிறார்.

‘அரச கொலை அல்லது பார்ப்பனியத்தின் வெற்றி’ என்றும் கட்டுரையில் அம்பேத்கர் அவர்கள் பலாத்காரத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சியாக பார்ப்பன ஆட்சி உருவானதையும் மனுதர்மம் தொகுக்கப்பட்டு அது சட்ட நூலாக ஏற்கப்பட்டு வருண / சாதி அடிப்படையில் இங்கே ஆட்சி நடத்தப்பட்டதையும் விரிவாக விளக்குவார்.(38) பார்ப்பனீயம் குறித்த ஒரு முழுமையான விமர்சனக் கட்டுரை அது. இதில் ஒரு வரியையேனும் இவர்கள் மேற்கோளாக தம் நூலில் சுட்டிவிட முடியுமா?

1. ஆள்வதும் அரச கொலையும் பார்ப்பனிய உரிமை என்பதை நிலை நிறுத்தியது. 2. பார்ப்பனரைச் சிறப்புரிமை கொண்ட ஒரு வர்க்கமாக ஆக்கியது 3. வர்ணத்தைச் சாதியாக மாற்றியது. 4. பல்வேறு சாதிகளிடையே மோதல்களையும் சமூக எதிர்ப்புணர்வையும் தோற்றுவித்தது 5. சூத்திரரையும் பெண்களையும் இழிநிலைக்குத் தள்ளியது 6. படிநிலையிலான அசமத்துவ அமைப்பை உருவாக்கியது 7. மரபு ரீதியாகவும் நெகிழ்ச்சி கொண்டதாகவும் இருந்த சமூக அமைப்பை சட்ட வகையிலானதாகவும் இறுக்கமானதாகவும் ஆக்கியது(39). சாதி முறையை உருவாக்கியது பார்ப்பனரே என்பது இங்கே தெளிவாக்கப்படுகிறது. மேற்கண்ட பட்டியலில் 3 மற்றும் 6ஆவது செயல்கள் அதையே குறிக்கின்றன. நூலில் வேறுபல இடங்களிலும் "பார்ப்பனர்களின் லட்சியமும் நோக்கமும் சாதிய முறையை உருவாக்குவதே என்பதைக் காட்டிவிட்டன. கலப்பு மணம், கலந்துண்ணல் ஆகியவற்றிற்குப் பார்ப்பனியம் தடை விதித்தது(40) குறித்துப் பேசுகிறார். நெகிழ்ச்சியுடன் இருந்த வேதகால நால்வருணமுறை "பார்ப்பனர்கள் செய்த மாற்றத்தினால் கொடுந்தீங்காக மாறியது’’(41) குறித்தும் அம்பேத்கர் பேசுவார்.


ஆரிய இனம் என ஒன்று இல்லை என்றும், அவர்கள் படை எடுத்து வந்து தாசர்களை அடிமைப்படுத்தினர் என்பதும் தவறு என்றும் அம்பேத்கர் சொல்கிற கருத்து இன்று வரலாற்றுலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே. இரண்டும் முரண்படவில்லை. ஆனால் இதன் பொருள் ஆரியர் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதல்ல. படை எடுப்பு இல்லை எனச் சொல்வதிலிருந்து இம்முடிவைப் பெறுவது தர்க்கபூர்வமானதல்ல. அம்பேத்கர் அப்படிச் சொல்லவுமில்லை. இந்த விசயத்தில் அம்பேத்கரை இன்றைய வரலாற்றுலகிற்கு எதிராக நிறுத்துவது இயலாத காரியம்.

ஆக அம்பேத்காரை இன்று சாட்சிக்கு கொண்டு வந்து முன்னிறுத்தும் இவர்களின் முயற்சியும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பது அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்கிற அடிப்படையிலானதல்ல. தோற்றம் பற்றிய ஆய்வில் நாட்டமுடையவர்கள் இந்துத்துவவாதிகள் (பித்ருபூமி / புஸ்பபூமி). மண்ணின் மைந்தராக மற்றவர் என்கிற அரசியல் நோக்கம் நமக்கில்லை. பார்ப்பன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது வருணசாதி உருவாக்கத்திலும் நடைமுறையிலும் அவர்களின் பங்கை எதிர்ப்பதே. அண்ணல் அம்பேத்கர் இந்த அடிப்படையிலேயே பார்ப்பனியத்தை எதிர்க்கிறார்.


சிந்துவெளி நாகரிகமும் ரிக் வேதப் பண்பாடும் ஒன்றுதான் என நிரூபிக்க விழையும் இந்துத்துவ ஆய்வாளர்களின் மீது கீழ்க்கண்ட நிரூபணச் சுமைகள் உள்ளன.

1. இந்தோ_அய்ரோப்பிய மொழிகளின் தாயகம் இந்தியா என நிறுவ வேண்டும். இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு அது பரவியது என்றால் கிரேக்கம், லத்தீன், பழம் பெர்சியம் முதலானவற்றில் தாய்மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும். மொழியியலாளர்களில் கூற்றுப்படி சமஸ்கிருதம் மற்றவற்றின் சகோதர மொழியே ஒழிய தாய்மொழி அல்ல. ரிக்வேதத்தில் காலம் கி.மு.1200க்கு முந்தியதாக இருக்க இயலாது என்பதால் சிந்துவெளி மொழி சமஸ்கிருத்தின் முன்னோடி என நிரூபித்தாக வேண்டும். அதாவது பூர்வ இந்தோ ஈரோப்பிய மொழி என்று.


2. இந்தோ ஈரோப்பிய மொழிகளின் தாயகம் இந்தியாவெனில் இங்குள்ள திராவிட மொழிக் குடும்பத்தின் இருப்பையும் இரண்டிற்குமான உறவையும் அது விளக்கியாக வேண்டும். இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தில் இந்தோ ஆரிய சமஸ்கிருத மொழியில் மட்டுமே திராவிட மொழிகளைப் போல பின் விளைவியற் கூறுகள் உள்ளதையும் பிற இந்தோ அய்ரோப்பிய மொழிகளில் அது இல்லாமற் போனதையும் விளக்க வேண்டும். இங்கிருந்து பிற நாடுகளுக்கு சென்றிருந்தால் அங்கும் பின்விளைவியற் கூறுகள் இருந்திருக்க வேண்டும் என்பதால் இந்த விளக்கம் மிக அவசியமாகிறது.


3. ரதம், குதிரை ஆகியவை சிந்து வெளியில் புழக்கத்தில் இருந்ததை அய்யத்திற்கிடமின்றி நிறுவியாக வேண்டும்.

மேற்குறித்த அம்சங்களை நிறுவ முயலும் இந்துத்துவவாதிகள் ஏதோ சில சான்றுகளைக் காட்டி இப்படியும் வாசிக்கலாம் எனச் சொல்லலாம். இப்படி மட்டுமே அவற்றை வாசிக்க முடியும் என நிரூபித்தல் அவசியம். சிந்து வெளி முத்திரைகள் வாசிக்கப்படுவது பல பிரச்சினைகள் தீர உதவும். எகிப்திய மறை எழுத்துக்களைக் கண்டுபிடிக்க ரொசட்டா கல் வடிவில் இருமொழிப் பதிவுகள் கிடைத்ததைப் போல இங்கும் இரு மொழிகளின் பதிவு செய்யப்பட்ட முத்திரைகள் கிடைக்காத வரை இவற்றை வாசிக்க இயலும் எனத் தோன்றவில்லை.

மேற்குறிப்பிட்டவற்றில் முதலிரண்டு அம்சங்களில் இந்துத்துவ மாற்று வரலாற்று எழுதுபவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ரதம், குதிரை, முதலியன சிந்துவெளியில் இருந்தன என்பதை நிரூபித்துள்ளதாக மட்டுமே அவர்கள் உரிமை கோருகின்றனர். சிந்துவெளி முத்திரைகளை வாசித்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தத் துறைகளில் வல்லுனர்கள் இந்த கூற்றுகளை மறுப்பதோடன்றி இத்தகைய நிரூபன முயற்சிகள் அப்பட்டமான ஏமாற்று மோசடிகள் என்பதை நிறுவியுள்ளனர். அதைப்பற்றி அடுத்த பாகத்தில் காண்போம்.


http://keetru.com/anicha/Nov05/marx_9.html

வலைப்பதிவில் ஆர்யக்கூத்து -3

அறிவியல்ரீதியாக ஆரியர்கள் என்ற பிரிவே இல்லை என்று கூறும் இந்துத்வாவாதிகள் வேதங்களை மட்டும் நம்புவதை விட்டுவிட்டு இன்று அறிவியலையும் நம்புவது நல்ல முன்னேற்றம்தான் என்றாலும் அறிவியலை திரிப்பது கண்டிக்கப்படவேண்டிய போக்கு. ஆகவே இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று வஜ்ரா கூறிய புரட்டுக்களுக்கு சன்னாசி அவர்களின் கூறிய பதில்களை ஆவணப் படுத்தும் நோக்குடன் நாம் எழுதும் தொகுக்கும் தொடரின் மூன்றாம் பாகம் இது.

பாகம் 1

பாகம் 2

founder population உள்பட மற்ற கருத்துக்களைப்பற்றி வஜ்ராவின் பதிவில் சன்னாசி...

//இடப்பெயர்வு என்பதை நீங்கள் கற்பனைசெய்யும் / யூகிக்கும் / உங்கள் வாதங்களை முன்வைக்க உபயோகிக்கும் magnitude எவ்வளவு இருக்கமுடியும் என்பதைக்குறித்து, வெகு சிறு குழுக்கள் தற்காலத்தைய ஒரு புவியியல் வரையறைக்குள் அடங்கிய பிரதேசத்தின் genetic poolல் எவ்வளவு தூரம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கமுடியும் என்பது ரீதியிலான சாத்தியப்பாடுகளைக்குறித்து வெகு எளிமைப்படுத்தப்பட்ட ஒரு கோணத்தில் யோசிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. மேற்கண்ட உங்கள் ஆங்கில வாக்கியத்தில் குறிப்பிடப்படும் 'second migration' என்பது எந்த வரையறைக்குள் என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு புவியியல் ரீதியான தற்போதைய இந்தியா அமைந்திருக்கும் இந்தியத் துணைக்கண்டத்தில் n இடப்பெயர்வுகள் நிகழ்ந்திருப்பதாகக் கொண்டால், அந்த 'இந்தியா' வுக்குள் நிகழ்ந்துள்ள வெகு சமீபத்திய பெரும் இடப்பெயர்வு (மரபியல் ரீதியிலான) என்று இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளோரின் இடப்பெயர்வைக் குறிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் காணமுடியும் - முன்பு நான் குறிப்பிட்டிருந்த சில பிரசுரங்களிலேயே இதைக்குறித்து மேலும் விபரங்கள் உள்ளன - தேவைப்படின் மறுபடி முழுதாகப் படித்துப் பார்க்கவும். புவியியல் ரீதியிலான வரையறைகள் இல்லாத காலங்களில் நிகழ்ந்த மனித இடப்பெயர்வை அளக்க உதவும் அறிவியல் முடிவுகளைத் தற்காலப் (இந்தியக் கணக்கெனில் 1947 - இது நாட்டுக்கு நாடு வேறுபடுமென்று நான் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை) புவியியல் வரையறைக்குள் பொருத்திப் பொதுப்படையாக தீர்ப்புக்கூறுவது சரியில்லை என்பது என் அபிப்ராயம் - உங்களது பதிவிலும், பின்னூட்டங்களிலும் நீங்கள் செய்துள்ளது அதுவே என்றுதான் குறைந்தபட்சம் எனக்காவது படுகிறது. உதாரணத்துக்கு 'இந்தியா' என்று அப்போதிருந்து, குறைந்து பெருகித் தற்போதைய புவியியல் வரையறைக்குள்ளிருக்கும் பிரதேசத்தின் எந்தப் பகுதியிலும் கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பிருந்த காலங்களில் நடந்த கிரேக்கப் படையெடுப்புகளிலும், பிற்காலத்தில் இஸ்லாமியர்களின் படையெடுப்பிலும் அதன்பின்பு ஐரோப்பியப் படையெடுப்புக்களிலும் எந்தவிதமான இனக்கலப்பும் நடந்திருக்கமுடியாது - அப்படி இனக்கலப்புக்கள் நடக்காமல் உறுதியான வேலிகள் போட்டு மட்டுறுத்தப்பட்டிருக்கும் என்று நீங்கள் கூறுவதைப்போல இருக்கிறது இது - இது முற்றிலும் சாத்தியமற்ற ஒரு விஷயம் - இந்த ரீதியில் ஒரு பிரதேசத்தின் gene pool குறித்த ஆராய்ச்சிகளை அணுகுவது அறிவியல் ரீதியாக எந்த அடிப்படையும் இல்லாத ஒன்று. Haplotype blocks எனப்படும் அளவுகோல்கள் மூலமும் இவற்றை அணுகமுடியும் //

//ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேறிய மக்கள், அப்போதிருந்த ஆஃப்ரிக்க மக்களின் முழு மரபியல் கூற்றுக்களையும் எடுத்துச்செல்லவில்லை - அப்போது நிகழ்ந்த population bottleneck மூலம் வேறு பிரதேசங்களுக்குப் பெயர்ந்த மக்களின் தொகை மொத்த மக்கட்தொகையில் ஒரு சிறு பங்கு மட்டுமே என்பதால், அப்படி இடம்பெயர்ந்து உலகின் பிற பகுதிக்குப் பரவியவர்களது genetic diversity, ஆஃப்ரிக்காவில் மிஞ்சிய (தற்போதும் இருக்கும்) மக்களது genetic diversityயைவிடக் குறைந்ததாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டது, நிஜத்திலும் அப்படித்தான் இருக்கிறது என்பதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்திய gene poolல் இந்த ரீதியிலான ஆராய்ச்சிகள் பிற ஜனத்தொகைகளுடன் ஒப்பிட்டு பெருமளவு செய்யப்படவில்லை //

// ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேறித் தெற்கு ஆசியாவுக்கு ஜனத்தொகை வந்து, பின் பல திசைகளில் கிளைபரப்பியதாக நீங்கள் சொல்லும் ஒப்பன்ஹைமர் போன்றவர்கள் குறிப்பிடும் காலம் கிட்டத்தட்ட 50,000 வருடங்களுக்கு முற்பட்டது (உங்களது plesitocene குறித்து விளக்கும் விக்கிப்பீடியா சுட்டி உட்பட). இது தெரியாமல் அதிகபட்சமாக சென்ற நூற்றாண்டின் மத்திக்குச் சற்று முன்பாகத் தொடங்கிய 'திராவிட' என்ற கருத்தாக்கம் எதிர்க்கத்தொடங்கியது, பாலகங்காதர திலகர் போன்றவர்களும் முன்வைத்த 'ஆரியத் தாய்ப்பிரதேசம்' என்னும் நெகிழ்வான, பெரிதும் ஊகங்களின் அடிப்படையிலான கருத்தாக்கங்களின் அடிப்படையில்/அவை திரிக்கப்பட்டு, பிரதேசத்துக்கு ஏற்றமாதிரி வெவ்வேறு குழுவினரால் நிறுவப்பட முயற்சித்த மேலாண்மைக் கருத்தாக்கங்களை எதிர்க்க உருவானவை என்ற அளவிலே எடுத்தால், அறிவியலுக்கு இடமில்லை அங்கே. இதிலே 'ஆரியர்கள் 4,500 வருடம் முன்பு கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள்' என்ற வாதம் அடிபட்டுப் போகிறது என்று நீங்கள் 'அறிவியலை'த் துணைக்கழைக்கிறீர்கள் - அப்போது 50,000 வருடங்கள் முன்னால்தானே ஆஃப்ரிக்காவிலிருந்து ஜனத்தொகை இந்தியத் துணைக்கண்டத்துக்கு வந்ததாக நீங்களே துணைக்கழைக்கும் ஒப்பன்ஹைமர் போன்றவர்கள் சொல்கிறார்களே, மில்லியன் கணக்கில் வம்சாவழியினர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கும் தனிமனித/சிறு குழுவின் இனப்பெருக்க சாகசங்கள் போல 'ஆரியர்கள்' 4500 வருடங்களுக்கு முன்பு சாகசங்களை நிகழ்த்தியிருக்கக்கூடாதா, இதுவரை அது கண்டுபிடிக்கப்படாமலிருந்து, இனிமேல் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் இது அது என்று அறிவியலை ஒரு சாதாரண ஃபுட்பால் மாதிரி வைத்துக்கொண்டு திசையெல்லாம் உதைத்துக் குதர்க்கவாதம் பேசலாம் - இவ்வளவு தூரம் தலையை உடைத்துக்கொண்டு அவனவன் ஆராய்ச்சி செய்வதும், phrenology, eugenics என்று வெள்ளை இனமேலாண்மைவாதம் பேசித் திரிந்து, The Bell Curve என்று 'நடுநிலைமைவாத' ஆராய்ச்சியாளர்களால் அரைவேக்காட்டுத் தனமாய் எழுதப்பட்ட புத்தகங்களை சமகால அறிவியல் ஒரு larger pictureல் நிராகரித்து, சமூக நோக்கில் தனது முடிவுகளை எடுத்து வைத்துத் தன் திசையைச் சீர்படுத்த முயற்சிக்கும் இக்காலத்தில் தன்னிஷ்டத்துக்கேற்ப முடிவுகளை வளைத்தும் திரித்தும் விளையாடுவதுதான் ஒரே நோக்கம் என்றால் அது அவரவர் விருப்பம்//

// திரிக்கவேண்டுமெனில், இந்த population genetics ஆராய்ச்சிகள் simulations போன்றவற்றை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன, Natureக்கு அனுப்பவேண்டுமா அல்லது American Journal of Human Geneticsக்கு அனுப்பவேண்டுமா என்பதைப்பொறுத்து எந்தவிதமான FDR adjustment செய்யவேண்டும், sample size இருக்கவேண்டும் இன்னபிற என்பதையெல்லாம் வைத்தும், வெகு கீழிறங்கி வந்து impact factor-mania எவ்வளவு தூரம் பிடித்து ஆட்டுகிறது என்பது வரை குதர்க்கவாதம் பேசிக்கொண்டிருக்கலாம் - இல்லை இதையும் ஒரேயடியாய் hoax எனலாம், நீங்கள் சொன்னமாதிரி பெரும்பாலான மொழியியல் ஆராய்ச்சிகள் hoax என்பது உண்மையாய் இருந்தால் ;-). //

மேலும் வஜ்ராவின் "எல்லோருமே, பூர்வீகக் குடிகள் தான் என்பதைத் தான் இந்த புதிய ஆராய்ச்சி சொல்கிறது." என்ற கருத்துக்கு பதிலளிக்கும்போது

//Sharing a haplotype/genotype with other populations in the world doesn't mean that your forefather(s) and the other population's forefather(s) (don't get it mixed up with the primordial archetype here, we're talking about 'modern man' ;-)) are/were 100% genetically identical. Your conclusions imply such a notion, which is untrue. Read through it again, in case you haven't already. You can search for the definitions of a 'founder population', and try to answer my question in context. The answer is NO.

The present gene pool of India is not from a single founder population - there has been admixture at various levels at various times. If you refuse this, then what about the Muslims you're so caustic against? Do you mean that me, you, some Ahmed Rashid and Masthan Wali were created from the same founder population? Can you assure that there has been no admixture between the invading Muslims and Hindus? Of course we might share some haplotypes that indicate our ancestry, but that doesn't mean that we're 100% genetically identical. Founder population is not an 'Adam and Eve who created the whole world' kind of setup - I apologize in case I haven't made it clear (which I thought, did not need elaborate explanation) - if your arguments stem from that perspective, then we probably have to humongously backpedal to apes and beyond. If it ultimately boils down to 'all of us humans came out of Africa, let's settle at that - why are we arguing then?'//

//Furthermore, this specific distribution of mtDNA varieties in India compared with the distribution observed among Mongoloids and the Caucasoid populations of western Eurasia (Figure 1) is, at present, best explained by two separate late Pleistocene migrations of modern humans to India. One of them, possibly arriving by the Southern route, brought to India an ancestral population carrying haplogroup M and was spread further eastward. The second migration brought the ancestors of haplogroup U. Although the admixture of these major waves started perhaps very early - explaining the spread of these major mtDNA varieties all over the subcontinent - it is likely that it happened after the carriers of haplogroup M found their way further east, explaining the absence of haplogroup U lineages among Mongoloid populations studied so far. //

கார்னர் செய்யப்பட்ட வஜ்ரா இப்படி முடிக்கிறார். "There is no proof with Genetics that at 1500 BC there was a genetic admixture of any kind....."

நாமும் அதைத்தான் சொல்கிறோம்."There is no proof with genetics that at 1500 BC there was not a genetic admixture of any kind...."

அறிவியல் இல்லாத கருத்தாக சன்னாசி கூறும் இவ்விஷயமும் குறிப்பிடத் தக்கது.

//திராவிடர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் மரபியல் ரீதியாக எதையும் நிரூபித்து (குறைந்தபட்சம் நிரூபிக்க முயன்று ஆரியர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களும் அக்கருத்தாக்கம் தொடங்கிய காலகட்டத்தில் மரபியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால், அதையும் இங்கே சொல்லிவிடலாம் ;-)) நீங்கள் குறிப்பிடும் 'ஆரிய எதிர்ப்பை'த் தொடங்கவில்லை, 'பிரித்தாளும் சதி'யைத் தூண்டவில்லை. 'ஆரிய' என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பிரிவினரின் குறிப்பிட்ட சில வழிமுறைகளை அங்கீகரிக்க விரும்பாத சமூக எதிர்வினையின் அடையாளமாகத்தான் 'திராவிட' என்னும் அடையைப் பார்க்க முடிகிறது //


நாம் முன்னமே கூறியது போல இதுபோன்ற விஷயங்களில் மொழியியல ஆய்வு, சமூகவியல் ஆய்வு, தொல்லியல் ஆய்வு, வரலாற்று ஆய்வு இத்தனை விஷயங்களை வைத்து வரவேண்டிய முடிவுக்கு வெறும் ஜல்லியடி முடிவை வைத்து எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை.

இந்துத்வாவாதிகளை நாம் கண்டிப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அது மிகவும் முக்கியமானது. இவ்வாறு அறிவியல் ஜல்லியை அடிக்கும்போது இலைமறைக்காயாக இவர்கள் தமிழையும் தமிழின் பெருமையையும் குலைத்துவிட்டு போவார்கள்.சம்ஸ்கிருதம் தான் தமிழைவிட உயர்ந்தது என்ற கருத்தை நுணுக்கமாக இவர்கள் செய்வதன் நோக்கம் ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

கடந்த பாகத்தில் தமிழின் தொன்மையைப்பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.இப்போது ஐராவதம் மகாதேவன் கட்டுரையில் இருந்து கொஞ்சம்....

இந்திய நாட்டில் இலக்கிய வளமும் தொன்மையும் உள்ள மொழிகள் இரண்டே தான்: சம்ஸ்கிருதமும் தமிழும். ஆகையால்தான் மத்திய அரசின் அண்மை அறிவிப்பு இவ்விரு இந்திய மொழிகளை மட்டுமே செவ்வியல் மொழிகளென அங்கீகரித்துள்ளது. இவற்றுள் சம்ஸ்கிருதம் வேத காலத்திலிருந்தும், தமிழ் சங்க காலத்திலிருந்தும் நமக்குக் கிடைத்துள்ளதால், சம்ஸ்கிருதம் தமிழைவிடப் பழமையானது என்று இன்று கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் பொதுவான ஒரு கருத்து உலக அறிஞர்களிடையே நிலவுகின்றது.

ஆயினும் வேதங்களிலேயே திராவிட மொழிச் சொற்கள் காணப்படுவதாலும், இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இன்றும் திராவிட மொழிகள் (ப்ராகூய், குருக், மால்தோ) பேசப்பட்டு வருவதாலும், சிந்துவெளிப் பண்பாடு திராவிட மக்களால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை உலகின் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதாலும், திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் இந்தியாவின் மிகத் தொன்மையான முதல் செவ்வியல் மொழி என்ற பெருமைக்கு உரித்தாகிறது.

இனி குதிரையை வைத்து இவர்கள் ஆடிய கூத்தையும் அ.மார்க்ஸ் அவர்கள் கட்டுரையில் இருந்து சில தகவல்களையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)