<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-28310446</id><updated>2012-01-25T16:32:15.424+05:30</updated><category term='பார்ப்பனியம்'/><category term='இடஒதுக்கீடு'/><category term='வேம்புலியம்மன்'/><category term='ஞானி'/><category term='reservation'/><category term='தமிழும்'/><category term='Rama'/><category term='பெரியார்'/><category term='arivumathi'/><category term='ராமர்'/><category term='ஹாய் மதன்'/><category term='Seetha'/><category term='பெரியார் திரைக்காவியம்'/><category term='பார்ப்பன வாத்தியார்கள்'/><category term='periyar'/><category term='திராவிடமும் தமிழும்'/><category term='பெரியார் பிறந்த நாள்'/><category term='கொளத்தூர் மணி'/><category term='kolathur Mani'/><category term='தமிழரும்'/><category term='சீதை'/><title type='text'>திராவிட தமிழர்கள் வலைத்தளம்</title><subtitle type='html'>தமிழ் மொழியின் மீதுள்ள பற்றும் தமிழ் சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையும் எங்களை இணைத்துள்ளது</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>திராவிட தமிழர்கள்</name><uri>http://www.blogger.com/profile/01449620850052649523</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>97</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-3398356880059391387</id><published>2007-10-02T16:59:00.001+05:30</published><updated>2007-10-02T17:04:00.967+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Rama'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Seetha'/><title type='text'>சீதைக்கு இராமன் சித்தப்பனா? அண்ணனா? கணவனா?</title><content type='html'>வால்மீகர் இராமாயணத்தை வடமொழியில் செய்தார். இன்று, வடமொழியில் காணப்படும் இராமாயணம் வால்மீகியால் செய்யப்பட்டதன்று ! என்பது, ஆராய்ச்சி அறிஞர் கருத்து. முன் இருந்த இராமாயணம் பல கூட்டல், கழித்தல், திருத்தல்களோடு புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறதென்பதை எவரும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கமுடியாது ! என, c.v.வைத்தியா கூறியுள்ளார். &lt;strong&gt;(The Riddle of Ramayana p. 7)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கி.மு.1000 வரையிலான காலத்தில் இராமாயணக்கதை வழங்கியிருக்குமேயானால், அது வடநாடு தொடர்புடைய கதையாயிருக்குமே யன்றித் தென்னாடு தொடர்புடைய கதையாக இருக்க முடியாது! காரணம், கி.மு.1000 க்கு முன் ஆரியர் விந்திய மலைக்குத் தெற்கே வரவில்லை. அவர்கள், விந்தியதுக்குத் தெற்கிலுள்ள நாடுகளைப் பற்றி அறியவுமில்லை! என்பது, வரலாற்றாசிரியர்கள் கொண்டுள்ள முடிவு .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தசரத சாதகம்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கௌதம புத்தர் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் விளங்கினார். அவர் காலத்தோ அதற்குச் சிறிது முன்போ புத்தரின் பழம் பிறப்புகளைக் கூறும் சாதகக் கதைகள் எழுந்தன. அக்கதைகளுள் ஒன்றாகிய "தசரத சாதகத்தில்" "இராம கதை " பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;'முன்னொரு காலத்தில் வாரணவாசியில் தசரதன் என்னும் அரசன் வாழ்ந்தான். அவனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்களுள் பட்டத்துத் தேவி இரு குமாரர்களையும் ஒரு குமாரத்தியையும் பெற்றாள். மூத்த குமாரன் இராமன், இரண்டாம் குமாரன் இலக்குமணன்; புதல்வி சீதை. பின்பு அரசி இறந்து போனாள் . அவள் இறந்ததும் தசரதன் இன்னோருத்தியை மணந்தான். அவன் அவளிடத்தில் மிக மயங்கியிருந்தான். அவள் வயிற்றில் ஒரு மகன் பிறந்தான் . அவனுக்குப் பரதன் என்று பெயர். மகன் மீது கொண்ட பற்றினால் அரசன் பட்டத்துத்தேவியை ஒரு வரம் கேட்குமாறு கூறினான். அவள் தான் வேண்டும் போது வரத்தைக் கேட்டுக் கொள்வதாகக் கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பரதனுக்கு எட்டு வயதாயிற்று. அப்போது அவள் அரசனிடம் முன் கொடுப்பதாகக் கூறிய வரத்தின்படி இராச்சியத்தைத் தன் மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டாள் . அரசன் கையை உதறி, "நாயே எனது அழகிய இரண்டு மக்களையும் கொன்றுவிட்டு இராச்சியத்தை உன் மகனுக்குக் கொடுக்கும்படி கேட்கிறாயா?" என்றான். அவள் அரசனின் கோபமான சொற்களைக் கேட்டுப் பேசாது அறையினுள் சென்றாள். அவள் தினமும் அரசனை அடைந்து நாட்டை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டு வந்தாள் . அவன், "பெண்கள் தீயவர்கள்; இவள் பொய்யான கடிதம் எழுதி அல்லது எவருக்காவது கைக்கூலி கொடுத்து என் புதல்வர்களைக் கொன்று விடுவாள் " என்று தனக்குள்ளே நினைத்தான். அவன் தன் புதல்வர்களை அழைத்து, "நீங்கள் இங்கிருந்தால் உங்களுக்குப் பல் துன்பன்கள் நேரும்; நீங்கள் அடுத்த இராச்சியத்துக்கு அல்லது காட்டுக்குச் செல்லுங்கள்; எனது மரணக்கிரியை நடக்கும்போது வந்து இராச்சியத்தைக் கைப்பற்ரிக் கொள்ளுங்கள் " என்று சொன்னான். அவன் சோதிடரை அழைத்தான்; தனக்கு இன்னும் எவ்வளவு கால வாழ்நாள் இருக்கிறது? என்று பார்க்கும்படி சொன்னான். அவர்கள் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துவரும்படி அரசன் தன் புதல்வர்களுக்குச் சொன்னான் . "நானும் எனது சகோதரர்களுடன் செல்லப் போகிறேன்" என்று சீதை சொன்னாள். பலர் பின் தொடர மூவரும் நாட்டுக்கு வெளியே சென்றார்கள். அவர்கள் உடன் வந்தவர்களைப் போகும் படிச் சொல்லிவிட்டு ஹமவந்தா என்னும் காட்டை அடைந்தார்கள். அங்கே இலைகளால் வேய்ந்த குடிசை ஒன்றை அமைத்தார்கள். இராமனைக் குடிசையில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு இலக்குமணனும் சீதையும் பழங்கள் கொண்டுவர வெளியே சென்றார்கள். அன்று முதல் இராமன் குடிசையில் இருந்தான்; மற்ர இருவர் பழங்களைக் கொண்டு வந்தார்கள். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தசரதன் மக்களைப் பிரிந்த கவலையினால் ஒன்பதாவது ஆண்டில் மரணமானான் . ஈமக்கிரியை முடிந்ததும் "எனது குமாரனுக்கு முடி சூட்டுங்கள்" என்று அரசி மந்திரிமாரிடம் சொன்னாள். அவர்கள் அதற்கு இணங்கவில்லை . பரதன் இராமனைக் காட்டிலிருந்து அழைத்துவருவதாகக் கூறி நால்வகைச் சேனைகளுடன் புறப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இலக்குமணனும் சீதையும் பழம் பறிக்க வெளியே சென்றிருந்தனர். பரதன் இராமனைக் கண்டான். அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தந்தையின் மரணத்தை கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராமன் கவலை கொள்லவும் இல்லை. அழவும் இல்லை. பரதன் அழுதுகொண்டிருந்தான். அப்போது மற்றவர்களும் வந்தார்கள். தந்தையின் மரணத்தைக் கேட்டு மயங்கி விழுந்தார்கள். பரதன் இராமனை நோக்கி ' நீர் அழாமல் உறுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன?" என்றான் . "மனிதனால் ஆகாத ஒன்றிற்காகப் புலம்புவதால் பயனில்லை. பழுத்தப் பழம் எப்பொழுதாவது நிலத்தில் விழுந்துவிடும். பிறந்தவர்கள் எல்லாரும்&lt;br /&gt;ஒரு நாளைக்கு இறந்துவிடுவர்" என்று இராமன் சொன்னான். இதைக் கேட்டு மற்ரவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். பரதன் இராமனை வணங்கி , வாரணவாசியை ஆளும்படி இராமனைக் கேட்டான். "இலக்குமணனையும் சீதையையும் அழைத்துச் சென்று நீயே ஆட்சி செய்! எனது தந்தை பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படிக் கட்டளையிட்டார் . இப்போது வந்தால், நான் தந்தையின் கட்டளையைக் கடந்தவனாவேன். நான் இன்னும் மூன்று ஆண்டுகளின் பின் வருவேன்" என்றான். " அவ்வளவு காலமும் யார் ஆட்சி புரிவார்?" என்று பரதன் கேட்டான். இராமன் " எனது மிதியடிகள் ஆட்சி புரியும்" என்று சொல்லித் தனது புல்லால் முடைந்த மிதியடிகளை அவனிடம் தந்தான். மிதியடிகளை எடுத்துக் கொண்டு மூவரும் வாரணவாசிக்குச் சென்றனர். மந்திரிமார்கள் மிதியடிகளை சிங்காசனத்தின் மீது வத்து ஆட்சி செய்தனர். மூன்று ஆண்டுகள் கழிந்தன. இராமன் காட்டினின்றும் வந்தான் அவன் பதினாறாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் . பின்னர் வானுலகம் அடைந்தான்." என்று, தசரத சாதகம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வரலாற்றில் இராவணன் சீதையைக் கவர்ந்ததைப் பற்றியோ இராம இராவணப் போர்களைப் பற்றியோ யாதும் கூறப்படவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் : &lt;strong&gt;&lt;a href="http://thamizmandram.blogspot.com/"&gt;இரவா&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-3398356880059391387?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/3398356880059391387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=3398356880059391387' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/3398356880059391387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/3398356880059391387'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/10/blog-post.html' title='சீதைக்கு இராமன் சித்தப்பனா? அண்ணனா? கணவனா?'/><author><name>திராவிட தமிழர்கள்</name><uri>http://www.blogger.com/profile/01449620850052649523</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-222225147678755778</id><published>2007-09-17T09:24:00.000+05:30</published><updated>2007-09-17T09:31:25.847+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='periyar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார் பிறந்த நாள்'/><title type='text'>பெரியாரைப் பிழையாமை வேண்டும்</title><content type='html'>&lt;a href="http://www.tn.gov.in/tamiltngov/memorial/periyar.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.tn.gov.in/tamiltngov/memorial/periyar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெரியாரைப் பிழையாமை வேண்டும்&lt;/strong&gt;&lt;br /&gt;தங்க தட்டில் கசடை தந்தால்&lt;br /&gt;தட்டு தங்கமென கசடை&lt;br /&gt;தின்பதாகுமோ கண் மூடி ?&lt;br /&gt;&lt;br /&gt;புராண புழுதி புளுகு மூட்டைகள்&lt;br /&gt;புனுகு பூசி புரண்டு வந்தாலும்&lt;br /&gt;புனுகிற்காக புசிக்க இயலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;கவைக்குதவா கற்பனை கதைக்கும்&lt;br /&gt;காலத்திற்கேற்ப மாறா சிந்தனைக்குமே&lt;br /&gt;காட்டுமிராண்டி மொழியென்றாரே!!&lt;br /&gt;&lt;br /&gt;கற்பிலிருந்து கண்ணகி வரை&lt;br /&gt;குறளிலிருந்து காப்பியம் வரை&lt;br /&gt;காலம் பொருள் சூழல் கண்டே&lt;br /&gt;காண வேண்டும் பொருளதனை&lt;br /&gt;பெரியாரைப் பிழையாமை வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன எதிர்ப்பே&lt;br /&gt;பார்ப்பனீய தத்துவ எதிர்ப்பே&lt;br /&gt;தவிர்த்த ஆளெதிர்ப்பில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆளடிக்க சொல்லவில்லையே&lt;br /&gt;ஆள் பேசும் பார்ப்பனீய&lt;br /&gt;தத்துவமடிக்க தலைப்பட்டாரே!&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவமடிப்பதை விட்டு&lt;br /&gt;ஆளடிக்க தலைப்பட்டதெனில்&lt;br /&gt;தந்தை பெரியாரே தட்டி கேட்பாரே&lt;br /&gt;பெரியாரைப் பிழையாமை வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் பிறந்த நாளில்&lt;br /&gt;சூளுறைப்போம்&lt;br /&gt;தந்தை பெரியாரைப்&lt;br /&gt;பிழையாமை வேண்டுமென்றே!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dravidatamils.blogspot.com/2006/09/blog-post_17.html"&gt;நீ மனிதன் தான்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீ மனிதன் தான்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வர்ணாசிரமத்தின்&lt;br /&gt;வயிற்றில் அடித்த&lt;br /&gt;நீ மனிதன் தான் !&lt;br /&gt;&lt;br /&gt;வர்ணாசிரமத்தின்&lt;br /&gt;வலிக்கேற்ப&lt;br /&gt;அடித்தவன்&lt;br /&gt;அடியானாகவோ&lt;br /&gt;அவதாரமாகவோ&lt;br /&gt;ஆக்கப்படுவான்!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தன் அவதாரமானான் !&lt;br /&gt;நந்தன் அடியாரானான் !&lt;br /&gt;நீ மனிதன் தான்&lt;br /&gt;அவதாரமாக்கவோ&lt;br /&gt;அடியாராக்கவோ&lt;br /&gt;விடமாட்டோம் உம்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தன் அவதாரமானான்&lt;br /&gt;அவன் கொள்கைகள்&lt;br /&gt;அவதாரங்களுக்கானதானது&lt;br /&gt;&lt;br /&gt;நந்தன் அடியாரானான்&lt;br /&gt;அவன் செயல்கள்&lt;br /&gt;அடியார்களுக்கானதானது&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சமிருப்பது&lt;br /&gt;நீ தான்&lt;br /&gt;&lt;br /&gt;நீ மனிதனாகவே இரு&lt;br /&gt;உன் கொள்கைகள்&lt;br /&gt;மனிதர்களுக்காகட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நீ மனிதனாகவே இரு&lt;br /&gt;உன் வாழ்க்கை&lt;br /&gt;மனித வாழ்க்கையாகட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நீ மனிதனாகவே இரு&lt;br /&gt;உன் செயல்கள்&lt;br /&gt;மனித செயல்களாகட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;உம்மை அவதாரமாக்க&lt;br /&gt;விடமாட்டோம்&lt;br /&gt;ஏனெனில் நீ&lt;br /&gt;மனிதர்களுக்கு தேவை&lt;br /&gt;&lt;br /&gt;உம்மை அடியாராக்க&lt;br /&gt;விடமாட்டோம்&lt;br /&gt;ஏனெனில் நீ&lt;br /&gt;மனிதர்களுக்கு தேவை&lt;br /&gt;&lt;br /&gt;உம்மை அசாதரணமானவனாக்க&lt;br /&gt;விடமாட்டோம்&lt;br /&gt;ஏனெனில் நீ&lt;br /&gt;சாதாரணமானவர்களுக்கு தேவை&lt;br /&gt;&lt;br /&gt;உம் பிறந்தநாளில்&lt;br /&gt;உரக்க சொல்கிறோம்&lt;br /&gt;நீ மனிதன் தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-222225147678755778?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/222225147678755778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=222225147678755778' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/222225147678755778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/222225147678755778'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/09/blog-post.html' title='பெரியாரைப் பிழையாமை வேண்டும்'/><author><name>திராவிட தமிழர்கள்</name><uri>http://www.blogger.com/profile/01449620850052649523</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-3843311458618902327</id><published>2007-08-27T10:55:00.000+05:30</published><updated>2007-08-27T10:58:14.003+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பனியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பன வாத்தியார்கள்'/><title type='text'>பார்ப்பன வாத்தியார்கள் - 4 (இறுதிப் பகுதி)</title><content type='html'>&lt;a href="http://dravidatamils.blogspot.com/2007/08/1.html"&gt;முதல் பாகம் வாசிக்க இங்கே சுட்டுங்கள்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dravidatamils.blogspot.com/2007/08/2.html"&gt;இரண்டாம் பாகம் வாசிக்க இங்கே சுட்டுங்கள்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dravidatamils.blogspot.com/2007/08/3.html"&gt;மூன்றாம் பாகம் வாசிக்க இங்கே சுட்டுங்கள்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாவலர் அறிவுமதி தொடர்கிறார்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹாய் மதன் கேள்விபதில் பகுதியில் இது கேள்வி...&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் காதலித்திருக்கிறாராமே?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மதனின் பதில்...&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியோடு வாழ்வதற்கே நேரமில்லாத பாரதிக்குக் காதலியா? எல்லாம் பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிலைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். பாரதியார் தம் சுயசரிதையிலேயே தம் பிள்ளைப் பிராயத்துக் காதலைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறரர். அவரது வரிகளையே ஆதாரமாகக் கொண்டு இந்தத் தவறான பதிலை மதனிடம் கூறி திருத்தி வெளிடுங்கள். ஒரு மகாகவியின் வரலாற்றில் பல இலட்சம் வாசகர்களுக்கு ஒரு பிழையைப் பதிவு செய்வது தவறு என்று மடல் எழுதி அனுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன் அந்தப் பிழையைத் திருத்த முன் வரவில்லை. அடுத்த வாரம் மதனுக்குத் தொலைபேசி செய்து "பதினோரு வயது பாரதி ஒன்பது வயது பெண்ணைக் காதலித்திருப்பதாக சுயசரிதையில் கூறியுள்ளார். எனவே, தங்கள் தவறான பதிலுக்குத் திருத்தம் வெளியிடுங்கள். அதுதான் நாகரிகம்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வயசுக்கு வராத பெண்ணை பாரதி காதலித்திருக்கிறானா?" இதுதான் மதன் என்னிடம் கேட்ட கேள்வி. மதன் கேள்வி பதில் ஆனந்த விகடனின் வியாபாரத்திற்கான ஒரு பகுதி. மதனின் மீதான வாசகர்களின் நம்பகத்தன்மை குறைதல் கூடாது என்பதற்காகவே ஒரு மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை மறைக்கத் துடிக்கிறது ஆனந்த விகடன்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆனந்த விகடனில்தான் ஞாநி அறிந்தும் அறியாமலும் என்ற பாலியல் மருத்துவ அறிவியல் தொடரை எழுதுகிறார். இந்தத் தொடரை வெளியிடும் தகுதி ஆனந்த விகடனுக்கு இல்லை என்பது எம் கருத்து. நோயுற்ற பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் மருத்துவரிடம் போகவேண்டுமே தவிர விபச்சாரத் தரகனிடம் அழைத்துப் போக வேண்டிய அவசியமில்லை. ஆனந்த விகடன் தமிழ்ச் சமுகத்தைச் சீரழிக்கத் துடிக்கிற விபச்சாரத் தரகுவேலையை பார்க்கிறது என்பதற்கு இதோ இந்தக் குறுங்கதையே எடுத்துக்காட்டு. 27.6.2007 ஆனந்த விகடனில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"வா" என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஊகூம்" என்றாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வா" என்றான் மீண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வா" என்றான் திரும்பவும்.&lt;br /&gt;&lt;br /&gt;"தப்பு" என்று முறைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகும் "வா" என்று இழுத்தான்,&lt;br /&gt;&lt;br /&gt;"போடா" என்று அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘வ’ பக்கத்துல ‘¡’ போட்டிருந்தா தான் ‘வா’ன்னு இழுக்கணும், இது 'வ' என்று பொறுமையாக அந்த சிறுவனுக்குத் தமிழ்ப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினாள் அந்த மிஸ்! ஒரு சிறுவனுக்கு ஒரு தமிழாசிரியை தமிழ் சொல்லிக் கொடுக்கும் காட்சியை வைத்தே இவ்வளவு வக்கிரமாக காம இச்சையைத் தூண்டி தமிழர்களிடம் காசு பார்க்கத் துடிக்கிற ஆனந்த விகடனா தமிழ்ச் சிறுவர்களுக்குப் பாலியல் கல்வியை நடத்தும் காகிதப் பள்ளிக் கூடமாக விளங்கப்&lt;br /&gt;போகிறது. நம்புகிறீர்களா தமிழர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன் நமக்கு.. நம் தமிழர்களுக்கு ஏதேனும் செய்யுமென்று நம்புகிறீர்களா? இதோ 9.06.2007இல் ஆனந்த விகடனில் வந்த நகைச்சுவைகளைப் படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது"&lt;br /&gt;&lt;br /&gt;“தெரிஞ்சதும் என்ன பண்ணினே?”&lt;br /&gt;&lt;br /&gt;"கலாவை வேலைய விட்டு நிறுத்திட்டேன்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நம்மோட கள்ளத் தொடர்பு தெரிஞ்சுட்டதால். உன்னை வேலையைவிட்டு நிறுத்தப் போறா என் மனைவி!"&lt;br /&gt;&lt;br /&gt;"கவலைப்படாதீங்க எஜமான். உங்களுக்கு வெளியில இருந்து ஆதரவு தர்றேன்!"&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர் ஞாநி அவர்களே! உங்கள் வீட்டிற்கு வந்து பண்டம் பாத்திரம் கழுவி, உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அறைகளைக் கூட்டிப் பெருக்கி - அதிலிருந்து வருகிற வருமானத்தில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாக்களைப் பற்றி இவ்வளவு கேவலமாக அறிமுகப்படுத்துகிற ஆனந்த விகடனிலா எங்கள் பிள்ளைகள் பாலியல் அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt; தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் எங்களையெல்லாம் படியுங்கள் படியுங்கள் என்று போராடிப் படிக்க வைத்ததெல்லாம் இப்படி நீங்கள் எங்கள் தாய்மார்களைப் பற்றி கேவலமாக எழுவதைப் படிக்கத் தானா ஞாநி!&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லி ஓ போட வைக்கிற ஞாநியே! இப்படி சமூக பொறுப்பற்ற முறையில் பெண்களைக் கேவலப்படுத்தி பெண்களின் அரை நிர்வாணப் படங்களைப் போட்டு, படிக்கும் தமிழர்களின் காம இச்சையை வக்கிரமாகத் தூண்டிவிட்டு பணம் பறிக்கும் ஆனந்த விகடன் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான பச்சை மன்னிக்கவும். நீல வியாபாரத் தந்திரமே உங்களின் இந்தப் பாலியல் அறிவியல் மருத்துவத் தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை.. அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத் துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல... மானுட அறநெறிகளுக்கும் விரோதமானது."&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி... 4.7.2007 ஆனந்த விகடனில் சொல்லியிருப்பது வேறு யாருமென்று.. பத்திரிகையாளர் ஞாநி அவர்களே. ஞாநி அவர்களே! இதே கருத்து தங்களுக்கும் பொருந்தும் இல்லையா! பாலியல் அறிவியல் தொடர் எழுதுவதற்கான மருத்துவக் கல்வியைத் தாங்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுள்ளீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் எழுதும் பாலியல் அறிவியல் கருத்துகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்.. மருத்துவப் பட்டம் பெறாத தாங்கள் சொல்வதை நம்பி எப்படி தெளிவு பெறுவது? மருத்துவத் துறையின் அறநெறிகளுக்கும் மானுட அறநெறிகளுக்கும் இது மட்டும் விரோதமாகாதா? ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளும்.. ஞாநி போன்ற பத்திரிகையாளர்களும்.. திரைப்பட, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களிடம் மட்டும்.. பாலியல் சார்ந்த காமத்தை வக்கிர உணர்ச்சியாக வைத்து வணிகம் செய்வதற்கான காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt; ஒரே காரணம்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;கணவனும் மனைவியும்.. தனித்துப் படுக்க ஒரு வீடு கிடைக்காத, ஓர் அறை கிடைக்காத குந்தக் குடிசையில்லாத.. புறம்போக்குகளாய்ப் பெரும்பகுதித் தமிழர்கள் வாழவேண்டியிருப்பதன் சோகம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். இதற்கான அரசியல் விழிப்புணர்வு பெற்று எம் தமிழ் இளைஞர்கள் சமூகப் போராளிகளாக மாறிவிடக்கூடாது.. என்றும் இவர்கள் இரசிகர் மன்ற உறுப்பினர்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. இவர்கள் இந்த மூன்றாம் பால் வியாபாரத்தை நம்மிடம் மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால்.... ரஜினி குறித்து எழுதுகிற ஆனந்த விகடன், ‘சினிமா ஓகே. அரசியல்?’ என்று எழுதுமா?(4.06.2007)&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் தமிழ்நாட்டை தமிழர்களே ஆளக்கூடாதா? நீங்கள்தான் அதிகார மய்யமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நடிகர்கள்தான் ஆளவேண்டுமா? அரசியலுக்கு ரஜினியை அழைக்கிற ஆனந்த விகடனே.. பல்கலைக் கழகம் கட்டி... பள்ளிகள் கட்டி.. ஏழைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்க.. எடுக்கப்பட்ட சிவாஜி படத்தில் நடித்த ரஜினி அவர்களின் பணத்தில் (அதாவது அவரது உயிருக்குயிரான எம் தமிழ்ச் செல்வங்கள் கொடுத்த பணத்தில்) கட்டப்பட்ட.. 'ஆஸ்ரம்’ பள்ளியில் இலவசக் கல்விபெறும் மாணவர்களின் பட்டியலை.. அல்லது எந்தெந்த ரஜினி ரசிகர் மன்ற பிள்ளைகள் படிக்கிறார்கள் என்கிற பட்டியலை.. அல்லது ஒரு குழந்தைக்கான ஓர் ஆண்டு கட்டணம் எவ்வளவு என்கிற பட்டியலையாவது ஆனந்த விகடன் கேட்டு வெளியிட்டுவிட்டு .. அவரை அரசியலுக்கு அழைக்குமா? இது என்ன ஆனந்த விகடன் ஆசையா? இல்லை அக்ரகாரத்து ஆசையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிப் பிழைத்தது போதாதா?&lt;br /&gt;&lt;br /&gt;விடுங்கடா சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி: நமது தமிழ்மண், சூலை 2007 இதழ்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-3843311458618902327?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/3843311458618902327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=3843311458618902327' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/3843311458618902327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/3843311458618902327'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/08/4.html' title='பார்ப்பன வாத்தியார்கள் - 4 (இறுதிப் பகுதி)'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-5125352773591687398</id><published>2007-08-23T10:25:00.000+05:30</published><updated>2007-08-23T11:20:28.100+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='arivumathi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹாய் மதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பன வாத்தியார்கள்'/><title type='text'>பார்ப்பன வாத்தியார்கள் - 3</title><content type='html'>&lt;a href="http://dravidatamils.blogspot.com/2007/08/1.html"&gt;முதல் பாகம் வாசிக்க இங்கே சுட்டுங்கள்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dravidatamils.blogspot.com/2007/08/2.html"&gt;இரண்டாம் பாகம் வாசிக்க இங்கே சுட்டுங்கள்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாவலர் அறிவுமதி தொடர்கிறார்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இன்னொரு அறிவியல் மேதை ஹாய் மதனிடம்... மல்லிகை மன்னன், மதுரை-17 என்ற நபரிடமிருந்து ஒரு கேள்வி...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rWQ2exQuCDU/Rs0USWZ9fKI/AAAAAAAAAAU/L2jj81cn3ng/s1600-h/madhancf7.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5101756258365308066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_rWQ2exQuCDU/Rs0USWZ9fKI/AAAAAAAAAAU/L2jj81cn3ng/s400/madhancf7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களுக்கு மட்டும் காம உணர்ச்சி கடைசி வரையிலும் குறையாமல் இருப்பதன் மர்மம் என்ன? இப்படிக் காமம் தொடர்பான கேள்விகளுக்குக் கிளுகிளுப்பான பதில்களாக நூலகங்களில் திருடித் திருடி எழுதுகிற மதன்... ஒருமுறை இறையன்பு கேட்ட. "வந்தார்கள் வென்றார்கள் எழுதியது போல சோழப் பேரரசுவின் பின்புலத்தில் ஒரு வரலாற்று நாவல் எழுதினால் என்ன?" என்ற கேள்விக்கு, "தமிழர்களுக்கென்று ஏதடா வரலாறு...?" என்று எகத்தாளமாகப் பதில் சொன்னவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடற்ற வந்தேறியாகிய இவரிடம் மிகப்பெரும் தமிழுணர்வாளரே தமிழர்களின் கருத்துருவாக்கச் சிந்தனையாளனாய் ஏற்றுக்கொண்டு கேட்ட கேள்விக்குக் கிடைத்த மரியாதையிது. தன் இனமக்களை ஊருக்குத் தள்ளிய புறம்போக்குச் சேரிகளில் வாழவைத்துவிட்டு எங்கிருந்தோ ஏய்க்க வந்த நாய்களையெல்லாம் வரவேற்று அழகழகாய் மாடமாளிகைகள் கட்டிக் கொடுத்து பிரம்மதேயங்களாய் ஆயிரமாயிரம் காணி நிலங்களை எழுதிக் கொடுத்து உழைக்கத் தேவையில்லையென்று உட்கார வைத்தே சாப்பிட வைத்த சோழ மன்னர்களுக்கு இவர்கள் காட்டுகிற நன்றியைப் பார்த்தீர்களா? ஆனால் இதற்காக மதனுக்குக் கிடைத்த மரியாதையை varalaru.com கண்டு மகிழ்க...&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவாக இருந்தாலும் மதனாக இருந்தாலும் ஞாநியாக இருந்தாலும்.. இவர்களை பயன்படுத்திக் கொண்டு ஆனந்த விகடன் தமிழர்களிடம் வணிகம் செய்து வயிறு கழுவுகிறதே தவிர, சமூகப் பொறுப்புணர்வோடு தமிழர்களுக்கென்று எந்த ஒரு நல்ல நோக்கத்திலும் பயன்பட நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைத் தமிழர்களிடம் நம்பகத்தனமான அறிவாளிகளாகக் காட்டி... அதன் வாயிலாகத் தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை, விழுமியத்தை, அரசியலை அழிப்பதே.. இடறி விடுவதே.. ஆனந்த விகடனின் சூழ்ச்சிப் பணியாக இருந்து வருகிறது. கம்பராமயணத்தை.. மகாபாரதத்தை அழகுத் தமிழில் வாலியை விட்டுத் தொடர்களாக எழுதி மகிழ்ந்த ஆனந்த விகடன் திருக்குறளை மட்டும் சென்னைத் தமிழில் எழுதி இழிவுபடுத்தியது (இதையே பகவத் கீதையை நகர தலித் மொழியில் நாம் எழுதியிருந்தால் என்ன துள்ளு துள்ளியிருப்பார்கள்!)&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை என்கிற பெயரில் தமிழர்களின் புறநானூற்றை 'முறநானூறு' என்று எழுதி மகிழ்கிறது ஆனந்த விகடன். மன்னர்கால நகைச்சுவைத் துணுக்குகள் என்கிற பெயரில் தமிழர்களின் மூளைகளில் இவர்கள் செய்ய நினைக்கிற தொழிற்பாடுகளும்.. தமிழர்களின் வீரமரபை இழிவு செய்கிற செயலும்...புரியாமலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, தமிழினம் மேம்படக் கூடாது என்கிற உள்நோக்கில் செயல்படும் ஆனந்த விகடன் பார்ப்பனர்களைப் பாதுகாப்பதில் மட்டும் விழிப்புணர்வோடு இருக்கிறது என்பதில் எனக்கு நேர்ந்த அனுபவமே சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி: நமது தமிழ்மண், சூலை 2007 இதழ்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-5125352773591687398?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/5125352773591687398/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=5125352773591687398' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5125352773591687398'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5125352773591687398'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/08/3.html' title='பார்ப்பன வாத்தியார்கள் - 3'/><author><name>திராவிட தமிழர்கள்</name><uri>http://www.blogger.com/profile/01449620850052649523</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rWQ2exQuCDU/Rs0USWZ9fKI/AAAAAAAAAAU/L2jj81cn3ng/s72-c/madhancf7.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-3120890364033426048</id><published>2007-08-20T11:29:00.000+05:30</published><updated>2007-08-23T10:14:35.741+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானி'/><title type='text'>ஓசை செல்லாவுக்கு "நச்"சுன்னு ஒரு பதில்!</title><content type='html'>நம் திராவிடத் தமிழர்கள் வலைப்பூவில் பாவலர் அறிவுமதி அவர்களின் பார்ப்பன வாத்தியார்கள் தொடர் வெளிவந்திருப்பது தெரிந்ததே. தொடரின் முதல் பகுதியை கண்டதுமே வழக்கம்போல கண்டனங்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் ஓசை செல்லா ஒரு படி மேலே போய் "லக்கிக்கு" கண்டனம் என்றொரு பதிவிட்டிருக்கிறார். அவர் கண்டனம் தெரிவிக்க வேண்டியது பாவலர் அறிவுமதிக்கு. எனக்கல்ல. கண்டனம் யாருக்கு தெரிவிப்பது என்பதிலேயே குழம்பிப் போய் நண்பர் அவசரப்பட்டு அபத்தமாக ஒரு பதிவை வீணடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இணையக் குழுமத்தில் அக்கட்டுரை தடை செய்யப்பட்ட பின்பே, பல திராவிட அன்பர்கள் நமக்கு மின்னஞ்சலிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு நம் வலைப்பூவில் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆயினும் இத்தொடரை திராவிடத் தமிழர்களில் பதிக்கலாமா? என்ற குழப்பம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. எனவே பொறுப்பாளர்களில் ஒருவரை தொடர்புகொண்டு ஆலோசனை செய்த பின்பே பதிந்திருக்கிறேன். அக்கட்டுரை எங்களுக்கு உடன்பாடானதாக தோன்றியதாலேயே நம் வலைப்பூவில் வந்திருக்கிறது. தொடர்புடைய குழுமத்தில் இக்கட்டுரைக்கு ஏற்பட்ட தடை, பேரறிஞர் அண்ணாவின் "ஆரிய மாயை"க்கு இடப்பட்ட தடையை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஓசை செல்லா அக்கட்டுரையை திரும்பவும் ஒரு முறை தெளிவாகப் படித்தல் நன்று. ஞாநி பாலியல் குறித்து எழுதக்கூடாது என்று பாவலர் எங்கேயும் அக்கட்டுரையில் தடையெல்லாம் போடவில்லை. பாலியல் குறித்த கட்டுரையையோ, சிறுகதையையோ அல்லது வேறு ஏதேனும் இலக்கியக் கூறிலோ ஞாநி எழுதுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் "பாலியல் கல்வித் தொடர்" என்று விளம்பரப்படுத்தப்பட்டு எழுதுவதே இங்கே விமர்சிக்கப் படுகிறது. மருத்துவர் ஒருவரின் மகன் மருத்துவராகாமலேயே அறுவைச் சிகிச்சை செய்ததுக்கு ஒப்பானதாகவே அதை பாவலர் குறிப்பிடுகிறார். அவரது கூற்றில் என்ன தவறு? மருத்துவர் மாத்ரூபூதம், மருத்துவர் ஆஷா, மருத்துவர் நாராயணரெட்டி, மருத்துவர் ஷாலினி போன்றவர்கள் வெகுஜன ஊடகங்களில் பாலியல் கல்வி தொடர்கள் எழுதியபோது அறிவுமதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அப்பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் ஞாநி பார்ப்பனராக இல்லாதிருக்கும் பட்சத்தில், இதுபோன்ற விமர்சனங்கள் ஞானி மீது வந்திருக்குமா? என்கிற ரீதியில் (செந்தமிழில்) வந்துகொண்டிருக்கின்றன. நாம் மேலே குறிப்பிட்ட மருத்துவர்கள் பலரும் பார்ப்பனர்கள் தான். அதற்காக அவர்கள் மீது பாய்ந்தோமா?&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சிகளிலும் இதர வெகுஜன ஊடகங்களிலும் சரியான மருத்துவப் பயிற்சியோ, கல்வியோ இன்றி பாலியல் கல்வித் தொடர் நடத்தி தங்கள் மருத்துவசாலைகளுக்கு விளம்பரம் தேடும் போலி மருத்துவர்களுக்கு இணையாகவே ஞாநியை எங்களால் இவ்விவகாரத்தில் காண முடிகிறது. ஞாநி ஒரு மருத்துவர் அல்லாத பட்சத்தில் இத்தொடர் சரியானது தானா? என்பதை நாம் எப்படி நம்ப முடியும்? பல லட்சம் பேர் படிக்கும் ஒரு வெகுஜன ஊடகத்தில் தவறான ஒரு கருத்தை இவர் அறிந்தோ, அறியாமலோ சொல்லிவிட்டால் அதை திரும்பப் பெறுவது எளிதா? &lt;br /&gt;&lt;br /&gt;- இக்கருத்துக்களை ஓசை செல்லா மட்டுமல்லாமல் அனைவருமே ஒரு கணம் சிந்தித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-3120890364033426048?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/3120890364033426048/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=3120890364033426048' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/3120890364033426048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/3120890364033426048'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/08/blog-post_20.html' title='ஓசை செல்லாவுக்கு &quot;நச்&quot;சுன்னு ஒரு பதில்!'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-8650825634602011329</id><published>2007-08-20T10:40:00.000+05:30</published><updated>2007-08-20T10:46:02.075+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பன வாத்தியார்கள்'/><title type='text'>பார்ப்பன வாத்தியார்கள் - 2</title><content type='html'>&lt;a href="http://dravidatamils.blogspot.com/2007/08/1.html"&gt;முதல் பாகம் வாசிக்க இங்கே சுட்டுங்கள்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாவலர் அறிவுமதி தொடர்கிறார்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் எழுத்துகளையும், கேள்வி பதில்களையும் படித்துப் படித்து வியப்புற்ற தமிழர்கள் சுஜாதாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். சங்க இலக்கியங்களான புறநானூறு, குறுந்தொகைக்கெல்லாம் உரையெழுதியதைப் பார்த்து மிகச் சிறந்த தமிழ்மேதையென்று மதிப்பும் வைத்தார்கள் (புறநானூறுக்கு அவர் எழுதிய உரையில் இருந்த அடிப்படையான தவறுகளை ஆதாரத்துடன் 'இந்தியா டுடே' இதழ் மூலம் பேராசிரியர்கள் இருவர் சுட்டிக் காட்டியும், இன்றுவரை அதற்கு எந்த விடையும் சொல்லாமல் பதுங்கிக் கொண்டது வேறு விசயம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RskjfHR_DNI/AAAAAAAAADo/iaQEzbuq8_o/s1600-h/sujatha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RskjfHR_DNI/AAAAAAAAADo/iaQEzbuq8_o/s400/sujatha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5100647070411197650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புறநானூற்றுக்கு உரையெழுதிய இந்த தமிழ்மேதைதான் 'சிவாஜி’' படத்திற்கு வசனகர்த்தா! அந்தப் படத்தில் ஒரு காட்சி எழுதிக் கொடுத்திருக்கிறார் இந்த மேதை! அங்கவை, சங்கவை பாரி மகளிராக அறியப்பட்ட பெயர்கள். இந்தப் பெயர்கள் கொண்ட, இயல்பாக இருக்கிற தமிழ்ப் பெண்களின் முகங்களில், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மணிரத்னம் போரளிகள் முகத்தில் பூசிவிட்டதைப் போல... இராமாயணத்தில் அரக்கர்கள் என்றது போல, கரியைப் பூசி தமிழ் படித்த கேணையன் சாலமன் பாப்பையா வாயால்... "வாங்க எங்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, வந்து பழகுங்க.. புடிச்சிருந்தா கட்டிக்கிங்க.. புடிக்கலன்னா பிரண்ட்சா வச்சிக்கிங்க" என்று பேச வைத்திருக்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியரை வைத்தே தமிழ்ப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்திருக்கிறார் சுஜாதா!&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தமிழ்ப் பெண்கள் எங்கே கிடைப்பார்கள் என்பதற்கு, ‘எல்லா தமிழ்ப் பெண்களும் கால்சென்டருக்குப் போய்விட்டார்கள். ஒண்ணு ரெண்டு கோயில்ல இல்லன்னா.... யாழ்ப்பாணத்துல...’ என்றும் எழுதியிருக்கிறார் சுஜாதா. வேலைக்குப் போகிற பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பெரியவாள் சொன்ன குரலை சுஜாதாவின் குரல் அப்படியே எதிரொலிக்கிறதா இல்லையா? படித்த தமிழ்ப் பெண்களையெல்லாம் இப்படிக் கேவலப்படுத்தி எழுதியுள்ள சுஜாதாவைப் பற்றி... இந்த உரையாடலைப் பயன்படுத்திய இயக்குநரைப் பற்றி, நடிகர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து விட்டு வருகிற தமிழர்களைப் பற்றி என்ன சொல்வது!&lt;br /&gt;&lt;br /&gt;'யாழ்ப்பாணம்' என்ற சொல்லை முன்பொருமுறை மணிரத்னம் தனது படத்திலும் பயன்படுத்தியிருந்தார். வருகிற ஒருவரை எங்கிருந்து வர்ற என்று கேட்க, தெற்கே என்று சொல்ல... யாழ்ப்பாணத்திலிருந்தா.. என்று கேட்பான், தமிழ்நாட்டில் நடக்கும் கதையில்! இந்தப் படத்திலும் அப்படியே.. ஊறுகாய் போல 'யாழ்ப்பாணம்' பயன்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்து எம்தமிழ் உறவுகள் படுகிற வேதனை குறித்து இந்த சுஜாதாவிற்கு என்ன கவலை இருக்கப் போகிறது? அங்கே வயதுக்கு வந்த பெண்களை... பையன்களை வைத்துக் கொண்டிருக்கிற தாய்களின் வலிகுறித்து இந்த ஆளுக்குத் தெரியுமா? வெள்ளை வண்டி சோகம் புரியுமா? 'யாழ்ப்பாணம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் கடின உழைப்பு ஊதியத்தை ஏமாற்றிப் பிடுங்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும். (சிங்களவர்களை விட தம் வாழ்விற்கு இவர்கள் மிக மோசமான எதிரிகள் என்கிற உண்மையை உணராமல், எம் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் தமிழர்களுக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த மிக மோசமான படத்தைப் பார்க்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு வலிக்கிறது. ஆனாலும், சுவிசின் துர்க்கா வாழ் தமிழ் உறவுகள் ஒட்டுமொத்தமாக இதனை நிராகரித்திருப்பது ஆறுதலாக இருக்கிறது).&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... 'வாங்க வந்து வடைய தட்டுங்க...' என்று தொலைக்காட்சி புகழ் உமாவிற்கு வசனம் கொடுத்திருக்கிறார் சுஜாதா. அறிவுள்ள அந்தப் பெண் இந்த உரையாடலைக் கூச்சமின்றி பேசிக் கொடுத்திருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;'ஆதி' என்று சொல்லி இன்னொரு சொல்லைச் சொல்லப் போக, விவேக்கின் வாயை ரஜினி மூட, கபோதி என்று சொல்ல வந்தேன் என்று வசனம் எழுதியிருக்கிறார் சுஜாதா! இதையே இந்தியன் படத்திலும் 'ரெண்டெழுத்துக் கொழுப்பு’ என்றும் 'கேணக்கூ'....என்றும் எழுதி ஒரு பெரிய நடிகரின் வாயால் உச்சரிக்க வைத்தவர்தான் இந்த சுஜாதா!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உறுப்பு வழியாகத்தானே சுஜாதா அவரது மரியாதைக்குரிய அம்மாவின் வயிற்றிலிருந்து உலகிற்கு வந்தார்! இந்த உரையாடலை எழுதியவர்.... வாயை அடைத்தவர்... இயக்கியவர் இவர்களும் இதன் வழியாகத்தானே உலகிற்கு வந்தார்கள்! அந்த உறுப்பு அவ்வளவு கேவலமானதா? கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா?&lt;br /&gt;&lt;br /&gt;ரவுண்டு ரவுண்டா நா ஒண்ணுக்கு உடுறேம்பாரு... அப்படி நீ உடுவியா என்று ஒரு சிறுவன் சிறுமியிடம் கேட்பதாக எழுதிய சுஜாதாதான் இன்று ஆனந்த விகடனில் கற்றதும் பெற்றதும் எழுதுகிற அறிவியல் மேதை! குங்குமம் இதழில் இவர் கூறுகிறார்... தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள் இல்லையென்று! 'கட்டுமரம்' என்கிற சொல்லையே - உலகத்திற்குக் கொடுத்த தமிழர்களுக்குக் கடல் வணிகம் தெரியாதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி: நமது தமிழ்மண், சூலை 2007 இதழ்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-8650825634602011329?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/8650825634602011329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=8650825634602011329' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/8650825634602011329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/8650825634602011329'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/08/2.html' title='பார்ப்பன வாத்தியார்கள் - 2'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RskjfHR_DNI/AAAAAAAAADo/iaQEzbuq8_o/s72-c/sujatha.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-8583560558616886141</id><published>2007-08-17T13:22:00.000+05:30</published><updated>2007-08-17T13:26:59.232+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பன வாத்தியார்கள்'/><title type='text'>பார்ப்பன வாத்தியார்கள் - 1</title><content type='html'>&lt;strong&gt;பாவலர் அறிவுமதி எழுதுகிறார் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. முதன் முதலாக எப்போது நீங்கள் இதைப் பார்த்தது என்று கேள்விகள் கேட்டு வந்த பத்திரிகையாளர் ஞாநி... கடைசியாக ஆண் - பெண் உறுப்புகளின் படங்கள் வரைந்து பாகங்கள் குறித்து விலாவாரியாக எழுதலாமா என்று கேட்டு.. ஆறுகோடித் தமிழர்களும் அதற்கு அங்கீகாரம் அளித்து விட்டதாகவும்.. இனி துணிந்து பாலியல் குறித்துப் பக்கம் பக்கமாக ஆனந்த விகடனில் எழுதப் போவதாகவும் ஏகப்பட்ட குஷியில் அறிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RsVUu3R_DJI/AAAAAAAAADI/Os3gEuWD-0o/s1600-h/vikatan_gnani.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RsVUu3R_DJI/AAAAAAAAADI/Os3gEuWD-0o/s400/vikatan_gnani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5099575317157055634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அரசியல் விமர்சனங்கள் எழுத பத்திரிகையாளர் ஞாநிக்குத் தகுதியுண்டு. பாலியல் சார்ந்த சிறுகதைகள், புதினங்கள் எழுதவும் தகுதியுண்டு. ஆனால், மருத்துவர்களாகிய பெற்றோர்களின் மகன் மகப்பேறு பார்த்தது எவ்விதம் பிழையோ அவ்விதமே பாலியல் கல்வி குறித்தத் தொடர் எழுதுதல் ஞாநிக்குப் பிழை என்பதை ஞாநியும் உணர வேண்டும். நாமும் உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாநி அடிப்படையில் பாலியல் மருத்துவம் படித்த வல்லுநரன்று. பாலியல் நூல்களைப் படித்து அல்லது பாலியல் மருத்துவர்களிடம் கேட்டுக் கேட்டு எழுதப் போகிற தொடர்தான் இந்தப் பாலியல் மருத்துவத் தொடர். இந்தத் தொடரில் அவரது பணி, மொழி பெயர்ப்பாளர் அல்லது நேர்காணல் செய்பவர் என்கிற அளவில் மட்டுமே பயன்படப் போகிறது. அப்படியானால் இந்தப் பாலியல் தெளிவுகளுக்கான அறிவுக்குச் சொந்தக்காரர்கள் வேறு நபர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அடுத்தவர் உழைப்பை, அடுத்தவர் அறிவைத் திருடிப் பிழைக்கும் வகையறாக்களே ஞாநியின் வகையறாக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படிப்பட்ட ஈனப் பிழைப்பை நடத்தி வருகிறவர்கள்தாம் இவர்கள். ஏரோட்டியவர்களின் கால்களில் கட்டிய சலங்கை பத்மா சுப்ரமணியத்திற்குப் பல பட்டங்களைப் பெற்றுக் கொடுத்த உண்மையை... நாற்று நட்ட தாய்கள் பாடிய இராகங்கள் பாம்பே ஜெயஸ்ரீக்குப் பட்டம் பெற்றுக் கொடுத்த உண்மையை... உணர்ந்தவர்களுக்குத் தான் நான் சொல்கிற உண்மை புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இசையை, நடனத்தைத் திருடியவர்கள் இன்று அடுத்தவர்களின் அறிவியல் உழைப்பையும் திருடிப் பிழைப்பு நடத்துவதின் அடையாளமே ஞாநியின் அறிந்தும் அறியாமலும், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், மதனின் ஹாய் மதனும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையறாக்களின் கைகளில் இருக்கும் அறிவுக் குழந்தைகளின் அப்பா அம்மாக்கள் யார் யாரோ. இவர்கள் பல நூலகங்களில் திருடி வந்த குழந்தைகளை விற்கும் அசிங்கத் திருடர்கள், அருவருப்புத் திருடர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடைய பணி இந்தத் திருட்டு வேலைகளோடு நின்றுவிடவில்லை. இவர்களுடைய இந்த எழுத்துகளைப் படிக்கும் தமிழர்களிடையே இவர்கள் மிகச் சிறந்த பத்திரிகையாளர்களாக, பாராட்டுக்குரிய அறிவியல் அறிஞர்களாக, "இவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற கருத்துருவாக்க மனிதர்களாக...." இவர்கள் மாறுகிற இடத்தில்தான் தமிழகத்திற்கான ஆபத்துகள் தொடங்குகின்றன. தேர்தல் நேரத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு தொலைக்காட்சிகளில் அமர்வது போன்ற ஆபத்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி: நமது தமிழ்மண், சூலை 2007 இதழ்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-8583560558616886141?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/8583560558616886141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=8583560558616886141' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/8583560558616886141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/8583560558616886141'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/08/1.html' title='பார்ப்பன வாத்தியார்கள் - 1'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RsVUu3R_DJI/AAAAAAAAADI/Os3gEuWD-0o/s72-c/vikatan_gnani.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-4452741966134163903</id><published>2007-08-09T11:34:00.000+05:30</published><updated>2007-08-09T12:02:14.667+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடஒதுக்கீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kolathur Mani'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொளத்தூர் மணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='reservation'/><title type='text'>இடஒதுக்கீடும் நீதிமன்றங்களும் - கொளத்தூர் மணி</title><content type='html'>இடஒதுக்கீடும் நீதிமன்றங்களும் என்ற தலைப்பில்  கொளத்தூர் மணி அவர்கள் பண்ருட்டியில் ஆற்றிய உரை இடஒதுக்கீடு தொடர்பான கட்டுரைகளில் மிக முக்கியமானது, இடஒதுக்கீடு என்கிற சமூக நீதிக்கு எதிராக எப்படியெல்லாம் 'மனு' நீதிமன்றங்கள் நடந்து கொள்கின்றன என்பதையும் க்ரீமிலேயர், என இடஒதுக்கீடு தொடர்பான அத்தனை நியாயங்களையும் எடுத்து விளக்கியுள்ளார். இந்த ஒரு பேச்சே இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் அத்தனை விதண்டாவாதங்களுக்கும் பதிலாக இருக்கின்றது. இடஒதுக்கீடு தொடர்பாக இதை ஒரு முக்கிய ஆவணமாக கருதுவதால் சேகரிக்கின்றோம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடஒதுக்கீடும் நீதிமன்றங்களும் - கொளத்தூர் மணி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சிந்தனையாளர் பேரவையின் சார்பாக இந்தக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிற சிந்தனையாளர் பேரவையின் தலைவர் மதிப்பிற்குரிய தோழர் இராஜமாணிக்கம் அவர்களே, இங்கு திரையிடப்பட்ட 'கலகக்காரர் தோழர் பெரியார்' என்ற ஒரு அருங்காவியத்தைப் படைத்து, எழுதி, நடித்து, இயக்கி இன்று 'சிந்தனையாளர் விருதை'யும் பெற்று அமர்ந்திருக்கிற தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய நாடகத்துறைப் பேராசிரியர் தோழர் மு. இராமசாமி அவர்களே, இங்கு பல்வேறு செய்திகளைப் பகிர்ந்துகொண்டு எழுச்சியூட்டி அமர்ந்திருக்கின்ற பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தோழர் வேல்முருகன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்கள் விழித்துப் பேசிய அருமைப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கடந்துவிட்டது என்றாலும், சில செய்திகளைப் பகிர்ந்துகொள்கிற வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள் என்பதால் குறுகிய நேரத்தில் உங்களோடு சில செய்திகளை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இட ஒதுக்கீடு, அதற்கு வந்திருக்கின்ற இடைகாலத் தடை, இதை விவரிக்கப் போகும் முன்னால் இட ஒதுக்கீடு என்பதை நாம் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை முதலில் விளக்கியாக வேண்டும். இட ஒதுக்கீடு இப்பொழுது அரசுப்பணிகளுக்கு மட்டும் இருக்கிறது, அதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது ஒரு வறுமை ஒழிக்கும் திட்டமும் அல்ல; வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிற திட்டமும் அல்ல. இருக்கிற வேலைகளுக்கு இருக்கிற இடங்களைப் பகிர்ந்துகொள்கிற ஒரு ஏற்பாடு. அதற்கு முன்னால் அது வகுப்புவாரி உரிமையாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமாகத் (proportional representation) தான் இருந்தது. தமிழ்நாட்டில் நூறு இடங்களும் பகிர்ந்து வழங்கப்பட்டன. இதற்கு நமக்கு எண்பது ஆண்டு வரலாறு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் 1920-ஆம் ஆண்டிலிருந்து இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அதற்கும் முன் கோல்ஹாப்பூர் போன்ற சிற்றரசுகள் 1902-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தினார்கள். மைசூர் சிற்றரசும் 1921-யில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் பிரிட்டீஷ் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான், சென்னை மாகாணத்தில் தான் அந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. நடைமுறைக்கு வந்த அந்த இட ஒதுக்கீடு, சென்னை மாகாண அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு சென்னை மாகாண அரசில் இருக்கிற பணிகளுக்கு, கல்வி நிலையங்களுக்கு மட்டுமில்லை, பெரியார் போன்ற புரட்சியாளர்களின் போரட்டத்தின் காரணமாக அது விரிவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்த மத்திய அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீடு இருந்தது. 1934-ஆம் ஆண்டு இதற்கான ஒரு சிறப்புச் சட்டம்&lt;br /&gt;நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீடு சட்டமென்று மத்திய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி சென்னை மாகாணத்தில் மட்டும் சென்னை மாகாணத்திலிருந்த பணிகளில் கூட அஞ்சல் நிலையங்களில், அப்பொழுதிருந்த இம்பீரியல் வங்கியில், அப்பொழுது தனியார் இயக்கிவந்த தென்னிந்திய இரயில்வே, தென் மராத்தா இரயில்வே, 1944-யில் அரசுடைமையான பின்னால் அதில், எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த இட ஒதுக்கீடு விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட ஆகஸ்டு 15, 1947க்குப் பின் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை, சென்னை மாகாணத்தில் மட்டும் கொடுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை செப்டம்பர் 30-ஆம் நாள் இரத்து செய்துவிட்டார்கள். ஒன்றரை மாதம் தான் அவர்களால் பொறுத்துகொள்ள முடிந்தது. விடுதலை வந்தது யாருக்காக என்று பெரியார் சொல்வார்: வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பன கொள்ளைக்காரனுக்கு made over செய்யப்பட்டது என்று சொல்வார். அவனால் விடுதலை பெற்ற ஒன்றரை மாதத்தில், நமக்குக் கொடுத்து வந்த இட ஒதுக்கீடுகளை மத்திய அரசில் கொடுத்து வந்த இட&lt;br /&gt;ஒதுக்கீடுகளை அவன் இரத்து செய்தான். உள்துறை இரத்து செய்தது, இரயில்வே துறை இரத்து செய்தது, எல்லோரும் இரத்து செய்தார்கள், ஒரே நாளில். இப்படிப்பட்ட இட ஒதுக்கீடு மத்திய அரசில், மத்திய அரசு சட்டத்தைக் கொண்டு வந்தது, விரைவாகப் பேச வேண்டியதுள்ளது, அரசியல் சட்டம் எழுதப்பட்டது. அரசியல் சட்டத்தில் சில&lt;br /&gt;விதிகளைச் செய்தார்கள். பாதுகாப்புக் கொடுப்பதற்காக, பல்வேறு விதிகள் செய்யப்பட்டன. 16 என்ற விதி வேலை வாய்ப்புகளுக்காக, 46 அதிலே (weaker section) நலிவடைந்த பிரிவினர் அவர்களுடைய மேம்பாட்டிற்காக, எனப் பல சட்டங்களைச் செய்தார்கள். ஆனால் அந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டை உறுதிசெய்தது. சட்டத்தில் எழுதி வைத்தார்கள், சிறப்பு ஒதுக்கீடு செய்யலாம் என்று. 16(4) என்ற விதி சொன்னது: எந்தச் சமுதாயப் பிரிவினருக்கு அரசுப்பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று அரசு கருதுகிறதோ அவர்களுக்கு சிறப்பு உதவி செய்யலாம் என்று சொன்னார்கள். அதில் போடப்பட்ட சொற்கள் "பேக்வேர்ட் கிளாஸ்" என்று சொன்னார்கள். அந்த சொல் தான் தாழ்த்தப்பட்டோரை, பழங்குடியினரை எல்லோரையும் குறித்தது. ஆனால் அதில் இன்னொன்று சொன்னார்கள், அரசு விவாததில் இருக்கிறது, அரசியல் சட்டம் எழுதப்பட்ட பொழுது அதில் போடப்பட்ட வார்த்தை 'in the opinion of the government' என்று தான் சொன்னார்கள் அதை. அரசின் பார்வையில் எந்தெந்தச் சமுதாயத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதுகிறதோ அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யலாம் என்பது தான் அந்தச் சட்டப் பிரிவு சொன்னது. இது அரசியல் நிர்ணய சபையில் விவாதம் வந்த போது கூட கேட்டார்கள், யார் இந்த பேக்வேர்ட் கிளாஸ் என்று கேட்டால், அதற்கு அம்பேத்கார் சொன்னார், 'in the opinion of the government' - அரசு யாரைக் கருதுகிறதோ என்று பதில் சொன்னார் - அது பதிவாகியிருக்கிறது. இப்பொழுது எதையெதையோ சொல்லியெல்லாம் அரசியல் நிர்ணய சபை வாதித்தை சொல்கிறார்கள். ஆனால் 'in the opinion of the government' என்பதை விட்டுவிட்டார்கள். சரி, இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் இருந்தது. ஆனால் கல்வியில் வழங்கப்படவில்லை. நம்முடைய அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது; அறிமுகப்படுத்தப்பட்ட போது வேலை வாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு அதற்கான பிரிவுகள் இருந்ததே தவிற கல்விக்கு எவ்வித ஒதுக்கீடும் இல்லாத காலம் இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டில் இங்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று சொல்லி ஒரு பெண் தொடர்ந்த வழக்கு நம் தமிழ்நாட்டு 'கம்யூனல் ஜீ.ஓ' என்ற வகுப்புவாரி ஆணையை இரத்து செய்தது. அது நீண்ட கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழக்கைப் போட்ட செண்பகம் துரைராஜ்- நீதிமன்றம் நமக்கு எப்படியெல்லாம் தடையாக இருக்கிறது என்பதைச் சொல்லவேண்டும். உயர்நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு செல்லாது என்று சொன்னார்கள். உச்சநீதிமன்றத்திற்குப் போனது அரசு. பெரியார் சொன்னார்: "அசலே அநியாயம் அப்பீல்ல அதே காயம், அப்படித்தான் ஆகப்போகுது, உச்சநீதிமன்றத்தில் போனால் என்ன ஆகும் என்று சொன்னார்".&lt;br /&gt;ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இந்த செண்பகம் துரைராஜ் என்ற பெண் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை என்பதைக் கண்டுபிடித்தார்கள். வழக்கே நான் பார்ப்பனத்தி என்பதால் தான் எனக்கு இடம் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிற இடஒதுக்கீட்டுக் கொள்கை தடைசெய்துவிட்டது என்று வழக்கு போட்டிருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்திற்குப்&lt;br /&gt;போனபின்னல்தான் தெரிந்தது, அந்தப்பெண் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை. சரி போடமுடியவில்லை, போடுகிற வயதையும் தாண்டியவர், 34 வயதானவர் அவர். விண்ணப்பிக்கிற வயதைக் கடந்துவிட்டவர் அவர். விண்ணப்பம் போடலாம் என்றாவது பழைய தேதி போடலாம் என்றால் போடவே முடியாது. விண்ணப்பிக்கிற தகுதியில்லாத பெண் விண்ணப்பிக்காத இடத்திற்காகப் போடப்பட்ட வழக்கில் தான் இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதற்குப்பின்னால் நடந்த போராட்டம் அந்தச் சட்டத்திருத்தத்தை ஜவகர்லால் நேரு அவர்கள் முன்மொழிகிறபோது கூட அவர் சொன்னார் சட்டத்திருத்தாம் ஏன் வருகிறது என்று சொல்லவேண்டும், அறிமுக உரையாற்றவேண்டும், ஆற்றுகிறபோது அவர் சொன்னார், சென்னை மாகாணத்தில் நடந்த நிகழ்வுகள் நம்மை சட்டத்திருத்தைச்&lt;br /&gt;செய்ய வலியுறுத்துகிறது என்று சொன்னார். அவர் சொன்னது ' . . . . in madras province' என்று தான் சொன்னார். அதன் காரணமாக சட்டத்திருத்தம் என்றுதான் சொன்னார். சட்டத்திருத்தம் வந்தது. அதில் போடப்பட்ட சொல்தான் அரசியல் சட்டம் 14-யில் 'பிற்படுத்தப்பட்டவர்கள்' என்று மட்டும் இருக்கிறது போதுமான 'backward classes not adequately representated' என்றுதான் 14(4) சொல்கிறது. ஆனால் 15(4) என்கிற ஒரு புதுப்பிரிவு சேர்க்கப்பட்டது, அந்தப்பிரிவு கல்விக்காக அதை சொல்கிறபோது சொற்களைப்போட்டார்கள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சொல் அந்த சட்டதிருத்தத்தில் தான் வந்தது (socially and educationally backward). அப்போதும் சிலபேர் சட்டத்திருத்தம் கொண்டுவந்தார்கள். எகனாமிகலி என்ற சொல்லையும் சேர்க்கவேண்டும். சமூதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கிய சமூகத்திற்கு என்று இருப்பதை பொருளாதத்திலும் பின்தங்கி என்ற சொல்லை சேர்க்கவேண்டி வந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது எல்லோரும் மறுத்தார்கள், நேரு மறுத்தார், அப்போது அம்பேத்கார், அரசியல் நிர்ணய சபை, அப்பொழுது நாடாளுமன்றம் இல்லை, நாடாளுமன்றம் 1952- யில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது அம்பேத்கார் மறுத்தார், எல்லோரும் விளக்கிச் சொன்னார்கள், வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. 1950 ஜனவரியில் வந்த சட்டத்திற்கு சட்டத்திருத்தம் 1951 ஜூன் மாதத்தில் வருகிறது. ஒன்னாம் நாள் ஒன்றாம் தேதி தான்&lt;br /&gt;வாக்கெடுப்பிற்கு விடுகிறார்கள்- பொருளாதார ரீதியாக என்ற சொல்லை சேர்க்கக் கூடாது என்று எல்லோரும் வாதிக்கிறார்கள். வாக்கெடுப்பிற்கு விடுகிறார்கள். பொருளாதார ரீதியாக என்ற சொல் சேர்க்கப்படக்கூடாது என்று 243 பேர் வாக்களித்தார்கள்; வேண்டும் என்று 5 பேர் வாக்களித்தார்கள். ஆக இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் அச்சொல் மறுக்கப்பட்டது - பொருளாதார ரீதியாக என்று. இதை நான்&lt;br /&gt;ஏன் சொல்கிறேன் என்று சொன்னால், அரசியல் சட்டத்தை எழுதிய அரசியல் நிர்ணய சபை, அது கலைக்கப்படவில்லை, நடைமுறையில் இருந்துகொண்டு வருகிறது. அது 243 க்கு 5 என்ற கணக்கில் மறுக்கப்பட்டது பொருளாதார ரீதியாகஎன்ற சொல் சேர்ப்பதற்கு. ஆனால் இப்பொழுது நீதிபதிகள் பொருளாதார ரீதியாக என்பதைத்தான் 'கிரீமி லேயர்' என்று சொல்கிறார்கள். இரண்டரை இலட்சம் வருமானம் வந்தால் இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்கிறார். ஆனால் இவர் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்கிறார். மறுக்கப்பட்டது, அப்பொழுது தீர்மானம் கொண்டு வந்தவர் யார் என்றால் அதற்குப் பின்னால் இப்பொழுது பாரதீய ஜனதாவாக இயங்கிக் கொண்டிருக்கிறஅமைப்பின் தாய் அமைப்பான ஜனசங்கத்தை உண்டாக்கிய சியாம் பிரசாத் முகர்ஜி (எஸ். பி. முகர்ஜி) என்பவர் தான் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் பொருளாதார ரீதியாக சேர்க்கவேண்டுமென்று. அப்பொழுது தொடங்கி அவர்களுடைய இயக்கம் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது. ஆக மறுக்கப்பட்டது என்பது ஒரு செய்திக்காகச் சொல்கிறேன். அதற்குப் பின்னால் தான் சமூக ரீதியாக கல்வி ரீதியாக பிந்தங்கிய என்கிறபோது தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு என்று மூன்றையும் சொன்னார். 16(4) வெறும் பேக்வார்ட் கிளாஸஸ் என்று மட்டும் சொல்லியது. இது விளக்கமாக மூண்றையும் சொல்லியது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் கூட கேட்டார்: நீ தெருவுக்கு நாலு பைப் போட்டுக் கொடுத்துடுற, தண்ணீ பிடிச்சுக்கன்னு சொன்ன, ஆனால் டேங்குக்கு தண்ணீ விடலையேன்னார். எனக்கு வேலை வாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்டீங்கள், எங்க ஆள் படிக்கவேயில்லையே, அப்பறம் எப்படி வேலைவாய்ப்புக்கு போய் நிற்பான். பைப்பை மட்டும் போட்டுக் கொடுத்துட்ட, முதல்ல டேங்குக்கு தண்ணீ விடுன்னார். எனவே அந்தத் திருத்தம் வந்தது. அதனால் தான் நமக்கு கல்வியில் இடஒதுக்கீடு செய்யலாம் என்ற நிலை உண்டானது, சட்ட ரீதியாக. 1951-யில் வந்த சட்டம், மத்திய அரசின் நாடாளுமன்றமாக அப்போது கருதப்பட்ட அரசியல் நிர்ணய சபை கொண்டு வந்த சட்டத்திருத்தம், அதே மத்திய அரசால் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தான் அங்குள்ள வெட்கக் கேடான செய்தி. கல்வியில் இட ஒதுக்கீடு தரலாம் என்று சொல்லிவிட்டார்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள், திருத்தம் வந்துவிட்டது, ஆனால் அந்தச் சட்டத்திருத்தம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்கு, அதை&lt;br /&gt;ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை நியமித்தார்கள். 1953-ஆம் ஆண்டு - அரசியல் சட்டத்திலேயே சில பிரிவுகளை வைத்தார்கள்; 340 என்ற ஒரு பிரிவு இருக்கிறது, அதுதான் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு மேம்பாடுக்கான சிந்தனைகளை செய்வதற்கு ஒரு குழுவை அமைக்கலாம் என்று பரிந்துரைக்கிறது, பரிந்துரைத்தது, அமைத்தார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;1953-யில் அமைக்கப்பட்ட குழுவிற்கு தலைவர் காகா கலேகர் என்பவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்பதைபற்றி ஆலோசிப்பதற்கு . . . . . தலைவராகக்கொண்ட குழுவை&lt;br /&gt;அமைக்கிறார். அந்தக்குழு தான் ஆய்வுசெய்தது. அது இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து 1955-யில் ஒரு அறிக்கை கொடுக்கிறது. அது சில சாதிகளை பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வகைப்படுத்துகிறது. 2000 சாதிகளை&lt;br /&gt;வகைப்படுத்துகிறது. வகைப்படுத்தியதோடல்லாமல், இன்னொரு சிறப்பான புரட்சிகரமான ஒன்றைச் செய்தார். பெண்கள் எல்லோரும் பிற்படுத்தப்பட்டவர் என்று அறிவித்தார், என்று பரிந்துரை எழுதினார்கள். தொழிற்கல்வியில் 65 விழுக்காடு, மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தார். அப்பறம் அடுத்தது ஒவ்வொன்றாக சொல்லும் போது 50, 25 என்று குறைத்து சொன்னார். ஆனால் அவர் பரிந்துரைத்தது 75 விழுக்காடு. அறிக்கையை அப்படி எழுதிவிட்டு, அறிக்கையை அரசுக்கு அனுப்பினார். அதிலே ஒரு கடிதம் வைத்து அனுப்பினார். இந்த அறிக்கைகளிலெல்லாம் சொன்னார்கள், பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு அறிக்கையில் எழுதியிருக்கிறேன். ஆனால் சாதி அடிப்படையில் எனக்கு இட ஒதுக்கீடு தருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று குழுவின் சார்பாகக் கடிதம் வைத்து அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இவருடைய அறிவு நாணயம் இருக்கிறது என்று பாருங்கள். குழு கூடி இரண்டாண்டு ஆய்வு செய்து அறிக்கை எழுதிவிட்டு, அறிக்கையில் கையெழுத்து போட்டுவிட்டு அதோடு இணைப்புக்கடிதத்தில் மட்டும் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று பரிந்துரை செய்தார். அதில் இன்னொன்றையும் செய்தார். இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோமே 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமே; மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி வாரியாக எடுக்கலாம் என்று 1881-யில் தான் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முந்தியே மக்கள்தொகை கணக்கெடுப்பு வந்திருச்சு 1871-யில் சென்னை மாகாணத்திலிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பினுடைய தலைமை அலுவலர் தான் டபிள்யூ. கார்னீஷ் என்பவர் இருந்தார். அவர்தான் சொன்னார் நம் அரசின் ஆய்வில் ஒன்று தெரிகிறது, அரசு மக்கள் நோயை பார்ப்பனக்கண்ணாடி கொண்டுதான் பார்க்கிறது (spectacles of Brahmin). அதற்கு prescription நோய் தீர்ப்பதுதற்கும் பார்ப்பன மருத்துவத்தைத் தான் தருகிறது. 1881யில் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது. ஒவ்வொருவரையும் சாதியைக் குறிப்பிட்டு எடுத்தார். 1931 வரை நடந்தது. 1941-யில் இரண்டாம் உலகப்போர். சரிவர கணக்கெடுப்பு நடத்தமுடியவில்லை. 1951-யில் விடுதலை பெற்ற இந்தியா எடுக்க வேண்டாம் என்று அறிவுரை சொல்லிவிட்டது. இதுவரை எடுக்கப்படவேயில்லை. சாதிவாரி எடுக்கப்பட்ட கடைசி கணக்கெடுப்பு 1931. அதற்குப் பின்னர் எடுக்கப்படவில்லை. இதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் தீட்டுகிறபோதெல்லாம் அந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்துகொண்டுதான் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக 1955-யில் காகா கலேகர் பரிந்துரையில் ஒன்றாகக் கொடுத்தது: சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று சொன்னது. 1931-μடு நிறுத்திவிட்டீர்கள், 1941-யிலே எடுக்கல, 1951-யில எடுக்கல. 1955-யில் பரிந்துரை கொடுத்தார்கள் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்று, அதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பின் மிக நீண்டகாலம் பிற்படுத்தப்பட்ட மக்களைப்பற்றி கவனிக்கவில்லை என்பதுமட்டுமல்ல 1961-ஆம் ஆண்டு எப்படி இந்தப் பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் எந்த அமைப்பில் இருந்தாலும் என்ன முற்போக்கு பேசினாலும், நாங்கள் அடிக்கடி சொல்வது நாத்திகம் பேசுவதால் பெரியாரை வெறும் நாத்திகராக மட்டும் பார்த்துவிடாதீர்கள், அதற்கும் மேல் ஒரு சமுதாய அக்கறை இருந்தது. அவருடைய கவனம் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்கள் மீது இருந்தது. ஏனென்றால் நாத்திகன் என்று பார்த்தால் நாட்டின் பெருங்கேடாக இன்று விழைந்திருக்கிற இந்துத்துவா என்ற சொல்லாடலைக் கொண்டு வந்த சாவர்க்கர், அதற்காக இந்து மகா சபையை நடத்தியவன், அதற்கு எதிராகப் போனதால் காந்தியைக் கொல்ல திட்டமிட்ட சாவர்க்கர் நாத்திகன். கடவுள் நம்பிக்கை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று சொல்பவன். பார்ப்பனனுக்குத் தான் அதிகாரம் வேண்டும் என்று சொன்னவன். வேதம் தான் உயர்ந்தது என்று சொல்பவன். இந்து மகா சபையினுடைய கொள்கையே வேத காலத்திற்குத் திரும்புவோம் என்பது தான். ஒரே ஒரு சொல்தான் கொள்கை அவங்களுக்கு, இந்தியாவை வேதகாலத்திற்கு திருப்பியும் கூட்டிட்டுப் போகனும். எப்படி இருக்கும் என்று அப்ப்றம் நீங்கள் யோசித்துக் கொள்ளலாம். அவன் நாத்திகன். நம்ம கமலஹாசன் கூட நாத்திகர் தான். ஆனால் இட ஒதுக்கீடு தப்பு என்கிறார். அப்படித்தான் நேருவும் நாத்திகர். நேருவும் தன்னை சோசலிசவாதியாகச் சொன்னார். அவர்தான் முதல் சட்டத் திருத்தம் வந்தபோது 'எக்கனாமிகலி' என்ற சொல் சேர்க்கக்கூடாதென்று வாதாடினார். 1961-யில் எல்லா அரசுகளுக்கும் ஒரு கடிதம் எழுதப்பட்டது, 'டெமி அபுசியல் லெட்டர்' - எழுதப்பட்டது. பிரதமரே எழுதினார். எல்லா முதலமைச்சர்களுக்கும். இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 'பாக்வார்ட் கிலாஸ்'என்று சொல்கிற போது முடிந்தவரை பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குக் கொடுங்கள். சாதி ரீதியாக கொடுப்பதை நான் விரும்பவில்லை. 1951-யில் எதிர்த்துப் பேசியவர் 1961-யில் பேசுகிறார் - எல்லா முதலமைச்சர்களுக்கும் எழுதுகிறார், சாதி அடிப்படையில் கொடுப்பதற்கு மத்திய அரசு விரும்பவில்லை என்று எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சராக இருந்தாலும் நீதிபதியாக இருந்தாலும் அவர்களுடைய சிந்தனை எப்படியிருக்கிறது என்பதற்காகச் சொல்கிறேன். பெரியார் சொல்வார், வெளிப்பகட்டிற்கு புரட்சியாளனாகவும் உள்ளே பார்ப்பனனாகவும் வாழ்ந்தவர் நேரு என்று சொல்லுவார். அவருடைய அப்பா இறந்த பொழுது பூணூல் போட்டுக்கிட்டு சட்டையில்லாமல் சடங்கு செய்ததற்காகச் சொல்கிறார். அதை விடுங்கள். அடுத்து இப்படிப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன உதவிகள் செய்யலாம் என்பதைப்பற்றி ஆய்வதற்கு அடுத்த குழு அமைக்கவே இல்லை. 1953-யில் அமைத்தது, மீண்டும் 1979-யில் தான் சரண்சிங் அவர்கள், அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்தார், அவர்தான் நியமிக்கிறார், மொரார்ஜி பிரதமர், அவரும் ஒத்துக்கொள்கிறார். சரண்சிங் மாகாணத்திற்கு ஒரு பெரியார் வேண்டும் என்ற நூலை எழுதியவர், அது நமக்குத் தெரியாது. விவசாயிகள் நலன்களுக்காகப் போராடிய ஒரு புரட்சியான சிந்தனையாளர் என்று தான் தெரியும். அவர் மாகாணத்திற்கு ஒரு பெரியார் வேண்டும் என்ற ஒரு சிறு வெளியீட்டை வெளியிட்டவர். அவர்தான் இந்த மண்டல் குழுவை நியமித்தார். இப்பொழுது தலைவராகப் போடப்பட்டவர் ஒரு பிற்படுத்தப்பட்டவர். ஒரு வழக்கறிஞர், முதலமைச்சராக இருந்தவர், விந்தேஸ்வரி பிரசாத் மண்டல் - வி.பி.மண்டல் என்கிறவர் தலைமையில் அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு உட்கார்ந்த இடத்திலிருந்து ஆய்வு செய்யவில்லை. இந்தியாவில் அப்பொழுது 406 மாவட்டங்கள் இருந்தன. 405 மாவட்டங்களில் போய் அவர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார். ஒரே ஒரு மாவட்டத்திற்கு போகமுடியவில்லை, பெரும் மழை காரணமாக அஸாமிலி இருந்த அந்த மாவட்டத்திற்கு போகாமல் வந்துவிட்டார்கள். 405 மாவட்டத்திற்குப் போகிறார்கள். எம்.என்.சீனிவாஸ் போன்ற மானுடவியல்&lt;br /&gt;அறிஞர்களுடைய கருத்துக்களை கேட்டார்கள். டாடா நிறுவனம், டெல்லி&lt;br /&gt;பல்கலைக்கழத்தின் மானுடவியல் பிரிவு போன்ற அமைப்புகளை வைத்து ஆய்வு செய்தார்கள். அவர்களிடம் அறிக்கையெல்லாம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு அறிவியல் பூர்வமாக பட்டியலிட்டார். இவர்கள் எல்லாம் சொல்கிறார்கள், ஒரு நீதிபதி உட்கார்ந்து கொண்டு. அவர் எப்படியெல்லாம் பட்டியலிட்டார் என்பதை மண்டல் அறிக்கையை படிக்கும்போது நமக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்படுத்தப்பட்ட மக்களை சமூக ரீதியாக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தான் எடுக்கவேண்டும் என்றாலும் கூட அவர் பொருளாதாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டார். சமூக ரீதியாக என்று பார்க்கிறபோது 17 வயதிற்குக் கீழ் திருமணமாகிற பெண்கள் முதலில் ஒன்று எடுக்கிறார், அது கிராமத்தில் இருந்தால், நகரத்தில் இருந்தால் என்று விழுக்காடு கணக்கு எடுத்தார். 25 விழுக்காடு மாநில சராசரிக்கு அதிகமாக திருமணம் செய்பவர், நகரமாக இர்ந்தால் 10 விழுக்காடு திருமணம் செய்த சாதிகள் என்று பிரிக்கிறார். உடலுழைப்பை 50 விழுக்காடு அதிகமாக செய்கிற சாதிகளை பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று சொலிகிறார். அதை நான்கு போட்டு அது ஒவ்வொன்றுக்கும் 3 மதிப்பெண்கள் போடுகிறார். கல்வி என்று வருகிற போது தொடக்கக் கல்விக்கே போகாதவர்கள் மாநில சராசரிக்கு மேல் 25 விழுக்காடு இருந்தால் அந்தச் சாதிகள்; பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள் விலகுகிறவர்கள் 'டிராப் அவுட்ஸ்' மாநில சராசரியை விட 25 விழுக்காடு அதிகமாக இருக்கிற சாதிகள், இதையெல்லாம் இப்படியொரு பட்டியல் எடுக்கிறார். அதற்கெல்லாம் 2 மதிப்பெண்கள். அப்பறம் பொருளாதார ரீதியாக என்று வருகிறபோது μலைக்குடிசையில் வசிப்பவர்கள் மாநில சராசரியை விட 25 விழுக்காடு அதிகமாக இருக்கிற சாதிகள்; குடி நீருக்காக அரை கிலோமீட்டருக்கு மேல் நடந்து போகிறவர்கள்; மாநிலத்தில் கடனை மாநில சராசரிக்கு மேல் பெற்றிருக்கிற குடும்பங்கள் இப்படியெல்லாம் கணக்கெடுத்து 22 மதிப்பெண் போட்டு அதில் எந்த சாதி 11 மதிப்பெண்களுக்கு மேலிருக்கிறதோ அந்த சாதியெல்லாம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று அறிவிக்கிறார்; இவ்வளவு ஆராய்ச்சிக்குப் பின்னால் அவர் அறிவிக்கிறார். அறிவித்தது மட்டுமல்ல அந்த சாதிகளை வகைப்படுத்தி எழுதிவிட்டு இந்த சாதிகளுக்குப் பரிந்துரை தருகிறார்; பரிந்துரையைப் பற்றி விரிவாகப் பேசினால் நேரமாகிவிடும். பரிந்துரையில் இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருக்கிறது ஒரே ஒரு செய்தியை மட்டும் தான். ஆறு பரிதுரைகளைக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு&lt;br /&gt;2. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு&lt;br /&gt;3. கடன் கொடுப்பதில் 27 விழுக்காடு இதெல்லாம் சொல்கிறார்; அதுமட்டுமல்ல&lt;br /&gt;4. நில உடமை என்பது இந்த நாட்டில் உற்பத்தி சக்திகள் எல்லாம் ஆதிக்க சாதிகள் கையில் இருப்பதால் தான் இவர்கள் இந்து பொருளாதார வளர்ச்சியில்லை, எனவே உற்பத்தி உறவுகளைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறார் - அதை யாரும் பேசுவதே இல்லை.&lt;br /&gt;5. அரசு உதவி பெறும் தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்று பரிந்துரை செய்தார்&lt;br /&gt;6. அதேபோல மீனவர் போன்ற மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தாழ்த்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றியமைக்குமாறு சொன்னார்;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்குத் தனித் தொகுதி ஒதுக்கவேண்டுமென்று சொன்னார் அதையெல்லாம் விட்டுவிடுங்கள், ஒன்றே ஒன்று பேசிக்கொண்டிருக்கிறோம், இடஒதுக்கீடு. ஆனால் அவர் வகைப்படுத்தி பட்டியலிட்டது பிற்படுத்தப்பட்ட மக்கள் எத்தனை பேர் என்று பட்டியலிட்டார். எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பட்டியலிட்டார் - இந்துக்களில் 44 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டவர்கள்; இஸ்லாமிய, கிருத்துவம், சீக்கியம் போன்ற மதங்களில் இருப்பவர்கள் 8 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டவர்கள். மொத்தாம் 52 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டவர். பின் ஏன் 52 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லிவிட்டு 27 விழுக்காட்டிற்குப் பரிந்துரை செய்தார் என்கிற போது தான் இந்த நீதிமன்றங்கள் மீண்டும் நமக்கு குறுக்கே வருகின்றன. இட ஒதுக்கீடு தமிழ்நாட்டைப் பொருத்தவரை எல்லா 100 இடங்களையும் பிரித்துக்கொடுத்தார்கள். பார்ப்பனர்களுக்கு 16- அதிகம் தான் என்றாலும் 8 ஆகப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்தார்கள்; தாழ்த்தப்பட்டவர்களுக்கு 1 இடம் மட்டும் கொடுத்தார்கள், 8 இடங்கள், 12-யில் ஒரு இடம். பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 6 இடம் என்று சொன்னார்கள் - அவர்களுக்கு ஒரு 44 விழுக்காடு கிடைத்தது; கிருத்தவர்களுக்கு 8 -அய்ரோப்பியர்கல், ஆங்கிலோ இந்தியர்கள் எல்லாம் சேர்ந்து 8; முஸ்லீம்களுக்கு 8 என்று பிரித்துக் கொடுத்தார்கள் - 100 வேலையையும் பிரித்துக் கொடுத்தார்கள். அதற்குப் பின்னால் மீண்டும் பெரியார் சொன்னார் - பார்ப்பனர் அல்லாதாருக்கு என்றால், இட ஒதுக்கீடு முதன் முதலில் எப்படி வந்தது என்றால் வேதத்தில் இருந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா சொன்னார், அதற்குப் பின்னால் இட ஒதுக்கீடு காங்கிரஸ்காரம் தான் கேட்டான். 1885-யில் காங்கிரஸ் என்று ஒரு கட்சி தொடங்கப்பட்டது; இந்திய விடுதலைக்காக தொடங்கப்பட்ட கட்சியல்ல காங்கிரஸ்,&lt;br /&gt;நமக்கெல்லாம் தெரியும். வரலாறு படித்தால் தெரிந்துகொள்ளலாம். இந்தியர்களுக்கு பிரிட்டீஷ் அரசின் மேல் வளர்ந்து கொண்டிருக்கும் பெறுப்பை தணிப்பதற்கு 'சே·ப்டி வால்வ்' ஆகத்தான் உருவாக்கப்பட்ட அமைப்பு காங்கிரஸ் என்ற கட்சி. அதனைத் தொடங்கியவர் தலைமை ஏற்றவர்கள் ஆங்கிலேயர்கள். ஏ.μ.ஹியூமும் வெர்ட்டர் பிரௌனும் தான். இந்தியர்கள் யாரும் ஆரம்பிக்கவில்லை என்பது வேறு. அதில் சேர்ந்த இந்தியர்களும் 1884-யில் இங்கிருந்து பல சாதனைகளைப் புரிந்து விடைபெற்றுச் செல்கின்ற ரிப்பன் பிரபுவை வழியனுப்பச் செல்கிறபோது பிரிட்டீஷ் அரசுக்கு விசுவாசிகளாக இருக்கிற 300 பேர் μரிடத்தில் கூடுகிறார்கள். கூடிய அவர்களிடைய ஒரு ஒற்றுமை இருக்கிறது - அவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். நாம் ஏன் ஆண்டுதோறும் சந்திக்கக் கூடாது என்று யோசிக்கிறார்கள். 1885 ஜூன் மாதம் சென்னையில் சந்திக்கிறார்கள். அப்பறம் 1885 கடைசியில் ஆங்கிலேயர்களோடு சேர்ந்து காங்கிரஸ் என்று அமைக்கிறார்கள். ஆரம்பித்தது எப்படியோ இருக்கட்டும், அவர்கள் ராஜ விசுவாசத் தீர்மானம், பிரிட்டீஷ் அரசு நீடு வாழ்வதற்கு இறைவன் அருள் புரிய வேண்டுமென்று இரண்டாவது தீர்மானம், மூன்றாவது தீர்மானம் ஒன்றைப் போட்டார்கள் - இந்திய வேலைகளை இந்தியமயமாக்கு என்பது அந்தத் தீர்மானம் - அதற்கு முன் டெபுடி கலெக்டருக்கு மேல் இந்தியர்கள் இல்லை, மாவட்ட நீதிபதிகளாக இந்தியர்கள் இல்லை, எங்களுக்கும் வேலை கொடு என்று போட்டார்கள்; ஆங்கிலேயன் அளித்தான். இந்தியர்களுக்கு என்று வாங்கிய வேலைகளை பார்ப்பனர்களே வைத்துக் கொண்டார்கள். வாங்கியது என்னவோ இந்தியர்களுக்கு வைத்துக்கொண்டது என்னவோ பார்ப்பனர்கள். இதனால் தான் எழுதிருத்து வந்தது. 85-90 யில் கொடுத்தான். 1906-லேயே இஸ்லாமியர்கள் அகாகான் தலைமையில் குரல் எழுப்பினார்கள். மராத்தியத்தில், சென்னை மாகாணத்தில் எதிர்ப்புக் குரல் வந்தது. அப்பறம் இட ஒதுக்கீடு வந்தது, அது ஒரு நீண்ட கதை, அது வேண்டாம். ஆனால் அதே போலத்தான் பார்ப்பனர் அல்லாதாரின் இட ஒதுக்கீடை பார்ப்பனர் அல்லாத உயர்சாதிக்காரர்கள் பிடித்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்களுக்கென்று வாங்கியதை பார்ப்பனர்கள் பிடித்துக் கொண்டதைப் போல, பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று வாங்கியதை உயர் சாதிக்காரர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். பெரியார் 1926-யில் தனது குடியரசில் எழுதினார், பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டைக் கூட்டுகிற போது - நீதிக்கட்சிகாரர்களே நீங்கள் பார்ப்பனர் அல்லாதார் என்றால் நூற்றுக்கு 5 விழுக்காடு கூட இருக்காத ராஜாவை, மிராசுதாரை, ஜமீந்தார்களை நினைத்துக் கொண்டு பேசுகிறீர்கள்; நான் பார்ப்பனர் அல்லாதார் என்றால் நூற்றுக்கு 95 ஆக இருக்கிற உழைக்கும் மக்களை கருதிக்கொண்டு பேசுகிறேன். வாருங்கள் நாம் உட்கார்ந்து கொண்டு பேசுவோம் - பார்ப்பனர் அல்லாதார் என்றால் யார் என்று பேசுகிறார். அப்பொழுதிருந்து அவர் குரலெடுக்கிறார் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு தனியாக இட ஒதுக்கீட்டைக் கொடு - அது பின்னால் கொடுக்கப்பட்டது. 12-யை 14-ஆகப் பிரித்து பிற்படுத்தப் பட்டோருக்கு 14 இடங்கள் தான் கொடுத்தார்கள். 14-யில் 2 நமக்குக் கொடுத்தார்கள். அப்பறம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர்களுக்கும் 14-ஆக உயர்த்தினார்கள். அதுதான் சிறப்பு. 8-ஆக இருந்ததை 14-ஆக உயர்த்தினார்கள். இப்படியெல்லாம் சிறப்பு. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு முதன் முதலாக 1943-யில் தான் இட ஒதுக்கீடு. 8.3 விழுக்காடு தான். அம்பேத்கர் வைசிராய் குழுவில் உறுப்பினராக ஆன பின்னாடி கொண்டு வருகிறார். அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது 12.5 தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1970-யில் தான் 15-ஆக உயர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 14-உம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 14-உம் கொடுத்தார்கள். இப்படி தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டது, கொஞ்சம் கொஞ்சமாக நாம் வாங்கினோம். . . . . . . . . ஏதோ பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் மத்திய அரசில் இல்லவே இல்லை. அப்ப இல்லாத இடங்கள் எங்களுக்கு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் யாரும் கேட்கவில்லை. பெரியார் கேட்டார். 1934-யில் சென்னை மாகாணத்திற்கு மட்டும் கொடுத்துட்டான். நீ சத்தம் போடாதே, உங்களுடைய ஊரில் கொடுத்து விடுகிறேன். அங்க எல்லாம் கேட்காதே என்று சொல்லிவிட்டான். ஒட்டு மொத்தமாக இந்தியா முழுவதற்கும் வருவதற்கு மண்டல் பரிந்துரையின் காரணமாகத் தான் கொண்டுவரலாம் என்று 1980-யில் அறிக்கை கொடுத்தார். 31.12.1980-யில் அறிக்கை கொடுத்தார். அறிக்கையை வெளியிடுவதற்கு ஒரு போராட்டம். அதற்கு 3, 4 ஆண்டுகள் ஆனது. நடைமுறைப் படுத்து என்று ஒரு போராட்டம். 1990 ஆம் ஆண்டு தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அறிக்கை கொடுத்தது 1980, நடைமுறைப்படுத்தப்பட்டது 1990 யில். வி.பி.சிங் நடைமுறைப் படுத்தினார். அது கூட எப்படி நடைமுறைப்படுத்தினார். பயந்து பயந்து செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது நீதிபதிகள் சாதாரணமாக சொல்லிவிட்டார்கள். அரசு பட்டியல் எல்லாம் எடுக்கவில்லையென்று. அவர் போட்ட சட்டத்தில் 13.8.1990-யில் தான் உத்தரவு போடுகிறார். அதில் தெளிவாக சொன்னார் -&lt;br /&gt;&lt;br /&gt;1. சிவில் பணிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு (மிலிட்டரி என்றால் பிரச்சனை வந்து விடுமேயென்று) சிவில் சர்வீஸசுக்கு மட்டும் என்றார், அடுத்து&lt;br /&gt;&lt;br /&gt;2. வேலை வாய்ப்புக்கு மட்டும் என்று சொன்னார் அதில் கூட விதிவிலக்குகளை வைத்தார் - நீதித்துறையில் இல்லை, அறிவியலில் உயர் ஆய்வுக்கு இல்லை, இப்படியெல்லாம் சில விதிவிலக்குகளை வைத்தார். அதற்குப் பின்னர் ஒன்று சொன்னார், பிற்படுத்தப்பட்டோர் எல்லோருக்கும் இல்லை - பிற்படுத்தப்பட்டவர்களில் மத்திய அரசுப் பட்டியலிலும் மாநில அரசுப் பட்டியலிலும் இரண்டிலும் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு என்று சொன்னார். மண்டல் பரிந்துரைத்தது 3740 சாதிகள்; ஆனால் இரண்டு பட்டியலிலும் இர்ந்தவர்கள் 2000 சாதிகள். ஏறக்குறைய 60 விழுக்காட்டி னருக்குத்தான் கொடுக்கப்பட்டது, 40 விழுக்காட்டினருக்கு இல்லை. இப்படியெல்லாம் கவனாமாக ஒவ்வொரு சொல்லாக போட்டு நடைமுறைப்படுத்தியதும் பெரும் போராட்டம். அதில் கூட இந்த 27 விழுக்காடு ஏன் கொடுக்கப்பட்டது 52 விழுக்காட்டிற்குப் பதிலாக ஏன் 27 விழுக்காடு கொடுத்தார்கள்? இதற்குத் தான் மைசூர் அரசில் நடந்த ஒரு வழக்கு - மைசூர் அரசர் கிருஷ்ணராஜ உடையார் இருந்தார். ஒரு சிறப்பு - சாகுமகாராஜ் என்பவர் தான் கோல்ஹாபூர் சமஸ்தானத்தில் முதன்முதலாக இடஒதுக்கீடு கொண்டு வந்தார். நூற்றுக்கு 50 இடங்கள் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று சொன்னார். தாழ்த்தப்பட்டவர்களின் உயர்வுக்கு அவர் தான் பாடுபட்டவர். அவர் தாழ்த்தப்பட்டவர்களை உணவுக் கடை வைக்கச் சொல்லிப் பணம் கொடுத்தவர். தாழ்த்தப்பட்டவர்களை படிக்க வைக்கப் பணம் கொடுத்தவர். தாழ்த்தப்பட்டவர் தேனீர் கடையிலே அரசர் போய் குடிப்பார். மந்திரிகள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு போய் அரசர் போய் உணவு சாப்பிடுவார். இப்படியெல்லாம் புரட்சி செய்தவர். அந்த சாகும்காராஜும், மைசூரில் இட ஒதுக்கீடு கொடுத்த கிருஷ்ணராஜ உடையாரும், சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை முன்னின்று வழிநடத்தியவரான டி.எம். நாயரும் – மூன்று பேரும் இலண்டனில் ஒன்றாகப்படித்தவர்கள். ஒன்றாக இருந்தவர்கள், ஒன்றாக சிந்தித்தவர்கள், ஒத்த சிந்தனையுள்ளவர்களாக இருந்தார்கள். இந்தியாவிற்கு வந்த பின்பு மூன்று பகுதிகளில் இந்தப் புரட்சியைத் தொடங்கினார்கள். அது தான் ஒரு சிறப்பு. கிருஷ்ணராஜ உடையார் பாரிஸ்டர் படித்தவர், அவர் ஒரு ஆய்வுக் குழுவை நியமிக்கிறார். யார் தலைமையில் என்றால், மைசூர் அரசின் தலைமை நீதிபதி, ஒரு ஆங்கிலேயர் லெஸ்லீ மில்லர் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கிறார். யார் யார் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று ஒரு பட்டியல் எடுக்கச் சொல்கிறார். அந்தக் குழு பட்டியல் எடுத்துப் பரிந்துரை தருகிறார். பார்ப்பனர் அல்லாதார் எல்லோரும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று ஆய்வு செய்து அறிக்கை தருகிறார். உடனே மைசூர் அரசர் 75 விழுக்காட்டு இடங்களை இட ஒதுக்கீடு செய்கிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு செய்கிறார். பின்பு அது 68ஆக 65ஆக 60ஆகவும் ஒரு சமயம் 68 ஆக இருந்த போது ஒருவன் வழக்கு மன்றத்திற்குப் போனான். பாராஜி என்னும் வழக்கு, அது உச்சநீதிமன்றம் வரை போய் வழக்காடினான். இவ்வளவு இட ஒதுக்கீடு கொடுத்தால் தகுதி திறமை எல்லாம் போய்விடும் என்று வாதாடினான். ஒரு திட்டம் எதுவும் கிடையாது. அங்கே 5 நீதிபதிகள் தீர்ப்பு சொன்னார்கள் - 50க்கு மேலே இட ஒதுக்கீடு போகக் கூடாது. அது என்ன அறிவியல் அடிப்படையா? இவன் எல்லாம் கேட்கிறான், என்ன அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்கிறீர்கள் என்று. 50 விழுக்காடு என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. அவர்கள் இஷ்டத்திற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது ஏதேதோ விளக்கங்கள் சொல்கிறார்கள். அதன் காரணமாகத் தான் 50க்கும் மேலே போகக் கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 இடங்களும் பழங்குடி மக்களுக்கு ஏழரை இடங்களையும் பரிந்துரை செய்துவிட்டு, ஏனென்றால் அவர்களுக்கு நாடாளுமன்றங்களில் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடுக்கு ஏற்கனவே இடம் இருக்கிறது, 330, 332 என்ற பிரிவுகள் - அது என்ன சொல்கிறது என்றால் முடிந்த அளவிற்கு அவர்களுடைய மக்கள்தொகைக்கு இணையாக இடம் ஒதுக்கப்பட வேண்டும், சட்ட மன்றத்தில் நாடாளுமன்றத்தில் என்று அச்சட்டங்கள் சொல்கின்றன. அதே மாதிரி தான் கல்வியிலும் இட ஒதுக்கீட்டிற்கு, வேலை வாய்ப்பிலும் அவர்களுடைய விழுக்காட்டிற்கு முழுசாக 15, 7 1/2 மொத்தம் 22 1/2 சொல்லியாச்சு. அப்ப மீதி இருப்பது 27, ஏனென்றால் 50க்குள் இருக்க வேண்டும். அதனால் தான் 27. மொத்தமா சேர்த்தால் 49 1/2. அதனால் தான் அவர் 27-ஐப் பரிந்துரை செய்தார். மக்கள் தொகை 52 விழுக்காடு என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு ஒன்று தடையாக இருக்கிறது என்று சொல்லி, 27 ஐப் பரிந்துரை செய்கிறார். முதலில் உச்ச நீதிமன்றத்தின் தடை எங்கிருந்து வந்தது என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் அதைச் சொன்ன நீதிபதி, முற்போக்கு இல்லாத, என்னென்றால் நீதிபதிகள்&lt;br /&gt;ஆவதெல்லாம் வருகிற வாய்ப்பு தானே, ஒரு முறையாக இல்லை, லாட்டரி டிக்கட் மாதிரி தான் வைத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அதற்குப் பின்னால் ஏராளமான நீதிபதிகள் 50 விழுக்காடு தப்பு என்று நிறைய பேர் சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ண அய்யர் சொன்னார், μ. சின்னப்ப ரெட்டி சொன்னார், பகவதி சொன்னார், ஹெக்டே சொன்னார், ஏராளமான நீதிபதிகள் 50 விழுக்காடிற்கு எந்த அடிப்படையும் இல்லை, அரசியல் சட்டம் சொல்லவில்லை என்று பல்வேறு தீர்ப்புகளில் சொன்னார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் இரண்டு நீதிபதிகள், மூன்று நீதிபதிகள் சொன்னார்கள். அங்கே அய்ந்து நீதிபதிகள் சொன்னார்கள். எனவே அதை மாற்ற முடியவில்லை. இவர்கள் எல்லாம் ஒருவேளை ஒரே பென்ச்சில் உட்கார்ந்திருந்தால் 50 விழுக்காடு செல்லாது என்று சொல்லியிருக்கலாம். கெட்ட வாய்ப்பாக இங்கே ஒரு ரெண்டு பேர் சொல்வார்கள், அங்கே ஒரு மூன்று பேர் சொல்வார்கள், அங்கே ஒரு மூன்று பேர் சொல்வார்கள். ஒரு நீதிபதி அழகாகச் சொன்னார், நீ தாண்ட வேண்டிய தூரம், அந்த லீப், என்பது கடக்க வேண்டிய தூரத்தை வைத்துதான் குறிக்கப்படவேண்டும். 3 1/2 பள்ளத்தை தாண்ட வேண்டு மென்றால் உன்னுடைய தாண்டுதல் 3 1/2 இருக்கவேண்டும். இல்லையில்லை சட்டப்படி நீ இரண்டே முக்கால் அடிதான் தாண்ட வேண்டும் என்றால் குழிக்குள் விழுந்து விடுவோம். அதைத் தான் சொன்னார் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கடக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்று பார்த்து இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய 50 விழுக்காட்டிற்குள் இருக்கவேண்டுமென்பது தப்பு என்று சொன்னார் அந்த நீதிபதி. இப்படி ஏராளமான தீர்ப்பு வந்தாலும் கூட அதுபோல அய்ந்து நீதிபதிகள் ஒரே இடத்தில் உட்கார்ந்து சொல்லவில்லை. எனவே தான் 27 கொடுத்தார். இந்த 27-ம் கூட வேலைவாய்ப்பில் மட்டும் கொடுத்தார்கள். அதுவும் இரண்டு பட்டியலும், மாநில அரசும் மத்திய அரசும் ஒன்றாக இருக்கிறவர்களுக்கு மட்டும் கொடுத்தார்கள். அதிலே பல சமுதாயங்கள் வாய்ப்புகளை இழந்தன. 2000 சாதிக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு. அதற்குப் பின்னால் ஒரு குழு வந்து 200 சாதிகளை சேர்த்தார்கள். மீதி பேருக்கு இன்னும் இல்லை. இது வேலை வாய்ப்பில் கொடுத்தது, கல்வியைப் பற்றி யாரும் பேசவே இல்லை. 1990-யில் ஆணை போட்டு, 2006 வரைக்கும் 16 ஆண்டுகள் இதைப் பற்றிப் பேச்சேயில்லை. எங்களைப் போன்ற சிறு இயக்கங்கள் குரல் எழுப்பியதைத் தவிர பெரிய இயக்கங்கள் யாரும் பேசவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது சொன்னார்கள் என்றால், நாம் தனியார் கல்லூரிகளின் மீது இடஒதுக்கீடு பற்றி வழக்கு போட்டோம். ·பைல் பவுண்டேசன் என்ற வழக்கு - அதில் தீர்ப்பு சொன்னார்கள், கல்வி நிலையங்களையெல்லாம் இட ஒதுக்கீடு கொடு என்று உனக்குச் சொல்ல அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதி மன்றம் சொன்னது. எனவே ஒரு அரசியல் சட்ட திருத்தம் வந்தது. அந்த அரசியல் சட்ட திருத்தம் தான் கல்வி நிலையங்களில்&lt;br /&gt;இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசியது. அதனாலே நமது மக்கள் விழித்துக் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடு என்று கேட்டார்கள். அரசு சட்டமாக போட்டது. அதற்கு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து சட்டத்தைப் போட்டு விட்டார்கள். ஆனால் அந்த சட்டம் தான் என்ன கதியாயிற்று என்று பார்க்கும் போது தான் நமக்குத் தெரியும், இவ்வளவு நாளாக நமக்கு இல்லை உயர் கல்வி நிலையங்களைப் பற்றி நாம் எல்லாம் இப்பொழுது பேசிக்கொண்டு இருக்கிறோம், அப்படி ஒரு கல்வி நிறுவனங்கள் இருப்பது இந்தச் சிக்கல் வரும் வரை நமக்குத் தெரியாது. நம்ம பையன், போனா பி.ஏ எகனாமிக்ஸ் போவான் இல்லை என்றால் பி.எஸ்.சி பாடனி போவான்; ஆனால் அவனுக்கு வழி காட்ட ஆளிருக்கிறது. நாம் யோசித்துக் கொண்டே இருப்போம் ஹிஸ்டரியிலே இடம் இருக்கிறது, போய் சேர்ந்து கொள் என்று தான் சேர்ந்து கொண்டு இருந்தார்கள். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஏ.ஐ.ஐ.எம்.எஸ் என்றெல்லாம் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரியும், μஹோ,இப்படியெல்லம் ஒரு படிப்பு இருக்கிறதா? நீங்கள் மேல் நிலைக் கல்வியில் இருக்கிற ஆசிரியர்கள் எல்லாம் வழி காட்ட வேண்டும். அடுத்து எங்கே படிக்க வேண்டும் என்று; அவர்களுக்கே நிறைய பேருக்கு தெரியாது. இப்பொழுது நல்ல வேலை இந்தச் சிக்கல் வந்த பின்னாடி தான் இது வெளியே வந்தது. இந்த நிறுவனங்கள் என்ன பித்தலாட்டம் செய்து கொண்டிருந்தன என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது ஏ.ஐ.ஐ.எம்.எஸ் பற்றி நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசினார்கள். அந்த வேணுகோபால் செய்கிற அக்கிரமம், அவனைப் பற்றித் தனியாகச் சொல்வது அப்பறம், அதிலே எப்படி விதி வைத்திருந்தான் என்பதை பற்றிச் சொன்னால் எவ்வளவு எல்லாம் பார்ப்பனர்கள் தங்களுக்காக செய்துகொள்கிறார்கள் என்பது புரியும். எல்ல கல்லூரிகளிலும் நீங்கள் பார்க்கலாம், பட்டப் படிப்பிற்கு ஒரு 100 இடம் இருந்தால் பட்ட மேல் படிப்பிற்கு 20 இடம் தான் இருக்கும். எம்.பி.பி.எஸ் க்கு 100 இடம் இருந்தால் எம்.டி க்கு 10 அல்லது 20 இடங்கள் தான் இருக்கும். அவ்வளவு தான் இப்பொழுதெல்லாம் ஒதுக்குகிறார்கள். ஆனால் அந்த அகில இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் விதியே தலைகீழாக இருக்கிறது. எம்.பி.பி.எஸ் க்கு 40 இடம், முதுகலை படிப்பிற்கு 120 இடம், எப்படி பாருங்கள். புதிதாக ஒரு விதியை செய்தார். அந்த நிறுவனத்தில் படிக்கிற மாணவர்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று சொல்லிவிட்டான். மூன்றில் ஒரு பங்கு. எனில் 120 முதுகலைப் படிப்பு இருக்கிறது; அங்கே எம்.பி.பி.எஸ் படித்த 40 பேரும் அப்படியே முதுகலைப் படிப்பிற்கு போய் சேர்ந்து விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு விதியை மிக நீண்ட காலமாக வைத்திருந்து, நம்மவர்கள் யாரும் கவனிக்கவில்லை. 1996 யில் தான் கவனத்திற்கு வந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன்; அங்கே இடம் கிடைக்காதவன்; வழக்குப் போட்டான். லஹோட்டி, இப்பொழுது ஓய்வு பெற்று இருக்கிற அப்பொழுதைய தலைமை நீதிபதியிடம் தான் வழக்கு சென்றது. அப்பொழுது பட்டியலை எடுத்துப் பார்க்கிற பொழுது தெரிகிறது, இவன் தகுதி திறமை பேசுகிறான்; இப்பொழுது தகுதி திறமை என்பது மதிப்பெண் அடிப்படையில் பேசப்படுகிறது.வேறென்ன அளவுகோல் இருக்கின்றது; அந்த மதிப்பெண்ணை நிர்ணயிக்க தேர்வு முறை; தேர்வு முறை என்பது மனப்பாடம் பண்ணுகிறவன் - நல்லா வாந்தி எடுத்தவன் நிறை மதிப்பெண் பெறுகிறான். அது தான் நமது தேர்வு முறை - அறிவை சோதிப்பது அல்ல மனப்பாடத்தை சோதிக்கின்ற முறை. அப்படை யென்றால், அந்த மனப்பாடத்தை சோதிக்கின்ற தேர்வை எழுதுவதற்கு - நம்முடைய மாணவன் ஓராசிரியர் பள்ளியில் படிக்கிறான்; வீட்டிற்குப் போனால் அய்யாம் வந்தால் சொல்வதற்கோ, விளக்கம் சொல்வதற்கோ - கல்வியறிவில்லாத பெற்றோர்கள்; தனிப்பயிற்சி வைக்க வசதியில்லை; உயர்நிலைப் பள்ளிக்கு பல கிலோமீட்டர்கள் போக வேண்டும்; கல்லூரிக்கு 20 கிலோமீட்டர்கள் போகவேண்டும்; தேர்வு எழுதினால் தேர்வுத் தாளைத் துரத்தவோ, அங்கு போய் மதிப்பெண் பெறுகிற வித்தை அவனுக்குத் தெரியாது; அவனுடைய பெற்றோர்கள்களுக்குத் தெரியாது. இதையெல்லாம் வைத்து வாங்குகிற மதிப்பெண், இதை வைத்துத் தான் இப்போது இட ஒதுக்கீட்டிற்கு தகுதி திறமை பேசுகிறார்கள். இந்தச் சூழல் இவன் வாங்குகிற 60 மதிப்பெண் அவன் வாங்குகிற 100 க்குச் சமம். ஆனால் நம்முடைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்பது நீங்கள் சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பார்த்தால் தெரியும். அவனுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு ஓப்பன் காம்படிஷன் என்பதில் 350 பேர் நம்மாள், 15ஆவது இடத்தில் ஒரு பார்ப்பான் வந்தான். 14 மாணவர்கள் நம்ம பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தான். அப்படியெல்லாம் நமது மாணவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஓப்பன் காம்படிஷனுக்கும், பிற்படுத்தப்பட்ட பட்டியலுக்கும் இருக்கும் மதிப்பெண் வேறுபாடு அரை விழுக்காடு. மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ஒன்றரை மதிப்பெண் தான் வேறுபாடு. ழ்த்தப்பட்டவர்களுக்கு இரண்டரை மதிப்பெண் வேறுபாடு. பழங்குடி மக்களுக்கு 4 மதிப்பெண் வேறுபாடு - அவனுக்கும் இவனுக்கும். இவ்வளவு தடைகளைத் தாண்டி நம்ம மாணவன் வாங்குகிற 60 யே 100 க்குச் சமம். அரை மதிப்பெண் வேறுபாட்டிற்குத் தான் தகுதி திறமை போய்விடும் என்கிறார்கள். அதற்கெல்லம் தான் நாம் சொல்கிறோம், மருத்துவக் கல்லூரியை அரசு கட்டி வைத்திருக்கிறது என்றால், தனி மனிதனை பட்டம் பெற வைத்து சம்பாதிக்க வைக்க அல்ல, இந்த நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக; மக்கள் நலத்தை மேம்படுத்துவதற்காகத் தான் மருத்துவக் கல்லூரியை அரசு கட்டி வைத்திருக்கிறது. மக்களுக்கு நல்ல மருத்துவம் போகவேண்டும் என்றால், மக்களோடு இணந்து நெருங்கிப் பழகுகிற மனப்பான்மை&lt;br /&gt;அவனுக்கு இருக்க வேண்டும். அவன் தான் நமக்கு மருத்துவம் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மளை பார்ப்பான் தொடக்கூடாது என்று நினைத்தான் என்றால் எப்படி? நீங்கள் பார்க்கலாம், ஏ.ஐ.ஐ.எம்.எஸ் யில் 27 விழுக்காட்டிற்கு எதிராக தொடர் போராட்டம் நடந்தது. 20 நாட்கள் வேலைக்குப் போகாமல் உயர் சாதிக்காரர்கள் போராட்டம் பண்ணினார்கள். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக நம்முடைய மாணவர்கள், வேலை நேரத்தில் செய்யாமல் உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அரசு மருத்துவ மனைக்கு வருபவன் யாராக இருப்பான் - நம்முடைய சகோதரர்கள்; அவனுடைய் துக்கம் துயரம் அவனுக்குத் தெரியும். எனவே அவன் உணவு இடைவேளையின் போதுதான் ஆர்ப்பாட்டம் செய்தான். இவன் வேலைக்கேப் போகாமல் ஆர்ப்பாட்டம் பண்ணினான். இதுதான் உயர்சாதிக்காரனுக்கும், நம்ம மாணவர்களுக்கும் உள்ள வேறுபாடு. அப்ப, அந்த மருத்துவனாக, அவனோடு இணக்கமுள்ள கருத்துள்ள அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, மருத்துவனாக இருந்தாலும் சரி. ஒரு நிலையத்திற்கு ஒரு தாழ்த்தப்பட்டவர், பஞ்சை பராரியாக தலையை விரித்துக் கொண்டு முதியோர் ஓய்வூதியத்திற்குப் போகிற போது, அங்கு இருக்கிற ஒரு வட்டாட்சியரோ, அல்லது தலைமை நிலைய துணை வட்டாட்சியரோ, உயர்சாதிக்காரனாக் இருந்தால் போனால் போ என்பான். ஆனால் நம்ம ஆளாக இருந்தால் பரிவோடு பார்ப்பான் - கொஞ்சம் பேராவது. அதைத் தான் கல்சுரல் காம்பிடன்ஸ் என்று சொன்னார்கள். அவனுக்கும் நமக்கும் பண்பாட்டு இணக்கம் இருக்க வேண்டும். இதே சிக்கல் அமேரிக்காவில் வந்தது. கருப்பர்களுடைய மருத்துவத்தை, அவர்களுடைய உடல் நலத்தை அவர்களுடைய பொது நலத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை ஆய்வதற்கு ஒரு குழுவைப் போட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாலிவன் என்பவர் மருத்துவத் துறை செயலாளராக 6 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர்கள் தலைமையில் ஒரு குழுவைப் போட்டார்கள். அந்தக் குழு ஆய்வு செய்து ஒரு அறிக்கையைப் போட்டது. கருப்பர்களுடைய பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் மருத்துவர்களாக, சுகாதார அதிகாரிகளாக கருப்பர்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரை எழுதப்பட்டது. அப்பொழுது தான் 'கல்சுரல் காப்மிடன்ஸ்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். கருப்பருக்குத்தான் இன்னொரு கருப்பரோடு பண்பாட்டு இணக்கம் இருக்கும்; பண்பாட்டு உடன்பாடு இருக்கும்; அவன் செய்வான். அதற்குத் தான் அப்படிப் பார்த்தால் நம்ம சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல் கொடுத்தால் தான் நம்ம மக்களுடைய உடல்நலம் மேம்படும். அது ஒன்று. ஆனாலும் அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் குறைகிறது அதிலே தகுதி திறமை குறைகிறது என்று சொல்கிறான். பெரியார் பல கேள்விகளைக் கேட்டார் - இட ஒதுக்கீட்டில் எங்கள் ஆள் வந்தால் தகுதி திறமை போய்விடும் என்கிறாயே நீதானே இந்தனை ஆண்டுகள் ஆட்சி பண்ணினாய்; இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்று வரை பிரதமராக, ஆட்சித் தலைவர் அவர் தான், இருந்தது யார்? பார்ப்பான் தானே இருந்தீங்க இது வரைக்கும். மன்மோகன் சிங்கை விட்டுவிட்டுப் பாரு! இடையில் வேண்டுமானால் சாஸ்திரி, வி.பி.சிங், இப்படிப் பார்த்தால் உயர் சாதிக்காரர்கள், அதிலேயும் கூட வந்தவர்கள். பிற்படுத்தப்பட்டவர்களாக வந்த தேவ கௌடாவைக் கணக்கெடுத்தால் மாதக் கணக்கில் தான் இருந்திருக்கிறார். தகுதி திறமைக்குப் பேர் போன நீங்கள் தான் ஆட்சித் தலைவராக இன்று வரை இருக்கிறீர்கள் இந்தியாவில். இந்தியாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக, ஐ.பி.எஸ் அதிகாரிகளாக நீங்கள் தான் இருக்கிறீர்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் யில் 4 விழுக்காடு தான் நிரப்பப்பட்டுள்ளது. மீதி நீங்கள் தானே இருந்தீர்கள். அப்படியென்றால் ஆட்சித் துறையில் நீங்கள், அரசியல் துறையில் நீங்கள் தான், மாநிலத்தில் ஐ.ஏ.எஸ், காவல் துறை எல்லாம் நீங்கள் தான், நீதித் துறையில் நீங்கள் தான். இந்தியா என்ன முன்னேறி விட்டது? என்று கேட்டார். ஒலிம்பிக்கில் எத்தனை பதக்கம் வாங்கிட்டு வந்தாய்? தகுதி திறமையைப் பார்த்து என்று கேட்டார். பொருள் உற்பத்தியில் உலகத் தரத்தில் ‘குளோபல் பிராண்டு’ என்று சொல்கிறார்களே எத்தனை விழுக்காடு உங்களுடையது? உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 0.6 விழுக்காடு தான். அதிலே கருப்புக் கல், ஜவுளி, டயர் இது மூன்றும் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கிறது. மீதி போனால் இவன் அனுப்புவது 0.3 தான். இதிலே தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொடுத்தால் தகுதி போய்விடும் என்கிறான். உலக அளவில் இந்தியாவின் யோக்கியதைஅவ்வளவு தான். ஆனால் இவன் சொலிகிறான் நாம் போய்விட்டால் தகுதி திறமை போய்விடும் என்று குளோபள் பிராண்டு என்று ஒன்று கூட இல்லை. உலக அளவில் அறியப்பட்ட உற்பத்திப் பொருள் இந்தியாவிலிருந்து எதுவும் கிடையாது. பிராகடர் அண்ட் காம்பில் என்றோ கால்கேட் என்றோ எதுவும் கிடையாது; இந்தியாவில் எதுவும் இல்லை. அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த இட ஒதுக்கீட்டில் கூட வேலை வாய்ப்பிலிருந்து கல்விக்கு வந்து 27 தரலாம் என்று சொல்கிறபோது கூட நாடாளுமன்றம் ஒரு மனதாக&lt;br /&gt;முடிவு செய்கிறது; அமைச்சரவை ஒரு மனதாக முடிவு செய்கிறது. நம்ம சட்ட மன்ற உறுப்பினர் சொன்னதைப் போல அமைச்சரவையில் இருக்கின்ற சிலர், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிற, நீதித் துறை அமைச்சராக இருக்கிற பரத்வாஜ் என்கிற பார்ப்பனர்; நம்முடைய சிதம்பரத்திற்கும் பங்குண்டு என்று சொல்கிறார்கள்; இவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு தடையாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு குழுவைப் போடுகிறார்கள், இன்னொரு ஆய்வுக் குழு, அது சுதர்சன் நாச்சியப்பன் பரிந்துரை செய்தார்; இன்னொரு குழு, வீரப்ப மொய்லி தலைமையில், அவர் பரிந்துரை செய்கிறார் - சரி, இந்த 27 யை ஒரே சமயத்தில் தர வேண்டாம், பார்ப்பன மாணவர்கள் அதற்கே அந்த 27 கே முடியாது என்கிறான். சுமார் 60 ஆண்டுகளாக இடஒதுக்கீடே இல்லாத பிற்படுத்தப்பட்ட மக்கள், இப்பொழுது 60 விழுக்காடு மக்கள்தொகை இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 இடம் கொடுப்பதற்குக் கூட முடியாது என்கிறான். அவனிடம் போய் சமாதானம் பேசுகிறார்கள். “சரிங்க, சமாதானமாக போகலாம், 3 ஆண்டுகளில் கொடுக்கிறோம்”.&lt;br /&gt;“அதெல்லாம் இல்லை, கொடுக்க முடியாது”. “உங்களுக்கு குறையாமல் கொடுக்கிறோம்” எப்படி சம்மாதனப்படுத்துவது, ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். ஏ.ஐ.ஐ.எம்.எஸ் எப்படி தந்தாங்கன்னா, உங்களுக்கு இதுவரை நீங்கள் அனுபவித்து வந்தது 77 இடங்களுக்கு மேல் அனுபவித்து வந்தீர்கள், பதினைந்தும் ஏழரையும் சேர்ந்து 22 1/2 போக மீதி 77 ம் உங்களிதாக இருந்தது. தனிக்காட்டு ராஜாவாக அனுபவித்து வந்தார்கள்.&lt;br /&gt;பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 கொடுத்தால் 50 ஆகக் குறைந்து விடுமே என்று தானே பயப்படுகிறீகள்; நீங்கள் பயப்படாதீங்க, உங்களுக்கு குறையாது, 77 இடங்கள் உங்களுக்கு தரும்படியாக நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்ன ஏற்பாடு என்றால், ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். ஏ.ஐ.ஐ.எம்.எஸ் யில் எல்லாம் இடங்களை 154 ஆக உயர்த்துவது. பிற்படுத்தப்பட்ட மக்களால் பதிக்கப்பட்ட 27 விழுக்காட்டு இடங்களை அதிலே உனக்கு வந்து விடுகிறது. உனக்கு பழையபடி 77 இடம் வந்து விடும். அவன் சொல்கிறான், “எனக்கு வரவதைப்பற்றிக் கவலை இல்லை, அவன்களுக்குக் கொடுக்காதே”. இதற்கு என்ன காரணம் என்பதைத் தான் ஆய்வு செய்யவேண்டும். காரணம், அவர்கள் அடுத்த போடியாளராக பிற்படுத்தப்பட்ட மக்களைக் கருதுகிறார்கள். தங்களுக்கு போட்டியாளராக தாழ்த்தப்பட்ட மக்களைக் கருதவேயில்லை. ஏனென்றால்&lt;br /&gt;அவர்கள் இதுவரை நுழையவேயில்லை. ஒரு விழுக்காட்டினர் தான் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இருக்கிறார்கள். அடுத்தப் போட்டியாளனாக இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களை அனுபவிக்க விட்டால் வந்துவிடுவான் என்று கருதுகிறான். கிரீமி லேயர் என்ற ஒன்றை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்று சொன்னால் - இப்பொழுது ஐ.ஐ. டி யில் சேர வேண்டுமென்று சொன்னால் மூன்று இடங்களில் தான் பயிற்சி நிலையங்கள்&lt;br /&gt;இருக்கின்றன. ராமய்யா இன்ஸ்டிடியூட் என்று ஹைதராபாத்திலே, கோட்டாவில் இருக்கும் பன்சால் இன்ஸ்டிடியூட், டெல்லியில் இருக்கிற வித்யா மந்திர் ஆகிய மூன்றில் பயிற்சி பெற்றவர்கள் தான் ஐ.ஐ.டி யில் படிக்கின்ற முக்கால் பேர். சென்னை ஐ.ஐ.டி யில் படிக்கிறவர்களில் 80 விழுக்காட்டினர் ராமய்யா இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்கள், அதனால் தான் ஆந்திரா மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதில் அய்ந்து மாதம், நான்கு மாதம் தனிப்பயிற்சி, சிறப்புப் பயிற்சி கொடுக்கிறான். அதற்குக் கட்டணம் இரண்டு இலட்சம் ரூபாய். ஆனால் சட்டம் என்ன சொல்கிறது: இரண்டரை இலட்சம் ரூபாய் வருமானம் வந்தால் உனக்கு இட ஒதுக்கீடு இல்லை. எனில், பிற்படுத்தப்பட்ட மாணவன் எவன் நுழைவான்? இப்படிப்பட்ட சூழ்ச்சிகரமான விசயம் தான் கிரீமி லேயர்.&lt;br /&gt;&lt;br /&gt;வி.பி. சிங்கிற்கு அடுத்து ஒரு புத்திசாலி வந்தார். அவர் தான் பி.வி. நரசிம்ம ராவ். தனது தொடக்க அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ் யிலிருந்து ஆரம்பித்தவர். பின்பு அவர் காங்கிரஸில் உறுப்பினரார். தமிழ்நாட்டைப்&lt;br /&gt;பொறுத்தவரை தான் காங்கிரஸ், பி.ஜே.பி என்று பேசிக்கொள்கிறோம். வடநாட்டைப் பொறுத்தவரை எல்லோரும் அந்த சிந்தனை தான். ஹாப்பன் டு பி இன் காங்கிரஸ் ஆர் ஹாப்பன் டு பி இன் பி.ஜே.பி. அவனுக்கு இந்துத்துவா சிந்தனை தான். பி.வி.நரசிம்ம ராவ் திருப்பி ஒரு உத்தரவு மாற்றிப் போட்டான். வி.பி. சிங் தான் உத்தரவு போட்டார், முடிந்து விட்டது அல்லவா. 92 யில் தீர்ப்பும் கொடுத்தாச்சு, 93 யில் நியமனமும் ஆரம்பித்து விட்டது. 93-யிலே இவன் புதிதாக ஒரு உத்தரவு போடுகிறான். என்னவென்றால், 27 விழுக்காட்டில் poorer section of the backward class என்ற ஒரு சொல்லைச் சேர்க்கிறார்; புதிதாக ஒரு உத்தரவு. வி.பி. சிங் தப்பாக&lt;br /&gt;போட்டுவிட்டாராம், இவர் மாற்றுகிறாராம். அடுத்து இன்னொன்று சொல்கிறார், எந்தவித ஒரு இட ஒதுக்கீட்டிலும் உட்படாத சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகளுக்குப் 10 இடம் என்று ஒதுக்குகிறார். தீர்ப்பிலே சொல்லிவிட்டான் 50 க்குமேலே போகக் கூடாது என்று. ஏற்கனவே 49 1/2 விழுக்காடு முடிந்துவிட்டது, இதுக்குமேலே எப்படி 10 கொடுப்பாய்? இருந்தாலும் தெரிந்தே உத்தரவு போடுகிறார்; 10 விழுக்காடு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு. அதுவும் எல்லோருக்கும் இல்லை. எந்த ஒரு இட ஒதுக்கீட்டிலும் வராத சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு. அப்படியென்றால், யாருக்கு என்றால், பார்ப்பானில் ஏழைகளுக்கு என்று தனியாக ஒரு உத்தரவு போடுகிறான். இது எல்லாம் உச்ச நீதிமன்றத்திற்குப் போனது, அவனும் தீர்ப்பு சொன்னான். வி.பி.சிங் உத்தரவு செல்லும், பி.வி. நரசிம்ம ராவ் உத்தரவு செல்லாது என்று சொல்லிவிட்டான். ஆனாலும் ஒன்று சொன்னான். இந்த கிரீமி லேயர் என்பதை அப்பொழுது தான் முதன் முறையாகச் சொன்னார்கள்.வசதி படைத்தவனை ஒதுக்கிவிட வேண்டுமென்று சொன்னார்கள். அதில் கருத்து வேறுபாடு இருக்கிறது, அது தப்பு என்பது வேறு. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளலாம், வேலை வாய்ப்பில் எதற்கு வசதிவாய்ந்தவனுக்கு அதிக வாய்ப்பு என்றாலும் கூட கல்வியில் எப்படி அதை நடைமுறைப் படுத்தலாம். வசதி இருந்தும் கல்வியில்லாதவன் தான் இப்பொழுது இட ஒதுக்கீடு கேட்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமுதாயத்திற்கு தான் இட ஒதுக்கீடு கேட்கிறான். ஒரு வேளை வேலை வாய்ப்புக்குப் போகிற போது ஏற்கனவே வசதி இருக்கிறது என்று சொன்னால் கூட அது கொஞ்சம் நியாயம் இருப்பதாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் எந்த நியாயமும் இல்லாததை இதற்கும் பொருந்துகிறது என்கிறான். இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் சொன்ன தீர்ப்பை இந்த நீதிபதி தனது தடையாணையில், இதை விரிவாகச் சொல்ல நேரம் இல்லை, சொல்கிறார், இதற்கும் பொருந்தும் என்கிறான். ஆனால் அவன் சொன்னான் 1931 அடிப்படையில் எடுத்தது சரி என்று அப்பொழுது தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் அவனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார் இவர். 9 நீதிபதிகள் சொன்ன தீர்ப்பை 2 நீதிபதிகள் மறுக்கிறார்கள். ஏனென்றால் இவர் தான் முன்னாடியே சிக்கல் பண்ணியவர். இவரைபற்றிச் சொல்வதானால மிக நீண்ட வரலாறு, ரொம்பத் திமிர் பிடித்தவன், நீதிபதியாக உட்கார்ந்தால் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று நினைக்கிறார்கள். வரிசையில் நிற்பது வேறு எந்த நாட்டில் இருக்கிறது என்று கேட்கிறான். ஒருத்தனை அடித்துக்கொண்டு அவனை விட இவன் பின் தங்கியவன் என்று அடித்துக் கொள்வது வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று தீர்ப்பிலே எழுதுகிறான். எந்த நாட்டிலே சாதி இருக்கிறது என்று தெரியுமா மடையனுக்கு. பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் என்று எந்த நாட்டிலே இருக்கிறது. ஆனால் அவன் தீர்ப்பிலே எழுதுகிறான். இதற்கு முன் இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகள் எழுதினார்கள், யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயிக்கிற அளவு கோலை மக்களோடு தொடர்பு இல்லாத நீதிபதிகளாகிய நாங்கள் செய்ய முடியாது என்று தீர்ப்பிலே எழுதியிருக்கிறார்கள். ஏற்கனவே வசந்தகுமார் வழக்கிலே ஓ. சின்னப்பரெட்டி எழுதினார். அதே வழக்கைச் சுட்டிக் காட்டுகிறார்கள். யார்&lt;br /&gt;பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயிக்கிற அளவு கோலை மக்களோடு தொடர்பு இல்லாத நாங்கள் பட்டியலிட முடியாது, தீர்மானிக்க முடியாது; அதைச் செய்வது அரசு தான். அரசு வேண்டுமானால் அதை நிர்ணயிக்க ஒரு குழு போட்டுக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இவன் சொல்கிறான், அது என்ன அரசு எது வேண்டுமானாலும் சொல்லலாமா, ஏற்றுக்கொள்வேனா நான் என்று சொல்கிறார்.&lt;br /&gt;நீதிமன்றங்களின் கொடுங்கோல் என்பது - சட்டத்திருத்தத்தைப் பற்றிப் பேசினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சட்டத்திருத்தம் அல்ல, முதல் சட்டத்திருத்தத்தின் போது இன்னொரு சட்டத்தையும் திருத்தினார்கள். 31 என்கிற சொத்துடைமையைப் பற்றிய சட்டத்திருத்தம், 31 ஏ, 31 பி வந்தது. அப்பொழுது எதற்காக வந்தது என்றால், இடஒதுக்கீட்டிற்கு இங்கே சிக்கல், ஆனால் கேரளத்திலும், வங்கம், கர்நாடம் போன்ற மாநிலங்களில் நிலச் சீர்திருத்தத்தை எதிர்த்து பல நீதிபதிகள் தீர்ப்பு சொல்கிறார்கள். அதெல்லாம் தனிமனித சொத்துரிமைக்கு எதிரானது. அதனால தான் அந்த சட்டத்தோடு இந்த சட்டத்தையும் திருத்தினார்கள். 31 பி என்ற பிரிவை - 9 அட்டவணை என்ற ஒன்றை புதிய அட்டவணையை உண்டாக்கி அந்த அட்டவணையில் சேர்க்கப்படுகின்ற சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று சொல்லி அந்தச் சட்டத்திருத்தம் அப்போழுது தான் 1951 யிலே வந்தது. ஏனென்றால், இந்த நீதிபதிகள் புரட்சிகர நில மாற்றங்களைக் கூட அந்த நீதிபதிகள் ஏற்க மறுத்தார்கள். சிறு சிறு மாற்றங்களைக் கூட ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.1990க்குப் பின்னால் ஒரு புதிய போக்கு, பொதுவான மக்கள் நலம், ஒதுக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் நலத்தை விட தனிமனித உரிமைகள் மேலோங்கிப் பேசப்பட்டன. இப்பொழுது நீதிபதிகள், அப்படித்தான் சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, மேனகா காந்தி வழக்கு, நாகராஜன் வழக்கு என்று நிறைய வழக்கு வந்து இருக்கின்றன. அதிலே எல்லாம் தனிமனித உரிமைகளை பற்றிப் பேசுகிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயம், இந்த அரசியல் சட்டத்தில் backward classes of the citizens என்று தான் சொன்னார்கள். தனி மனிதனைப் பற்றிப் பேசவில்லை. கிரீமி லேயரைப் பற்றிப் பேசவேண்டு மென்றால் விரிவாகப் பேசவேண்டும். கிரீமிலேயர் என்றால் ஒருமனிதனுடைய பொருளாதார நிலையைப் பற்றிப் பேசுவது.அரசியல் சட்டத்தில் எந்த இடத்திலும் தனிநபரைப் பற்றிப் பேசவில்லை. backward classes of the citizens என்று அந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிப் பேசினார்களே தவிர, தனிமனிதனைப் பற்றிய பேச்சு அங்கே இல்லை. காரணம், மக்கள் புறக்கணிக்கப்பட்டதும், இழிவுபடுத்தப்பட்டதும் தனி மனிதர்களாக அல்ல, ஒட்டுமொத்த குழுக்களாகத்தான் புறக்கணிக்கப்பட்டார்கள், இழிவுபடுத்தப்பட்டார்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டார்கள். எனவே தான், அந்தச் சொல்லைப் போட்டார்கள். ஆனால் தனிமனிதனுடைய உரிமைகளைப் பேசுவதாக நமது நீதிமன்றங்களின் போக்கு போகிறது. சமுதாய நலனை விட தனிமனித நலனை உயர்த்திப்பிடிக்கிற போக்கு 1990க்குப் பின் வந்து விட்டது. இபோழுதெல்லாம், தீர்ப்புகளில் அதைத்தான் அதிகமாகப் புகுத்துகிறார்கள். நான் ஒன்று இடையிலே விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் வேணுகோபால் செய்த பித்தலாட்டத்தை - 40 இடங்களில் தகுதி திறமை போய்விட்டது என்று பேசுகிறான். ஒன்றரை மார்க்குக்கு பேசுகிறான். பழங்குடியினராக இருந்தால் 4 மதிப்பெண்கள் தான் வேறுபாடு. ஆனால் இந்த மாதிரி அப்படியே 40 பேரும் மேல்படிப்பிற்குப் போகிற போது அவன் ஆய்வுக்கு எடுத்தான். எல்லாம் பட்டியல் வாங்கி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரிசையாக பார்த்தான். என்னத்த மதிப்பெண் வாங்கியவர்களுக்கெல்லாம் இடம் கொடுத்தாய் என்ரு? அதில் பார்த்தால், மீதி இடங்கள் இருக்கின்றன அல்லவா 66.6, மூன்றில் இரண்டு இடங்களுக்கு வேறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினரை விட குறைவாக கட் ஆ·ப் மார்க்கு வாங்கியிருக்கிற 16 பேருக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மற்ற இடங்களில்&lt;br /&gt;கடைசி மதிப்பெண் வாங்கியிருக்கிற பழங்குடியின மாணவரின் மதிப்பெண்ணைக் காட்டிலும் குறைவாகப் பெற்றிருந்த 16 பேர் அந்த ஏ.ஐ.ஐ.எம்.எஸ்ஸில் படித்த பழைய மாணவர்கள் என்ற பெயரால் அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருந்ததை நீதிபதி பார்த்தார். அது தப்பு, உடனே இப்போக்கை மாற்றவேண்டும் என்று சொன்னது உச்சநீதிமன்றம். இன்றுவரை மாற்றவில்லை. உச்ச நீதிமன்றம் 1999 யில் தீர்ப்புச் சொல்லி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுவரை மாற்றவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்றத்தை மதிக்கிறதேயில்லை. நம்ம ஆளுங்கள் தான் உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்றம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவன் மதிக்கவில்லை, இன்று வரை அதே நடைமுறைதான் இருந்துகொண்டு வருகிறது. அப்படியானால் தகுதி திறமை மதிப்பெண் அடிப்படையில் பார்ப்பார்களேயானால் தகுதியில்லாத 16 பேர் அந்தக் கல்லூரியில் படித்தார்கள் என்பதற்காக இடஒதுக்கீடு கொடுத்தானே அதற்கு இவன் என்ன சொல்கிறான். ஆக நம்முடைய மாணவர்கள் இப்படி போய்விட்டால் போய்விட்டது என்கிறான், காசு மட்டுமே கொடுத்தால் இடம் கொடுக்கின்ற தனியார் கல்லூரிக்கு எதிர்த்து தகுதி திறமை போய்விட்டது என்று இவன் என்றைக்காவது போராடியிருக்கிறானா? குறைவான மதிப்பெண் பெற்றவனெல்லாம் 20 இலட்சம், 25 இலட்சம் கொடுத்து 30 இலட்சம் கொடுத்து எம்.எஸ் வாங்குகிறான், அதையெல்லாம் பார்த்து அய்யோ தகுதி திறமை போய்விட்டது என்று என்றைக்காவது போராடியிருக்கிறானா? அரசுக் கல்லூரியில், இவன் செலவில்லாமல் படிக்கிற கல்லூரியில் வேற எவனும் வந்துவிடக் கூடாது. அவன் செலவு பண்ணுகிறவன் எப்படியோ போகட்டும். நாட்டு நலத்தைப் பற்றி அக்கறையிருந்தால் ஐ.ஐ.டி யில் படித்தவன் எவனும் ஐ.ஐ.எம் யில் படித்தவன் எவனும் - ஒரு தீர்மானம் போட்டோம் எங்கள் அமைப்பின் சார்பாக - இந்த &lt;strong&gt;உயர் கல்வி நிலையங்களில் படித்தவர்கள் கட்டாயம் 10 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றவேண்டும் என்ற நிபந்தனையோடு தான் சேர்க்கவேண்டும் என்று சொன்னோம்.&lt;/strong&gt; ஒருத்தன் கூட இந்தியாவில் இருப்பதில்லை. 80 விழுக்காட்டினர் வெளிநாட்டிற்குப் போய்விடுகிறான். உடனே வேலை இங்கே பேசுவதெல்லாம் தேச நலம் தகுதி திறமை எல்லாம் போய்விடுகிறது, நீ படித்த முடித்தவுடன் இந்தியாவிற்குப் பணியாற்றியிருக்கிறாயா? 80, 85 விழுக்காடு வெளிநாட்டிற்குப் போய்விடுகிறான். ஐ.ஐ.டி யைப் பொறுத்தவரை 85 விழுக்காட்டினர் வெளிநாட்டிற்கும் போய்விடுகின்றார்கள். ஏ.ஐ.ஐ.எம்.எஸ்ஸில் படித்தவன் 80 விழுக்காட்டினர் வெளிநாட்டிற்குப் போய்விடுகின்றான். அப்பறம் எதற்கு நீ இந்தியாவைப் பற்றிப் பேசுக்கொண்டு இருக்கிறாய். &lt;strong&gt;எங்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு, எங்களிடமிருந்து சுரண்டிக் கொடுக்கிற வரிப்பணத்தில் எங்களிடம் உறிந்து எடுக்கின்ற வரிப்பணத்தில் நீ படித்துவிட்டு, இங்கே பணியாற்றாமல் அங்கே போய்விடுகிறாய். நீ தேசத்தின் நலனைப் பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கிறாய்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சொன்னோம் ஒரு நிபந்தனை வை. ஒரு 15 ஆண்டுகள்; எம்.எஸ் படிக்கனும் என்றால் நிபந்தனை வைக்கிறான். நீ இவனுக்கும் வை 10 ஆண்டு 15 ஆண்டு இந்தியாவில் பணியாற்றவேண்டும் என்று. எவனும் ஐ.ஐ.டிக்கு சண்டை போடவே மாட்டான். இவன் சாதியை வளர்க்கிறது என்று தீர்ப்பு சொல்கிறான். இட ஒதுக்கீடு சாதியை வளர்க்கிறதாம். சாதிச் சான்றிதழ் அலமாரியில் இருக்கும். வேற யாருக்கும் தெரியாது, பட்டியல் வரும் போது தெரியும். அப்பறம் பேசுவதேயில்லை. &lt;strong&gt;இவன் ஐ.ஐ.டியிலே படித்துவிட்டு வெளிநாட்டிற்குப் போய்விட்டு, அங்கிருந்து திருமணத்திற்கு மட்டும் தன் ஊருக்கு வந்து தன் சாதில் தன் கோத்திரம் பார்த்து சாதி பார்த்து கலியாணம் பண்ணிவிட்டு திரும்ப அங்கே போய்விடுகிறான். இதிலே சாதி வளருவதேயில்லை. ஆனால், சான்றிதழில் இருக்கிற சாதியும் இட ஒதுக்ககீட்டிலே வருகிற சாதியும் சாதியை வளர்த்துவிடும் என்று அவன் பேசுகிறான். &lt;/strong&gt;ஆனால் இதே தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சஹானி வழக்கிலே சொன்னார்கள், பிளந்து கிடக்கிற சாமுதாய்த்தின் வேற்றுமைகளை இட ஒதுக்கீட்டினால் பணிக்கு வருகிறவர்கள் தான் சரிப்படுத்துவார்கள் என்று எழுதுகிறார்கள். ஒன்பது நீதிபதி எழுதியதை இந்த இரண்டு நீதிபதி தப்பு என்கிறான். இவ்வளவு திமிறான போக்கு இது ஒன்றில் மட்டுமல்ல, நீங்கள் இந்திரா சஹானி வழக்கு என்பது மண்டல் வழக்கு என்பது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பற்றி. அதிலே தீர்ப்பிலே ஒன்று சொல்கிறான். பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தான் மத்திய அரசுப்பணிகளில் - அது கூடாது என்று விட்டான் தீர்ப்பிலே. ஏண்டா நீ கேட்டது பட்டுக் கோட்டைக்கு வழி என்னடா என்றால் கொட்டைப் பாக்குக்கு என்னமோ சொன்னானே என்கிற கதையாக, பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு பற்றி தான் வழக்கு, ஆனால் தீர்ப்பு சொல்கிறான் - தாழ்த்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் கொடுக்கப்படுகிற இட ஒதுக்கீடு 5 ஆண்டுகளுக்கு மேல் கூடாது என்கிறான். அதில் நீதிபதிகளும் நீதிமன்றங்களும் செய்கிற கொடுமை. ஒவ்வொன்றுக்கும்: Untouchability என்கிற வார்த்தை - தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. அப்பொழுது கோயில் வழக்கு ஒன்றில் சொல்கிறான், ‘Untouchability’ என்பதை மேற்கோள் குறிக்குள் போட்டு இருக்கிறார். அம்பேத்கர் அப்படிப் போட்டதற்கு ஒரு காரணம் - தீண்டாமை என்று ஒன்று இல்லை. தீண்டாமை என்பதாக சொல்லப்படுகிற ஒன்று என்ற பொருளுக்காக அப்படி போடுகிறார். ஆனால், இவன் சொல்கிறான், சட்டத்தை ஏற்படுத்தியவர்கள் மேற்கோள் குறியில் போட்டால் அதற்குத் தனி பொருள் உண்டு; சில இடங்களில் தீண்டாமை இருக்கலாம் என்பதற்காகத் தான் மேற்கோள் குறியில் இட்டார் என்று ஒரு தீர்ப்பிலே விளக்கம் சொல்கிறான், இண்டர்பிரடேசன், இவன் பாட்டுக்க விளக்கம் சொல்வான். கேரளாவில் மலையாளத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் -&lt;br /&gt;&lt;br /&gt;நாயர் சொல்வாராம், திருட்டுப் போனால் பரவாயில்லை சாவி என்கிட்டே தானே இருக்கிறது என்று. பெட்டியைத் தூக்கிக்கொண்டு μடிவிட்டானாம் திருடன். மனைவி சொன்னாளாம் பெட்டி திருட்டுபோயிருச்சுன்னு, நாயர், பயப்படாதே சாவி என்கிட்டே தானே இருக்கிறது என்று. அப்படித்தான் இவர்கள், நாடாளுமன்றம் என்ன சட்டம் போட்டாலும் சாவியை வைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் அவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவன் ஒரு விளக்கம் கொடுத்துவிடுகிறான். இந்தப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லப்பட்டதற்காக, நாடாளுமன்றம் கூடி ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவருகிறது. 16(4) தான் இட ஒதுக்கீடு. 16(4) A என்று ஒரு சட்டத்திருத்தம். பதவி உயர்வுகளிலும் இனி இட ஒதுக்கீடு இருக்கும் என்று ஒரு சட்டம். உடனே அதற்கு ஒரு மறுப்பு - இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு வழக்கிலே தீர்ப்பு சொல்கிறான்: அதெல்லாம் கிடையாது, நீ பதவி உயர்விலே இட ஒதுக்கீடு கொடுத்தால் நேரடியாக வருவதையும் சேர்த்து 50 விழுக்காடுக்கும் அதிகமாக வந்து விடுகிறான். அதனால 50 விழுக்காடுக்கும் மேலே ஆகிவிடுகிறது. எனவே இது செல்லாது. திரும்ப 16(4) B என்று ஒரு சட்டத் திருத்தம். அதை கொண்டு வந்தான், அதற்கு என்ன சொன்னான். இல்லை இல்லை 335 என்று ஒரு பிரிவு இருக்கிறது - அது சொல்கிறது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பணி வாய்ப்போ வேளை வாய்ப்போ கொடுக்கிர பொழுது அரசு நிர்வாகத்தில் தகுதி திறமை (merit and efficiency) குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிறது. எனவே அது குறைந்து போய்விடுகிறது. அது ஒரு தீர்ப்பு. அதற்கு திருப்பி நம்ம ஆளுக 335க்கு பார்சியல் அமெண்ட்மெண்ட் என்று அதற்கு ஒரு சட்டத் திருத்தம். திருப்பியும் சொன்னான். இல்லையில்லை நீ பதவி உயர்விலே வருகிறவனுக்கெல்லாம் சீனியாரிட்டி கிடையாது என்று சொல்கிறான் ஒரு தீர்ப்பிலே. இல்லையில்லை கான்சிகுவன்சிஸ் சீனியாரிட்டி உண்டு என்று திருப்பி ஒரு சட்டத்திருத்தம். இருந்த வாய்ப்பைப் பறித்துவிட்டு அதை மீட்டு எடுப்பதற்கு நம்ம ஆளுகளுக்கு 1992 யிலிருந்து 2001 வரைக்கும் 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. 9 ஆண்டுகளாக இந்த உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு தீர்ப்பாகச் சொல்லி பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கூட இட ஒதுக்கீடு இல்லாதது மாதிரி பார்த்துக்கொண்டான். இப்படிப்பட்ட சூழ்ச்சிகரமான நீதிமன்றத்தை இப்படியே நாம் எவ்வளவு நாளுக்கு அனுமதித்துக் கொண்டிருப்பது. ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றுகின்ற சட்டங்களைக் கூட யாரோ இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு செல்லாது என்று சொல்வதும், நம்ம இங்கே கூட அப்படி ஆனது. தமிழ்நாட்டில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லி 1972-யில் ஒரு சட்டம் கொண்டுவந்தார் கலைஞர். ஒரு மனதாக எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், அப்பொழுது ஹண்டே உற்பட ஒரு பார்ப்பனர் சட்டமன்றத்தில் இருக்கிறார், எல்லோரும் சேர்ந்து அதை ஏற்றுக் கொண்டார்கள். அந்த ஒட்டுமொத்த தமிழ்நாடே ஏற்றுக்கொண்ட சட்டத்தை அங்கே ஒரு நீதிபதி செல்லாது என்று சொல்லிவிட்டான். அதைப் போலத்தான் எல்லாவற்றிலும். ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொன்னால் புரியும். நம்முடைய அரசுப் பணியாளர்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை பணி நீக்கம் செய்தது தமிழக அரசு. வழக்கு நடந்தது; உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது வழக்கு. உச்சநீதிமன்றம் தங்கள் தீர்ப்பில் பதிவு செய்தார்கள், தமிழ்நாடு அரசுடைய துணிவான் நடவடிக்கையைப் பாராட்டுகிறோம் என்று எழுதினார்கள். ஒன்றே முக்கால் இலட்சம் அரசுப்பணியாளர்கள் நீக்கப்பட்டது துணிச்சலான நடவடிக்கையாம், அதற்குப் பாராட்டு. ஆனால் மருத்துவம் என்கிற அத்தியாவசிய சேவை, அதில் பணியாற்றிய 20 நாட்கள் பணிக்கு வராமல் போராடியவர்களுக்கு, வேலைக்குப் போகவில்லை என்றால் சம்பளமில்லை இது மிகச் சாதாரணமாக இருக்கிற சட்டம். சம்பளம் இல்லை என்கிறது மருத்துவத் துறை. அவன் நீதிமன்றத்திற்குப் போகிறான். நீதிபதிகள் தீர்ப்பு சொல்கிறார்கள் - வேலைக்கு வராத 20 நாட்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இன்றே முக்கால் இலட்சம் பேரை நீக்கியதற்குப் பாராட்டிய உச்சநீதிமன்றம் 20 நாட்கள் வேலைக்குப் போகாதவனுக்கு ஏன் சம்பளம் தரவில்லை என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள். நீ தானே சொன்னீயே நடவடிக்கை எடுக்க மாட்டேன்னு, அப்ப கொடுத்துவிடு சம்பளத்தை என்கிறான். நடவடிக்கை எடுக்க மோட்டோமென்பது பணி நீக்கம் இல்லை, இடை நீக்கம் இல்லை என்பது தான் நடவடிக்கை. ஆனால் இவன் சொல்கிறான் சம்பளத்தையும் கொடு என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்றைக் கூடச் சொல்லலாம். சங்கராச்சாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்; கொலைவழக்கிற்கு பிணை போடுவதற்கு விடுமுறை நாளில் உயர் நீதிமன்றம் கூடுகிறது. அதையெடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்திற்குப் போனார்கள். உச்ச நீதிமன்றத்திற்குப் போனபொழுது அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை கூடத் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை போட்டல் தான் குற்றம் என்னவென்று தெரியும். ஆனால் அவர்கள் பிணை கொடுக்கும்போதே தீர்ப்பு மாதிரி சொன்னார்கள், இவருக்கு குற்றச் சதியில் எந்தவித தொடர்பும் இருப்பதற்கான அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை. எனவே பிணை வழங்குகிறோம் என்று அங்கே பிணை வழங்குகிறான். குற்றச் சாற்று அறிக்கை கொடுக்கவில்லை, குற்றம் என்னவென்றே தெரியாது, ஆனால் இவன் சொல்லிவிட்டான் குற்றச் சதியில் இவருக்கு தொடர்பு இருப்பதற்கான அடிப்படை/நேரடி ஆதாரம் ஏதுமில்லை என்று. இப்படிச் சொல்லி பிணை கொடுத்துவிட்டு, ஆனால் வழக்கு நடக்கிற போது இந்த வாதத்தை பயன்படுத்தக் கூடாது என்று வேறு சொல்லிவிட்டான். இதை குற்றமில்லை என்றும் சொல்லிவிட்டு, வழக்கு நடக்கிறபோது பயன்படுத்தக் கூடாது என்று வேறு சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்னொருத்தார் மதானி என்று ஒருவர் கோவை சிறையில் 126 கிலோவா உள்ளே வந்தவர் இப்பொழுது 46 கிலோ எடையோடு இருக்கிறார். ஒரு கால் இல்லாதவர். வழக்கு நடந்தது. 1300 சாட்சிகள் விசாரிக்கப் பட்டுவிட்டது. ஒரு சாட்சி கூட மதானி என்ற பெயரைச் சொல்லை அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லவில்லை. வழக்கு விசாரணையில் சாட்சிகள் கேட்டு முடித்தாகிவிட்டது, இனி வாதங்கள் தான் பாக்கியிருக்கிறது. இவர் மருத்துவத்திற்காக உச்சநீதிமன்றத்திற்கு பிணை கேட்டுப் போகிறார். அவன் சொல்கிறான், பிணை வழங்க முடியாது. 9 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டவனுக்கு, 126 கிலோவோடு சிறைக்கு வந்து இப்பொழுது 46 கிலோவாக இருப்பவருக்கு, கேரளாவினுடைய முதலமைச்சர் வந்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டார், மதானிக்கு பிணை வழங்குங்கள் என்று தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து கேட்டார். மதானிக்கு பிணை மறுக்கப்பட்டது, சங்கராச்சாரிக்கு குற்றச்சாற்றெ பதிவு செய்யப்படும் முன் குற்றத்தில் இவருக்குப் பங்கேயில்லை என்று உச்சநீதிமன்றம் பிணை வழங்குகிறது. இந்த உச்சநீதி மன்றம் ஏன் இப்படி இருக்கின்றது? ஏன் என்றால், இதில் இட ஒதுக்கீடு இல்லை. இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது பல பிரிவுகளை அவர்கள் வைக்கிறார்கள். அதில் 312 என்கிற பிரிவு இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி என்பதைப் போல இந்திய நீதிப்பணி என்ற ஒன்றை நிறுவவேண்டும் என்று சொல்கிறது. 1950-யிலேயே அரசியல் சட்டத்தை எழுதிவைத்தவர்கள் எழுதி வைத்துள்ளார்கள். மாவட்ட நீதிபதிகளுக்கு மேலான எல்லாப் பதவிகளும் ஒரு குழுவினால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். எப்படி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அதுபோல தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்திருத்திருக்கிறார்கள். அப்படி ஒருவேளை இருந்து இட ஒதுக்கீட்டில் நம்மவர்களும் வந்திருந்தால் கொஞ்சம் சில பார்வையாவது நமக்குச் சாதகமாக இருந்திருக்கும். ஏனென்றால் இன்றிருக்கும் 26 நீதிபதிகளில் இதுவரைக்கும் உச்சநீதிமன்ற வரலாற்றில், தாழ்த்தப்பட்டோர் 4 பேர் நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். இந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களில் இந்த 60 ஆண்டுகளில் ஒருத்தர் தான் நீதிபதியாக இருந்திருக்கிறார். இரத்தினவேல் பாண்டியன்.&lt;br /&gt;இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள். மீதி எல்லாம் அவர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஏ.ஆர். இலட்சுமணன் இருந்திருக்கிறாரே என்று சொல்லலாம்; ஆனால் அவர் உயர் சாதிக்காரர் தான். பார்ப்பனர் அல்லாதார் என்றாலும் உயர்சாதிக்காரன் தான். எல்லோருமே உயர்சாதிக்காரர்களாக உச்சநீதிமன்றத்தில் உட்கார்ந்துகொண்டு, ஏனென்றால் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முறை இருந்தது. உச்ச நீதிமன்றம் என்னென்ன செய்கிறது என்றால், அதை 1982 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தீர்ப்பு. அதில் சொன்னான் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க உச்சநீதிமன்றம் தான் குழு அமைக்கும். இவனைத் தேர்ந்தெடுக்க இவனே குழு அமைத்துக் கொண்டான். அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. மாநில அரசுப் பரிந்துரை எதுவும் கிடையாது இப்பொழுதெல்லாம். நேராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் அடுத்த நீதிபதிகளை நியமிப்பார்கள். அவன் தனது தீர்ப்புகளின் வழியாக தனக்கு தீர்ப்பு எழுதுகிற வாய்ப்பு இருக்கிறது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக நாடாளுமன்றத்தின், ஏனென்றால் மூன்று தூண்கள் இருப்பதாகச் சொல்லுவார்கள். சட்டத்துறை, ஆட்சித் துறை, நீதித்துறை என்று. ஆனால் நீதித்துறையே எல்லாவற்றின் அதிகாரத்தையும் உறிந்துகொள்கிறான். ஆட்சி நடத்துவதே இவர்கள் என்பதைப் போல, எல்லாவற்றிற்கும். சுதர்சனம் நாச்சியப்பன் குழு அறிக்கை வெளியிட்டபோது, நாடாளுமன்றம் நியமித்த குழு, அறிக்கை எங்களிடம் கொண்டு வந்து கொடு என்று சொன்னான் உயர்நீதி மன்ற நீதிபதி. இவன் தான் சொன்னவன். அப்பறம் நாம் எதிர்ப்புத் தெரிவித்த பின்பு மாற்றிக் கொண்டார்கள் பின்னால். இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாகத்தினுடைய, இவனெல்லாம் சொல்கிறான் கேசவானந்தா பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்தினுடைய அடிப்படை தகர்ந்து போகக் கூடாது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றம் என்பது நாடாளுமன்ற முறை என்பது குடியரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்வது தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடைய கருத்துக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டக் கருத்துக்களைக் கூட இவர்கள் மறுதளிக்கிறார்கள் என்கிற போது இவர்களுக்குக் கொடுத்திருக்கிற அளவுக்கு மீறிய அதிகாரத்தை நாமாகக் கொடுத்துவிட்டோமோ என்ற அச்சம் தான். ஏனென்றால் அவன் வந்து மறுக்கிறான். கேரளா முல்லைப்பெரியார் அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகா காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை ஏற்க மறுக்கிறது; இப்பொழுதும் ஏற்க மறுக்கிறது. ஆனால் நாம் மட்டும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்கிற போது மட்டும் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என்கிறார் தோழர். சட்டமன்ற உறுப்பினர் சொன்னதைப் போல நாம் போதிய எழுச்சியை நமது கிளர்ச்சி உணர்வுகளை நாம் காட்ட மறந்துவிட்டோம், அப்படி இல்லாமல் ஆகிவிட்டோம் என்பது தான் காரணம். ஆக 50 பேர் 100 பேராக இருக்கிற உயர்சாதிக்காரன் தனக்கு இப்போ இன்னும் சொல்லப் போனால் வழக்கு தடை கூட அவன் சொல்கிறான் 1931 கணக்கெடுப்பு என்கிறான், என்.எஸ்.எஸ்.ஒ என்று ஒன்று இருக்கிறது - அவன் சொன்னான் இல்லை இல்லை குறைவாக சொல்கிறான். அவன் வந்து போன 5 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னபோது பிற்படுத்தப்பட்ட மக்கள் 36 விழுக்காடு என்றான். இப்ப சொல்கிறான் 42 விழுக்காடு. எப்படு 6 விழுக்காடு இந்த 5 ஆண்டுகளில் கூடியது என்று தெரியவில்லை. சரி அப்படியே இருந்தாலும் கூட நீ 42 வேண்டுமென்றாலும் வைத்துக் கொள் 36 வேண்டுமென்றாலும் வைத்துக் கொள். 27-யை விட அதிகம் தான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்பது 27. அந்த 27ம் கூட இப்பொழுது இந்த ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களில் 9 விழுக்காடு மட்டும் தான் இட ஒதுக்கீடு தருகிறான். அதுவும் கான்பூர் போன்ற நிறுவனங்களில் 4 விழுக்கடு மட்டும் தான் இந்த ஆண்டு. எல்லா இடத்திலும் 9 இல்லை. சில இடங்களில் 4 விழுக்காடு தான் இந்த ஆண்டு. ஏனென்றால், நாம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கிற இட ஒதுக்கீட்டு அளவிற்கு அந்த இடங்களை உயர்த்த வேண்டும். புது இடங்களை உயர்த்த வேண்டும். அவனுக்கு இடம் குறையாத படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் நீ வாங்கிய 27 இடங்களைத் தொடர்ந்து உனக்குத் தருகிறோம் என்றாலும் கூட, எனக்கு இடம் கொடுப்பதைப் பற்றி அக்கறையில்லை; அவர்கள் வந்துவிடக் கூடாது என்று தடுக்கிற அவர்களை அவ்வளவு சூழ்ச்சியோடும் திமிரோடும் நடந்துகொள்கிற அவர்களுக்கு எதிராக நாம் என்ன எழுச்சியைக் காட்டியிருக்கிறோம்? நாம் நம்முடைய போராட்டங்கள், நமக்குப் பெற்றுத்தருவதற்கு அவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் இருக்கிறார்கள் என்று கருதிக்கொண்டு இருப்போமேயானால் நம்முடைய உரிமைகளை இழந்து விடுவோம். இருக்கிற உரிமைகளையும் இழந்து விடுவோம். புதிதாக ஒன்றும் இல்லை. இருக்கிற நமக்காக வழங்கப்பட்ட உரிமைகளைக் கூட 27 விழுக்காட்டில் 9 விழுக்காட்டை கொடுக்கலாம் என்கிற போதும் கூட அவர்கள் இவ்வளவு எச்சரிக்கையோடும் அவ்வளவு கிளர்ச்சியோடும் போராடுகிறார்கள். நாம், 60 விழுக்காடாக இருக்கிற நாம், பரிந்துரைக்கப்பட்டிருக்கிற 27 விழுக்காட்டை, பெண்களுக்கு 50 விழுக்காடு பெண்களுக்கு 33 விழுக்காடு தருவதற்கே தகராறு பண்ணுகிறார்கள். அதே போலத்தான் 60 விழுக்காடு மக்களுக்கு 27 விழுக்காடு, அதுவும் இந்த ஆண்டு கொடுப்பது 9 விழுக்காடு. இதற்கே அவர்கள் கவனமாக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்றால், சூழ்ச்சியாக நீதிபதிகள் சொல்கிறார்கள். நாம் களத்தில் இறங்கி வீதிகளில் இறங்கி நம்முடைய எதிர்ப்பை அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் காட்டினால் ஒழிய அவர்கள் கொஞ்சமாவது திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை. அப்போதும் திமிறோடு செய்வார்கள் என்பது வேறு. ஆனால் நாம் இந்தக் கருத்துக்களைக் கொண்டுள்ள இயக்கங்கள், இதற்காக இயக்கங்கள் எடுக்கிற அமைப்புகள், அவர்களுக்குத் துணையாக நாமும் இந்தச் செய்திகளை மற்றவர்களிடம் பரப்புவதன் வழியாக பொதுக்கருத்தை உருவாக்குவதில் துணைபுரிய வேண்டும் என்று வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-4452741966134163903?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/4452741966134163903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=4452741966134163903' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/4452741966134163903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/4452741966134163903'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/08/blog-post_09.html' title='இடஒதுக்கீடும் நீதிமன்றங்களும் - கொளத்தூர் மணி'/><author><name>திராவிட தமிழர்கள்</name><uri>http://www.blogger.com/profile/01449620850052649523</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-7222152154720761541</id><published>2007-08-07T16:05:00.000+05:30</published><updated>2007-08-07T16:07:16.210+05:30</updated><title type='text'>"பெரியார்" திரைக்காவியம் நூறாவது நாள் விழா!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RrhLF2XmmaI/AAAAAAAAACc/FMv45q4N0IA/s1600-h/Flex_15x10-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5095905542235658658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RrhLF2XmmaI/AAAAAAAAACc/FMv45q4N0IA/s400/Flex_15x10-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-7222152154720761541?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/7222152154720761541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=7222152154720761541' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/7222152154720761541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/7222152154720761541'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/08/blog-post.html' title='&quot;பெரியார்&quot; திரைக்காவியம் நூறாவது நாள் விழா!'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RrhLF2XmmaI/AAAAAAAAACc/FMv45q4N0IA/s72-c/Flex_15x10-1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-5590188299000337956</id><published>2007-07-27T12:14:00.000+05:30</published><updated>2007-07-27T12:37:03.179+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேம்புலியம்மன்'/><title type='text'>நம் மண்ணின் தெய்வங்கள் - வேம்புலியம்மன்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RqmZS2XmmXI/AAAAAAAAACE/OUGGlnLzP-U/s1600-h/neem.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5091769402830264690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RqmZS2XmmXI/AAAAAAAAACE/OUGGlnLzP-U/s400/neem.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"என் புள்ளை சீரியஸா கெடக்குதே. அம்மா காப்பாத்தும்மா"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"என் பொண்ணுக்கு கல்யாணம் சீக்கிரமா ஆகணும்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"ஆத்தா நான் பத்தாவது படிக்கிறேன். நல்லபடியா பாஸ் ஆகோணும்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"எம்மவனுக்கு நல்ல வேலை கெடைக்கணும்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"என்னோட வியாதியெல்லாம் தீர்ந்து நல்லபடியா ஆரோக்கியமா வாழணும்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;- பிரார்த்தனைகள் பலவகை. பிரார்த்திக்கப்படும் பிரார்த்தனைகள் எல்லாமே நிறைவேறி விடுகின்றதா என்ன?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த வேப்பமரத்தின் கீழே பிரார்த்திக்கப்படும் பிரார்த்தனைகள் அனைத்துமே நிறைவேறிக் கொண்டிருந்தது. பிரார்த்தித்தவர்கள் விவசாயக் கூலிகள். அன்றாடங் காய்ச்சிகள். அப்பகுதி மக்களுக்கு அந்த வேப்பமரம் தான் கற்பகத்தரு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சென்னை கிராமமாக இருந்த காலம் அது. சென்னைக்கு அருகில் பழவந்தாங்கல் என்கிற கிராமம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை வயல் பரப்பு. வயல்களுக்கு நடுவே அந்த வேப்பமரம். அந்த மரத்துக்கு கீழே நின்று என்ன பிரார்த்தனை செய்தாலும் அது நிறைவேறிவிடும் என்று அந்த கிராமத்து வாசிகளுக்கு நம்பிக்கை. அம்மரத்தையே அம்மனாக வழிபட ஆரம்பித்தார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒருநாள் காலை விவசாயி ஒருவர் அந்த விளைநிலத்தை உழுதுக் கொண்டிருக்கிறார். களைப்பேற்படும் போதெல்லாம் தூரத்தில் தெரியும் வேப்பமரத்தை பார்ப்பார். அம்மரத்தை பார்க்கும் போதெல்லாம் தன் தாயை பார்ப்பது போன்ற உணர்வு அவருக்கு. களைப்பு நீங்கி மீண்டும் உழைப்பார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உழுது கொண்டிருந்த போது கலப்பை எது மீதோ பட்டு சத்தம் எழுப்பியது. அப்பகுதியில் குன்றுகள் அதிகம். அதனால் விளைநிலங்களில் கூட பாறைகள் இருப்பது சகஜம். பாறை எதன் மீதோ கலப்பை மோதி விட்டது என்று நினைத்தவர் தன் பணியை தொடர ஆரம்பித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வேலை முடிந்து கூழ் குடிக்க திரும்பியவர் நிலமெல்லாம் ரத்தமாக இருப்பதை பார்த்து அதிர்ந்தார். கலப்பை ஒரு பாறை மீது மோதியதல்லவா? அந்தப் பகுதியில் இருந்து இரத்தம் ஊற்றெடுத்து வயலை சிகப்பாக்கிக் கொண்டிருந்தது. அக்கம் பக்கம் வயல்களில் வேலை பார்த்தவர்கள் ஓடிவந்து அந்த இடத்தை பார்வையிட்டார்கள். ஒரு கல்லில் இருந்து இரத்தம் வடிவது அவர்களுக்கு அதிசயமாக இருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒரு கிராமத்துப் பெரியவரின் ஆலோசனையின் படி அந்த கல்லை தோண்டி எடுக்க ஆரம்பித்தார்கள். என்ன அதிசயம்? அது கல்லல்ல... அம்மன்! இவ்வளவு நாளும் தங்களுக்கு வேப்பமரம் மூலமாக பிரார்த்தனைகள் நிறைவேறியதன் காரணத்தை கண்டு கொண்டார்கள். அம்மனை அந்த வேம்புவுக்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்று வரை வேம்புலியம்மன் பழவந்தாங்கலில் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் கேட்பதை தங்குதடையில்லாமல் வழங்கிக் கொண்டிருக்கிறார். வேம்புலியம்மன் திருக்கோயிலுக்கு செல்ல வேண்டுமானால் சென்னைக்கு அருகில் இருக்கும் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-5590188299000337956?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/5590188299000337956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=5590188299000337956' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5590188299000337956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5590188299000337956'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/07/blog-post.html' title='நம் மண்ணின் தெய்வங்கள் - வேம்புலியம்மன்!'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RqmZS2XmmXI/AAAAAAAAACE/OUGGlnLzP-U/s72-c/neem.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-1041090125542548850</id><published>2007-06-29T15:30:00.000+05:30</published><updated>2007-06-29T16:07:39.627+05:30</updated><title type='text'>நம் மண்ணின் தெய்வங்கள் - ஊத்துக்காடு எல்லையம்மன்!</title><content type='html'>காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் ஒருவன் (சோழ சிற்றரசன் என்கிறார்கள்) ஒரு நாளைக்கு வேட்டைக்குப் போனான். அடர்ந்த வனம். வனத்துக்குள் நீண்டதூரம் சென்றுவிட்ட மன்னனுக்கு நாக்கு வறண்டுவிட்டது. அருகில் நீர்நிலை ஏதுமில்லை. தனக்கு துணையாக பாதுகாவலர்களை அழைத்து வராத மன்னன் பைரவன் என்ற பெயர் கொண்ட வேட்டைநாய் ஒன்றை மட்டுமே துணையாக அழைத்து வந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாக்கு வறண்டு மயக்க நிலைக்கு போய்விட்ட மன்னன் குதிரையை விட்டு இறங்கி ஒரு மரநிழலில் ஓய்வெடுக்கத் தொடங்கினான். மன்னனின் வேட்டைநாய் நீர்நிலை அருகில் இருக்கிறதா என்று தேடத்தொடங்கியது. மன்னனுக்கோ தான் உயிர் பிழைப்பதே கடினம் என்ற சந்தேகம் வரத்தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் காட்டின் நடுவே ஓரிடத்தில் ஊற்று இருப்பதை பைரவன் கண்டுபிடித்தது. அந்த இடத்துக்கு மன்னனை அழைத்து வந்தது. மன்னன் நீர் அருந்த நீர்நிலையில் காலைவைத்தபோது நீர்நிலையின் மையத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் வரிசையாக மன்னனை நோக்கி மிதந்து வந்தது. ஆச்சரியமடைந்த மன்னன் நீர் அருந்திவிட்டு வனத்தை விட்டு வெளியே சென்று சில வலைஞர்களை அந்நீர்நிலைக்கு அழைத்து வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீர்நிலையின் நடுவே ஏதோ சக்தி இருப்பதாகவும் அந்த சக்தியால் தான் எலுமிச்சை பழங்கள் உருவாகி மிதந்து வருவதாகவும் மன்னன் நினைத்தான். வலைஞர்கள் நீர்நிலையின் மையத்தில் வலையைப் போட்டு இழுக்க வலையில் இருந்தது ஒரு அம்மன் சிலை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அம்மன் சிலையை அந்த நீர்நிலையின் கரையிலேயே பிரதிஷ்டை செய்து மன்னன் வணங்கினான். காட்டுக்கு நடுவே ஊற்றில் இருந்து வந்த அம்மன் என்பதால் அந்தப் பகுதியை ஊற்றுக் காடு என மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். பின்னர் அதுவே ஊத்துக்காடு என மருவியது. அந்த நீர்நிலையை கண்டுபிடித்தது பைரவன் என்ற வேட்டைநாய் என்பதால் பைரவனின் பெயரில் பைரவன் குளம் என்று அந்நீர்நிலை அழைக்கப்படுகிறது. இன்றும் ஊத்துக்காடுக்கு சென்றால் தாமரைப் பூக்கள் நிரம்பிய பைரவன் குளத்தை நீங்கள் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் கழித்து மன்னனின் பாதுகாப்பாளர்களில் ஒருவராக பணியாற்றிய நாகல் என்பவரின் கனவில் அம்மன் வந்தார். “என்னை இந்த ஊத்துக்காடுக்கு கிழக்கு எல்லையில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்தால் இந்த ஊர் எல்லையைக் காத்து நின்று மக்களுக்கு அருள்பாலிப்பேன்” என்று வாக்களித்தார். தன் கனவில் வந்த அம்மனின் ஆணையை ஏற்று நாகல் என்பவரால் 1600 வாக்கில் ஊத்துக்காடு எல்லையம்மனுக்கு ஆலயம் எழுப்பப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கருவறையில் எல்லையம்மனுக்கு பெரிய சிலை இருந்தாலும் மன்னனால் கண்டெடுக்கப்பட்ட பழைய சிறிய சிலையும் அருகிலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊத்துக்காடு சென்னையிலிருந்து காஞ்சி செல்லும் வழியில் வாலாஜாபாத்துக்கு மூன்று கி.மீ முன்பாகவே இருக்கிறது. ஆடி மாதம் இந்த கோயிலுக்கு விசேஷம் என்றாலும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தின் எல்லா பகுதி சிறுதெய்வங்களுக்கும் செய்யப்படும் முறையிலேயே இங்கேயும் பொங்கல் வைத்தல், ஆடு-கோழி பலியிடல் போன்ற வழிபாட்டுமுறை அமைந்திருக்கிறது. அர்ச்சகர்களாக பார்ப்பனரல்லாத சமூகத்தினர் பணியாற்றுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.ஆர். ஈஸ்வரி ஒரு பக்திப் பாடலில் 108 அம்மன் பெயர்களை வரிசையாக சொல்லுவார் இல்லையா? அதில் ஊத்துக்காடு எல்லையம்மனும் இருப்பார். ஊத்துக்காடு வாசிகள் இதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள் :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் மண்ணின் தெய்வங்கள் வரிசையில் இதற்கு முன்பாக போடப்பட்ட பதிவுகள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dravidatamils.blogspot.com/2006/11/blog-post_26.html"&gt;தீப்பாய்ந்த மங்கம்மாள்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dravidatamils.blogspot.com/2006/10/1_30.html"&gt;அண்ணன்மார் சாமி!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dravidatamils.blogspot.com/2006/07/blog-post_115226696879550528.html"&gt;நம் தெய்வங்கள்!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-1041090125542548850?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/1041090125542548850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=1041090125542548850' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/1041090125542548850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/1041090125542548850'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/06/blog-post_29.html' title='நம் மண்ணின் தெய்வங்கள் - ஊத்துக்காடு எல்லையம்மன்!'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-5781647607818008522</id><published>2007-06-06T14:18:00.001+05:30</published><updated>2007-06-06T14:20:17.746+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>பெரியார் பேசுகிறார்!</title><content type='html'>சங்கராச்சாரிகளும் சந்நிதானங்களும் ஒழுக்கமாக  வாழ்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;எங்களைப் பார்த்து முன்பு எல்லோரும் தேசத் துரோகிகள்,  நாசகாரர்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. அவ்வளவு சேவை  செய்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் கேட்கிறோம்: பறையனுக்கும், சக்கிலிக்கும்  எங்கிருக்கிறது சுயராஜ்யம்? ஆகவே முதலில் சாதி ஒழிய வேண்டும் என்று கூறி, சாதியை  ஒழிக்கும் வேலையில் ஈடுபடும் பொழுதுதான், எங்களை நாத்திகர் என்று கூறுகிறார்கள்.  இந்த வேலையை இப்பொழுது மந்திரிகள், நீதிபதிகள், பார்ப்பனப் பத்திரிகைகள் அனைவரும்  செய்து வருகின்றனர். இதைப் பற்றிய கவலை எங்களுக்கில்லை. சாதியைக் காப்பாற்ற கடவுள்  எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்க பணமில்லை என்று கூறுகிறார்கள்.  கோயில்களில் ஆயிரக்கணக்கில் நிலங்களும் நகைகளும் இருக்கின்றனவே, அதை யார் வயிற்றில்  வைத்து அழுவது? இந்த நாட்டு மக்களின் கல்வியைப் பற்றிக் கவலையில்லாமல் சாதியைக்  காப்பாற்ற கோயில் கட்ட வேண்டும் என்றும், கோயில்களை ‘ரிப்பேர்' செய்ய  வேண்டுமென்றும் கூறுகிறாய். நேற்றுகூட பழனியாண்டவர் கோயிலுக்கு லட்சக்கணக்கில்  செலவு செய்யப் போவதாகச் சொன்னார்கள். இந்தப் பணத்திற்கு எத்தனை கல்லூரிகள்  கட்டலாம். வருடத்திற்கு கோயில்கள் மூலம் 45 லட்ச ரூபாய் வருகிறதே, எப்படி வருகிறது?  1956ஆம் வருடத்திலும் இந்த அக்கிரமமா?&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள்  பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன்.  நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து  யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது  வாழ்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும்  நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி  இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய  இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை  பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும்  சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா  என்று வேண்டிக் கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார்  இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக்  கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க்  கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும்  நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார்.  அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை  செய்கிறானா என்று?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம்  பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின்  பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக  நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும்,  உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சக்கணக்கான மக்கள்  மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு  என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும்  மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும்  இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும்  தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில்  இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும்  விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன்  தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு  மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வட  நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு  வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள்.  புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான்  கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று  சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து  ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா,  கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட  பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;(26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற  திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-5781647607818008522?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/5781647607818008522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=5781647607818008522' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5781647607818008522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5781647607818008522'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/06/blog-post.html' title='பெரியார் பேசுகிறார்!'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-918415387911695836</id><published>2007-05-30T20:25:00.000+05:30</published><updated>2007-05-30T21:03:16.046+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>முண்டச்சி நடிக்கலாமா?</title><content type='html'>அவ்வையார் படம் அரை நூற்றாண்டுக்கு முன்பு மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியம். அவ்வையாராக நடித்த கே.பி. சுந்தராம்பாள் அக்காலக்கட்டத்திலேயே ஒரு லட்சரூபாயை அப்படத்தில் நடித்ததற்காக சம்பளமாக பெற்று தமிழ் திரை சரித்திரத்தில் இடம் பிடித்தார். ஜெமினி பிக்சர்ஸின் எஸ்.எஸ். வாசன் இப்படத்தை தயாரித்து பெரும் லாபம் சம்பாதித்தார். இவையெல்லாம் நமக்கு தெரிந்த செய்திகள். இத்திரைப்படத்தின் பின்னணியில் நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்று பலரும் அறியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வையார் கதையை திரையில் கொண்டுவர முடிவு செய்த ஜெமினியின் கதை இலாகா கதை விவாதத்துக்காக அமர்ந்திருக்கிறது. இது ஏற்கனவே நாடகமாக பெரும் வெற்றி பெற்ற கதை என்றாலும் திரைக்காக சில புதிய விஷயங்களை மெருகேற்றுகிறார்கள். கதையின் பாத்திரங்களுக்கு யார் யார் என்ற விவாதத்தின் போது அமரர் எஸ்.எஸ். வாசன் அவ்வையாராக கே.பி.எஸ். அவர்கள் நடித்தால் சிறப்பாக அமையும் என்று கருத்து தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விவாதத்தில் அமர்ந்திருத்த கதை இலாகாவைச் சேர்ந்த சிலர் உடனடியாக மறுப்பு தெரிவிக்கிறார்கள். அவ்வையார் பாத்திரம் இந்து மதமக்களின் மனதில் பதிந்த தெய்வீக பாத்திரம். சுந்தராம்பாள் ஒரு விதவை. "முண்டச்சியை வைத்து படமெடுத்தால் யார் பார்ப்பார்கள்? அவரை வைத்து படமெடுத்தால் படம் படுதோல்வி அடையும்" என்றும் எச்சரிக்கிறார்கள். சினிமாவுலகில் மூடநம்பிக்கைகள் கொடிகட்டிப் பறந்த காலம் அது. வேறு வழியில்லாமல் அரை மனதுடன் எஸ்.எஸ். வாசனும் சுந்தராம்பாளை நடிக்க வைக்க வேண்டாமென்று ஒப்புக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவத்தை கேள்விப்பட்ட வி.ஐ.பி. ஒருவர் கடும் கோபமடைகிறார். உடனடியாக வாசனின் இல்லத்துக்கு தானே நேரில் செல்லுகிறார். வாசன் வீட்டின் பெரிய கதவு அவரை கண்டதும் தானாக திறக்கிறது. ஊஞ்சலில் ஏதோ யோசனையில் இருந்த வாசன் இவரை கண்டதும் ஓடிவருகிறார்.&lt;br /&gt;"என்னிடம் சொல்லியிருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே" என்கிறார் வாசன் மிகவும் பணிவுடன். அந்த வி.ஐ.பி. மீது அபரிதமான அன்பும், மரியாதையும் கொண்டவர் பண்பாளர் எஸ்.எஸ். வாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நம் வி.ஐ.பி., "எனக்கு உங்களிடம் ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நான்தான் உங்களை நாடி வரவேண்டும். அதுதான் முறை." என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசன் அவர் என்ன உதவி கேட்கப்போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறார்.அப்போது அவர், "சுந்தராம்பாளை முண்டச்சி என்ற காரணத்தினால் அவ்வையாரில் நடிக்க வைக்காமல் தடை செய்தது தன்னை மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதை தாங்க முடியாது" என்று தன் மன வேதனையை சொல்லி கவலைப் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாமல் அவ்வையார் படத்தை சுந்தராம்பாளை வைத்தே எடுக்க வேண்டும் எனவும், அப்படி அந்தப் படம் இந்தக் காரணத்திலால் தோல்வியடையுமாயின், அந்தத் தோல்விக்குரிய விலை எத்தனை லட்சமாக இருந்தாலும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே வாசன், "உங்கள் சொல்லை நான் என்றாவது மீறியிருக்கிறேனா" என்று சொல்லி உடனடியாக அவ்வையார் படவேலைகளை கவனிக்க ஆரம்பித்தார். அவ்வையாராக கே.பி.எஸ். அபாரமாக நடித்துக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வரலாறு காணாத பெரும் வெற்றி. பேரறிஞர் அண்ணா இப்படத்தை பலமுறை விரும்பிப் பார்த்ததாகச் சொல்லுவார்கள். இப்படத்தில் நடித்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை ஏற்கனவே கே.பி.எஸ்.சுக்கு வாசன் வழங்கியிருந்தார். படத்தின் பெரும் வெற்றியைக் கண்ட அவர் இன்னொரு ஒரு லட்ச ரூபாயை கே.பி.எஸ்.சுக்கு வழங்கினார். அந்தக் காலத்து ஒரு லட்சரூபாய் என்பது இக்காலத்தில் ரஜினிகாந்த் வாங்கும் சம்பள மதிப்பை விட அதிகம் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தராம்பாள் தன்னை வைத்து வாசனிடம் படம் எடுக்க சொன்ன வி.ஐ.பி.யின் வீட்டுக்கு நேரே செல்லுகிறார். தான் வாங்கிய கூடுதல் ஒரு லட்சரூபாயை அவர் பாதத்தில் சமர்ப்பித்து கண்ணீருடன் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே வி.ஐ.பி. பதறியபடி, "எனக்கு காலில் விழுவதே பிடிக்காது. இந்தப் பணம் உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு. நான் உங்கள் திறமையின் மீது மதிப்பு வைத்தே வாசனிடம் சிபாரிசு செய்தேன். அதுமட்டுமல்லாமல் எந்தப் பெண்ணையும் பெண் என்ற ஒரே காரணத்துக்காக தாழ்த்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் கே.பி.எஸ். அந்த வி.ஐ.பி.க்கு எதிரான கொள்கையுடையவர். அவருக்கு எதிராக காங்கிரஸாருடன் இணைந்து டெல்லியில் பல பாடல்களை பாடியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திர நாயகர்கள் வரலாற்றில் அத்திபூத்தாற்போல எப்போதாவது தான் தோன்றுவார்கள். தமிழ் சமூகம் செய்த பாக்கியம் அந்த சரித்திர நாயகர் தமிழ்நாட்டிலே 125 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றினார். யார் அந்த சரித்திரநாயகன் என்பதை ஊகித்திருப்பீர்கள். பெண்விடுதலையையும், சுயமரியாதையையும் தன் இருகண்களாக போற்றிய மாவீரர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தான் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வருங்காலத்தில் இதுபோன்ற வரலாற்றுநாயகர் தோன்றுவார் என்று உணர்ந்துதானோ என்னவோ அவ்வைக் கிழவி இப்படி பாடி வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;strong&gt;"இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர்பட்டாங்கில் உள்ளபடி"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;- ஈழத்துப் பாடகர் தேனிசை செல்லப்பா சொல்ல நேரில் கேட்டவர் தோழர் லீனாராய், ஜெர்மனி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-918415387911695836?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/918415387911695836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=918415387911695836' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/918415387911695836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/918415387911695836'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/05/blog-post_30.html' title='முண்டச்சி நடிக்கலாமா?'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-8772592419983811301</id><published>2007-05-23T17:50:00.000+05:30</published><updated>2007-05-23T18:00:10.244+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>தந்தை பெரியார் - வாழ்க்கை வரைபடம் - 2</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;தன்னலமற்ற சமூகத் தொண்டுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோடு நகரில் பெயர் பெற்ற செல்வச் செழுமையுள்ள ஒரு வணிகராகத் திகழ்ந்த நிலையில்  தன்னலம்அற்ற சமூகப் பணிகள் ஆற்றும் பொது வாழ்க்கையிலும் பெரியார் அடிவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி: பிளேக் எனப்படும் கொடுமையான தொற்றுநோய் ஈரோட்டைத் தாக்கியது. அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்தனர்; ஆயிரக் கணக்கானோர் தங்கள்  உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தனர். ஆனால் மற்றப் பணக்கார வணிகர்களைப்  போல, தமது சொந்த பிறந்த நகரைத் துறந்து வெளியேறவில்லை உயர்ந்த பண்பாளரான  இந்தப் பெருமகன். பிளேக் நோய் தங்களைத் தொற்றிக் கொள்ளுமோ என்னும் அச்சத்தில்  இறந்தவர்களைத் தொடாமலே அவர்களின் நெருங்கிய உற்றார் உறவினரே ஒதுங்கி  விலகிவிட்ட பொழுதும், இவரோ தன் தோழர்களுடன் அந்தச் சடலங்களைத் தம்  முதுகின்மீதே சுமந்து சென்றார் சுடுகாட்டுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோடு கடைத் தெருவில் உள்ள மற்ற வணிகர் அனைவரிடமும் எல்லையற்ற செல்வாக்கை  இவர் பெற்றிருந்தார். வணிகர்களுக்கு இடையே வெடிக்கும் சண்டைகளை நடுநிலையோடும் நீதியுணர்வோடும் இவர் தீர்த்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;தமிழ்ப் புலவர்களுடன் நட்புறவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1905-06&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பவுத்த நெறி மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளால், பார்ப்பனரின் இந்து மதத்தையும் சாதி  முறையையும் கடுமையாகக் கண்டித்தார் ஆதிதிராவிடரான பண்டிதமணி அயோத்திதாசர்  என்னும் தமிழ் அறிஞர். இவரது (பெரியாரின்) இளமைக் காலத்தில் அவர் இவரைக் கவர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கரூர் நகரில் புலவர் மருதையா பிள்ளை என்னும் தமிழறிஞர் வாழ்ந்தார். பார்ப்பனர்  பரப்பிவந்த இந்து மதம், சாதி முறை, இதிகாசங்களின் கற்பனைப் புரட்டுக் கதைகள், வேத  சாத்திரங்கள் ஆகியவற்றின் மீது அவர் தொடுத்த கடுமையான கண்டனக் கணைகளும்,  அறிவுக் கூர்மையான வாதங்களும் கரூர், ஈரோடு போன்ற நகரங்களைச் சுற்றியுள்ள  பகுதிகளில் வாழ்ந்த மிக எளிய நாட்டுப்புற மக்களையும் கூட கவர்ந்தன; அவரது  நெஞ்சார்ந்த நட்புறவு பெரியாரின் உள்ளத்தில் நாத்திகம் என்னும் கடவுள் மறுப்புக்  கோட்பாட்டை விதைப்பதிலும், ஊடுருவும் நுண்ணறிவுப் பகுத்தறிவுச் சிந்தனையாளராக இவரை உருவாக்குவதிலும் தலையாய பங்களிப்பைத் தந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு தமிழறிஞரான துறவி கைவல்யம் அடிகளாரின் உள்ளார்ந்த நட்புறவும் பெரியாரின்  பகுத்தறிவுப் பார்வைக்குச் செழுமை சேர்த்தது. பொறியாளர் பா.வே. மாணிக்க நாயக்கர்  போன்ற கல்வியாளர்களும் மிக உயர்ந்த அரசு அதிகாரிகளும், இவருடைய முற்போக்குக்  கருத்துகளால் கவரப்பெற்று இந்த ஈரோடு வழிகாட்டிப் பெருவிளக்குடன் நட்புறவு கொண்டனர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1909&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பது வயதிலேயே குழந்தைத் திருமணம் செய்யப்பட்டுக் கணவனை இழந்த கைம்பெண்  ஆகிவிட்டார் இவர்தம் தங்கையின் மகள். தம் குடும்ப உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்குப்  பணிந்துவிடாமல், அவரது மறுமணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இந்திய விடுதலை இயக்கத்திற்காகத் தியாகங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1918&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் ஈரோடு நகராட்சியின் தலைவர் ஆனார். இந்து மதத்தின் மீதும் சாதிமுறை மீதும்  குறிப்பாக, திராவிட இனத்தை அடக்கி ஒடுக்குவதற்காகப் பார்ப்பனர் திணித்த கொடிய  தீண்டாமை மீதும் இவர் அழுத்தமான வெறுப்புக் கொண்டபோதிலும், இவருடைய  தடம்புரளாத நேர்மையும் தலைசிறந்த நிருவாகத் திறனும் பல்வேறு பொதுத் துறை  அமைப்புகளில் எண்ணற்ற பதவிகளைப் பரிசுகளாக ஈட்டித் தந்தன இவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர் ஆட்சி, சிறப்பு அறமன்ற நடுவராக (கவுரவ மாஜிஸ்டிரேட்) இவரை அமர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;மாவட்டக் கழகம், வட்டக் கழகம், நகர வங்கி, மதத் தேவ°தான அறக்கட்டளை, பொது  நூலகம், போருக்கு ஆள் தேர்வுக்குழு, வேளாண்மையாளர் சங்கம், வணிகர் சங்கம், மகாஜன  பள்ளி நிருவாகக்குழு - இப்படிப் பல அரசுத்துறை - மற்றும் தனியார் துறை அமைப்புகளில்  தலைவர், துணைத் தலைவர், செயலாளர் - என்றெல்லாம் 29 சிறப்பு நிலைப் பதவிகளை  இவர் ஏற்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணற்ற இன்றியமையாத நல்வாழ்வுத் திட்டங்கள் இவரால் செம்மையாக நடைமுறைப்  படுத்தப்பட்டன. குறிப்பாக, குடிநீர்த் திட்டம் திறமையாகச் செயல்முறைக்கு வந்தது. பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்த பொழுது, பின்னாளில் இந்தியாவின்‘கவர்னர் ஜெனரல்’ ஆன திரு. சி. இராசகோபால ஆச்சாரி யாருக்கும் (இராஜாஜி) இவருக்கும்  இடையே நட்புறவு மலர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1919&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு. பி. வரதராசுலு நாயுடு, திரு. சி. இராசகோபால ஆச்சாரியார் ஆகியோர், ‘மகாத்மா’  காந்தி வழி நடத்தும் தேசிய காங்கிரசுக் கட்சியில் சேருமாறு இவரை விரும்பி  வேண்டிக்கொண்டனர். ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை விலக்கி விட்டுக் காங்கிரசுக்  கட்சியில் உறுப்பினராகப் பெரியார் தம்மை இணைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1920&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து ‘மகாத்மா’ காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை  இயக்கத்தில் மிக்க ஆர்வத்துடன் இவர் ஈடுபட்டார். அந்தத் தலைவரின் எழுச்சி அழைப்பை  ஏற்று, தாம் மேற்கொண்டிருந்த 29 பொதுத்துறைப் பதவிகள் அனைத்தையும் துறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  பவுன் விலை உருபா 10 (பத்து) கூட விற்காத அந்தக் காலத்தில் ஆண்டுதோறும் உருபா  20,000 ஈட்டி வந்த தொழில் நிறுவனத்தையே மூடிவிட்டார்; குடும்ப வணிகத்தையே  துறந்தார். ஈரோட்டில் பிறப்பிக்கப்பட்ட 144 சட்டப் பிரிவு தடைச் சட்டத்தை மீறி முதன் முதலாக இவர்  கைது ஆனார். மகாத்மா காந்தியடிகளைப் பெரியார் நம்பினார்; தம் தலைவராக ஏற்றுக்  கொண்டார். எனவே அவர்தம் உண்மைத் தொண்டராகக் காந்தியடிகளின் ஒவ்வொரு  சொல்லுக்கும் செயல் வடிவம் தர இவர் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: கதர் நூலைச் சக்கரத்தின் மூலம் இவர் நூற்றார். கதர்த்  துணியையே அணிய வேண்டும் என்று காந்தியடிகள் கட்டளை விடுத்த உடனேயே விலை  உயர்ந்த வெளிநாட்டுத் துணிகளை வீசி எறிந்துவிட்டு, கதர் ஆடையையே அணிய  முற்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், 80 வயதுள்ள தம் அன்னையார் உள்ளிட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்  அனைவரையுமே கதர் ஆடை மட்டுமே உடுத்தக் கட்டாயப்படுத்தினார்! அதுவரை துய்த்த  ஆடம்பரத்தைத் துறந்து, தமது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலுமே எளிமைப்  பண்பைக் கண்டிப்பான இயல்போடு கடைப்பிடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மதுவிலக்குக் கொள்கையை நிலைநாட்டியவர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1921&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுவிலக்குக் கொள்கை முதன் முதலில் உருவாக்கப் பெற்றது பெரியார் அவர்களின்  இல்லத்திலேயே. காந்தியார் ஈரோடு வந்து இவரது இல்லத்தில் தங்கினார். அப்பொழுது,  குடிபோதைக் கணவர்களால் மிகக்கொடிய துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மனைவியரின்  தாங்கொணாத மனவலியைப் பற்றிப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை  கண்ணம்மாளும் அவரிடம் விளக்கிக் கூறினர்; மதுப் பொருள்களைத் தடை செய்யும் கொள்கையை வகுத்தே தீர வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினர். இதற்காக ஒரு  போராட்டத்தையே நடத்த வேண்டும் என்றும் வாதிட்டனர்.&lt;br /&gt;போற்றத்தக்க இந்தக் கருத்தினை காந்தியார் உடனே ஏற்றுக் கொண்டார்.&lt;br /&gt;மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆங்கிலேயர் அரசை வலியுறுத்தி நாடு  முழுவதும் காங்கிரசுக் கட்சியினர் கள்ளுக்கடை முன்னால் மறியல் செய்ய வேண்டும் என்று  அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுவிலக்குக் கொள்கையை நிலைநாட்ட காந்தியார் விடுத்த அந்தக் கட்டளையை நிறைவேற்று வதற்காக, தம்முடைய பரந்த தோப்புகளில் கள் உற்பத்திக்காக  நின்ற 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பெரியார் வேரோடு வெட்டி வீழ்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலும் உறுதியான பிடிப்புக் கொண்டிருந்தார் இவர்.  ஈரோடு நகரில் போராட்ட வீரர்களை வழிநடத்திச் சென்று கள்ளுக்கடை முன்னால் மறியல்  புரிந்தார் பெரியார். இவர் கைது செய்யப்பட்டு, ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1922&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்தம் மனைவி நாகம்மாளும் தங்கை கண்ணம்மாளும் கிளர்ச்சியில் மிகத் துணிச்சலோடு  குதித்தனர்; கள்ளுக்கடை முன்னால் மறியல் செய்வதற்குப் பெண் தொண்டர்களைத் தாங்களே  வழி நடத்திச் சென்றனர். அந்தப் போராட்டத்தை நிறுத்திவிடுமாறு, காங்கிரசுக் கட்சியின்  முன்னணித் தலைவர்கள் சிலர் ‘மாமனிதர்’ காந்தியாரை வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அவரோ கிளர்ச்சியை நிறுத்தும் அத்தகைய முடிவைத் தம்மால் மட்டுமே எடுக்க முடியாது  என்றும் ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளின் கைகளில்தான் அது இருக்கிறது என்றும்  அவர் உறுதிபடவே உரைத்தார். பெரியார் அவர்களின் மனைவியும் தங்கையுமே அவர்  குறிப்பாய் உணர்த்திய இரு பெண்மணிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1922&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் ஆனார். திருப்பூரில் நடைபெற்ற அந்தக்  கட்சியின் மாநில மாநாட்டில், திராவிட இனத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் அனைவரும்  வழிபாடு செய்ய கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு  தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸ் குழுவில் இருந்த பார்ப்பனர்கள் அந்தத் தீர்மானம் நிறைவேறாதபடி தடுத்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களது ‘வருண தருமம்’ என்னும் சாதி முறையைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் காட்டிய  வெறித்தனத்தால் மிகுந்த ஆத்திரம் அடைந்த பெரியார் - ஆரியரின் மனுசுமிருதி,  இராமாயணம் முதலானவற்றை கொளுத்த வேண்டும் என்று அறிவித்தார். ஏனெனில், சாதி  மற்றும் மூடநம்பிக்கை என்னும் கொடுமைகளால் திராவிட இனத்தையே அடக்கி ஒடுக்கி  இழிவுபடுத்துவதற்குத் தங்கள் மதக் கருவிகளாக அவற்றை வஞ்சகமான பார்ப்பனர்  பயன்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1923&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதக் கோவில்களில் பார்ப்பனர் நடத்திய சுரண்டல் வேட்டைக்கு முடிவு கட்ட -  பனகல் அரசர் தலைமையில் அமைந்த நீதிக் கட்சி அரசு, சென்னை மாகாண சட்ட  மேலவையில், ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்து சமய அறநிலையத் துறை அமைக்க வழி  வகுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாம் ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்த போதிலும் கூட நீதிக் கட்சி ஆட்சி நிறைவேற்றிய  அந்தச் சட்டத்தைப் பெரியார் ஆதரித்தார். இந்துமத ஆரியர்களால் ஒடுக்கி  உருக்குலைக்கப்பட்ட திராவிட இனத்தவருக்குச் சமூக நீதியும், கல்வி, வேலை வாய்ப்பு,  பொருளியல் போன்றவற்றில் சம உரிமைகளும் அடைய வேண்டும் என்பதில் உண்மையான  அக்கறை கொண்டிருந்ததே பெரியார் அப்படி ஆதரித்ததற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சமூக நீதிக்கான போர் மறவர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1924&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஆணை மூலம் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு  கொள்கையைச் செயற்படுத்த நீதிக் கட்சி ஆட்சி மேற்கொள்ளும் நட வடிக்கைகளைப்  பெரியார் பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து சாதியார்களில் மிகவும் கீழான அடிமைகளாக ஆதி திராவிடரை அடக்கி ஒடுக்குவதற்கு  ஒரு வழிமுறையாகத் ‘தீண்டாமை’ என்பதைப் பார்ப்பனர் கடுமையாகக் கடைப்பிடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கொடிய சாதி முறையை ஒழித்துக் கட்டும் பொருட்டு, கேரளா மாநிலம் வைக்கம்  என்னும் ஊரில் தடைச் சட்டத்தையும் மீறி நெஞ்சுரத்தோடு போராட்டத்துக்குப் பெரியார்  தலைமை ஏற்று நடத்தினார்.&lt;br /&gt;வைக்கம் என்னும் அந்த நகரில், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர் என்னும்  தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. எனவேதான் அங்கே  உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். அதற்குத் தலைமை  தாங்கும் பொறுப்பை ஏற்பதற்குத் தமிழ்நாட்டிலிருந்து வருமாறு பெரியாருக்கு வேண்டுகோள்  விடுத்தனர். இவரும் அங்கே அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை ஏற்றார். அதனால் இரண்டு  தடவைகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மறியல் போர் ஓர் ஆண்டுக்குமேல் நீடித்தது. பின்னர் தீண்டப்படாதவர்க்குத் தெருக்கள் திறந்துவிடப்பட்டன; நடப்பதற்கு அனுமதி கிடைத்தது. மனித உரிமைகளுக்காகத்  துணிச்சலோடு நடைபெற்ற போராட்டமும், தியாகமும் வெற்றியை ஈட்டித் தந்தன. அதனால் ‘வைக்கம் வீரர்’ என்று பெரியார் அழைக்கப்பட்டார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1924 செப்டம்பர் 11&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர் ஆட்சியில் அயல்நாட்டுப் பொருள்களின் புறக்கணிப்புக்கும், கதர்த் துணியையே  உடுத்த வேண்டும் என்பதற்கும் முன்பு கொள்கை முழக்கம் (பிரச்சாரம்) செய்தார்  என்பதற்காக இவர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1924&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி அருகே சேரன்மாதேவி ஊரில் நடைபெற்ற தேசிய பயிற்சிப் பள்ளியின்  விடுதி ‘குருகுலம்’ என அழைக்கப்பெற்றது. வ.வே.சு. அய்யர் என்னும் பார்ப்பனர் அதன்  பொறுப்பினை ஏற்றிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் குழு ஏற்படுத்திய அந்தக் குருகுலம்,  திராவிட இனத்தைச் சேர்ந்த கொடையாளிகளின் நிதி உதவியாலும் இயங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும்அதன் பொறுப்பினை ஏற்றிருந்தவரோ அங்கே சாதி வேறுபாட்டைக்&lt;br /&gt;காட்டினார். பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று தனித்தனியே பிரித்து வைத்து உணவு  பரிமாறப்பட்டது. திராவிட மாணவர்களைத் தனியே ஒதுக்கி வைத்துத் தமது ஆரிய இனப் பார்ப்பன  மாணவர்களுக்கு மட்டும் தனிச் சலுகை காட்டிய வ.வே.சு. அய்யரின் சாதி வெறித்தனம்  மிகுந்த அணுகு முறை பெரியாரிடம் ஆத்திரத்தையே மூட்டியது. ஆகவே மாபெரும் மனிதப்  பண்பாளரான இவர், அந்தப் பார்ப்பனரின் கொடிய போக்கைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் செயலாளரான பெரியார் போர்கொடி தூக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;1924 நவம்பர் திங்களில் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாகாண  மாநாட்டுக்கு இவர் தலைமை தாங்கினார்.&lt;br /&gt;ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனர்க்கு இணையாக வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும்  உயர்ந்த நிலைகளை எட்டவும், இழிந்த நிலைகளைத் துரத்தி அடிக்கவும் பார்ப்பனர்  அல்லாதார் எனப்படும் திராவிடர் இனத்தவர்க்குக் கல்வியிலும் அரசு அலுவல்களிலும்  வகுப்புவாரி இட ஒதுக்கீடு கட்டாயம் வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும்  தீர்மானத்தை 1920 ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் மாநாடுகளில் முன்மொழிந்து கொண்டே இருந்தார் பெரியார்.&lt;br /&gt;தாம் தலைமை ஏற்ற 1924 திருவண்ணாமலை காங்கிரஸ் மாகாண மாநாட்டிலும் அந்தத்  தீர்மானத்தை இவர் கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பார்ப்பனர்களோ, திருநெல்வேலி (1920), தஞ்சாவூர் (1921), திருப்பூர் (1922), சேலம்  (1923) ஆகிய காங்கிரஸ் மாநாடுகளில் செய்ததைப் போன்றே திருவண்ணாமலை (1924)  மாநாட்டிலும் பெரியாரின் தீர்மானத்தைத் தோற்கடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1924&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது பெரியார் ஓர் எச்சரிக்கை விடுத்தார்:&lt;br /&gt;&lt;br /&gt;“ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்) வகுப்புவாரி இடஒதுக்கீடு உரிமையைப் பெற்றால் ஒழிய பார்ப்பனர் மேலாதிக்கத்தை ஒழிக்கவே முடியாது; திராவிட இனத்தவர்,  ‘பிராமணோக்கிரசி’ என்னும் பார்ப்பனீயக் கொடுங்கோல் ஆட்சியில் துன்பப்படத்தான் வேண்டும்” என்றார். இவ்வாறு ஒரு  புதிய சொல்லாக்கத்தையே இவர் உருவாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1925 - மே 2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘குடி அரசு’ என்னும் தலைப்பில் ஒரு தமிழ் வார இதழைப் பெரியார் வெளியிட்டார். தாமே  அதன் ஆசிரியராகவும் அமர்ந்தார். இந்து மதத்தின் கொடிய சாதி முறை மற்றும் மூடநம்பிக்கை  மூலம் பார்ப்பனரால் அடக்கி அடிமைப்படுத்தப்பட்ட திராவிட இனத்தவருக்கு விழிப்புணர்ச்சி ஊட்டும் தன்மான  எழுச்சிக் கொள்கைகளை அந்த இதழ் வாயிலாகப் பரப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;துறவுக்கோலம் பூண்ட தமிழ் ஞானியும் கவர்ச்சி மிக்க சொற்பொழிவாளருமான, புகழ் பூத்த திருப்பாதிரிப்புலியூர் - ஞானியார் அடிகள் ‘குடி அரசு’ வார ஏட்டின் முதல் இதழை  வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1925 - நவம்பர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நூலாசிரியர், இதழ் ஆசிரியர், சொற்பொழிவாளர், தொழிலாளர் தலைவர் -  என்றெல்லாம் பலதுறை அறிஞராகத் திகழ்ந்தவர் ‘தமிழ்த் தென்றல்’ திரு. வி. கலியாணசுந்தரனார் (திரு.வி.க.). அவரது  தலைமையில் காஞ்சீபுரம் நகரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதிலும் கூட, பார்ப்பனர் அல்லாதாருக்கு  நூற்றுக்கு 50 விழுக்காடு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார் பெரியார். வழக்கம்போலவே தந்திரம் மிக்க பார்ப்பனர், அது நிறைவேறுவதைத் தடுத்தனர். அந்தத்  தோல்வி எல்லையற்ற ஆத்திரக்காரராக மாற்றியது பெரியாரை. எனவே, பார்ப்பனரால் முழுமையாகக்  கைப்பற்றப்பட்டு ஆதிக்கம் செலுத்திய மாகாணத் தலைமைப் பொறுப்புக் குழுவைக் கொண்ட காங்கிரசுக் கட்சியிலிருந்து இவர் வெளியேறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு காங்கிரசுக்கு விடை கொடுத்த பொழுது, தமது எதிர்காலத்தின் ஒரே வேலை -  பார்ப்பனர் ஆதிக்க ஆட்சியைக் கொண்ட காங்கிரசை எல்லா வகைகளிலும் அடியோடு ஒழித்துக் கட்டுவதுதான்  என்று பெரியார் இடி முழக்கத்துடன் சூளுரைத்தார். இவர் மாநாட்டை விட்டு வெளியேறிய உடனேயே, மிகப்  பெரும் எண்ணிக்கையில் கட்சியின் முன்னணித் தலைவர்களும் தொண்டர்களும் இவரைப் பின்தொடர்ந்து வந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-8772592419983811301?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/8772592419983811301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=8772592419983811301' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/8772592419983811301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/8772592419983811301'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/05/2.html' title='தந்தை பெரியார் - வாழ்க்கை வரைபடம் - 2'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-6847067811699900566</id><published>2007-05-18T16:10:00.000+05:30</published><updated>2007-05-18T16:23:06.101+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>தந்தை பெரியார் - வாழ்க்கை வரைபடம் - 1</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img src="http://i150.photobucket.com/albums/s101/luckylook32/periyar-04.jpg" alt="Photo Sharing and Video Hosting at Photobucket" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தந்தை பெரியார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1879 செப்டம்பர் 17&lt;/span&gt;&lt;br /&gt;இன்று தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி பிறந்தார்.&lt;br /&gt;இவர் குழந்தையாய் மலர்ந்த இடம் ஈரோடு நகரம் (தமிழ்நாடு மாநிலம் - இந்தியா).&lt;br /&gt;தந்தையார் வெங்கட்ட நாயக்கர், தாயார் சின்னத்தாயம்மையார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1885 வயது – 6&lt;/span&gt;&lt;br /&gt;அந்த நாளில் வழக்கமாக நடைபெற்ற சிறிய திண்ணைப் பள்ளிக்கு இவர் அனுப்பப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1889 வயது - 10&lt;/span&gt;&lt;br /&gt;அய்ந்து ஆண்டுகளிலேயே இவரது பள்ளிப் படிப்பு முடிவுற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1891 வயது - 12&lt;/span&gt;&lt;br /&gt;தம் தந்தையாரின் வணிகத் தொழிலில் இவர் ஈடுபட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1895&lt;/span&gt;&lt;br /&gt;இவர்தம் பெற்றோரின் விருந்தோம்பலில் மகிழ்ச்சியுறும் வைணவ மத ஆசிரியர்கள்  இவரது இல்லத்தில் ஆற்றும் உரைகளைக் கேட்பது இவருக்கு வழக்கம். திராவிட  இனத்தவரை அடக்கி ஆள்வதற்காக ஆரிய இனத்தவரான பார்ப்பனர் இந்து மத  தெய்வங்கள் பற்றிய பொய்யான புராணக் கதைகளைப் பரப்பினர். அவற்றின் முரண்பாடுகளையும் கற்பனை ஏமாற்றுகளையும் குறித்து, சிறு பையனாக இருந்த  பொழுதே இவர் கேள்விகள் எழுப்பத் தொடங்கி விட்டார். இளைஞர் இராமசாமி  உள்ளத்தில் பகுத்தறிவு - கடவுள் மறுப்புக் கருத்துகள் பூக்கத் தலைப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img src="http://i150.photobucket.com/albums/s101/luckylook32/periyar-02.jpg" alt="Photo Sharing and Video Hosting at Photobucket" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1898&lt;/span&gt;&lt;br /&gt;நாகம்மாள் என்னும் 13 ஆண்டுகள் நிறைந்த நங்கையை இவர் திருமணம்&lt;br /&gt;புரிந்துகொண்டார். பக்தியாளரான தம் மனைவியை இவர், திருத்தினார். அவரது உள்ளத்தில் பகுத்தறிவுக் கருத்துகளை விதைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1900&lt;/span&gt;&lt;br /&gt;பெண் குழந்தைக்கு இவர் தந்தை ஆனார். அதுவோ அய்ந்து மாதங்களிலேயே மடிந்தது.  அதன் பின்னர் இவருக்குக் குழந்தையே பிறக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1904&lt;/span&gt;&lt;br /&gt;தந்தையாரின் கடுமையான கண்டனத்தால் இவர் குடும்பத்தையே துறந்தார். முதலில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகருக்குச் சென்றார். அய்தராபாத், கோல்கத்தா நகரங்களுக்குப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img src="http://i150.photobucket.com/albums/s101/luckylook32/periyar-03.jpg" alt="Photo Sharing and Video Hosting at Photobucket" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அறிவுத் தெளிவு தந்த காசி அவமானம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கங்கை ஆற்றின் கரையில் உள்ள இந்துக்களின் புனித நகரமான காசி நகரை (வாரணாசி) இவர் அடைந்தார். அங்கோ அன்ன சத்திரங்களில் இந்து மதத்தின் மற்றச் சாதியினர்க்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பார்ப்பனர்க்கு மட்டுமே தனிமதிப்புடன் உணவு வழங்கப்பட்டதால்,  திராவிட இனத்தவரான இவரால் எளிதாகச் சத்திரத்து இலவச உணவைப் பெற  முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாள்கள் மிகக் கடுமையாகப் பட்டினியால் வாடிய இந்த எழில் தோற்றம் உள்ள இளைஞர் இராமசாமி, வேறு எந்த நேரிய வழியும் தோன்றாத நிலையில், ஓர் அன்ன  சத்திரத்தில் நுழைவதற்கு முயன்றார். ஆனால் இவரது கரிய மீசை காட்டிக்  கொடுத்துவிட்டது. எனவே, வாயில் காவலாளி சத்திரத்திற்குள் இவர் நுழைவதைத்  தடுத்ததுடன், முரட்டுத்தனமாகத் தெருவிலே இவரைத் தள்ளிவிட்டான். அந்த நேரம்,  சத்திரத்தின் உள்ளே விருந்து முடிந்து விட்டதால், எஞ்சிய சோற்றுடன் எச்சில் இலைகள் தெருவிலே வீசி எறியப்பட்டன. கடந்த சில நாள்களாக வாட்டிய கடும் பட்டினியோ, அந்த  எச்சில் இலைச் சோற்றைத் தெரு நாய்களுடன் போட்டியிட்டுத் தின்பதற்குக்  கட்டாயப்படுத்தியது இராமசாமியை.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு அந்தச் சோற்றைத் தின்னும்பொழுதே சத்திரத்தின் வெளிப்புறச் சுவரில்  பொறிக்கப்பட்ட எழுத்துகளை இவர் விழிகள் பார்த்தன. அவையோ இந்த உண்மையை  வெளிப்படுத்தின: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்கார வணிகரான திராவிட இனத்தவரே அந்தச் சத்திரத்தைக் கட்டியவர். ஆயினும், மிக உயர்ந்த சாதியாரான  பார்ப்பனர், தங்களுக்கு மட்டுமே தனி உரிமை கொண்டதாக அதில் குடியேறிவிட்டனர்;  இலவச உணவு உண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img src="http://i150.photobucket.com/albums/s101/luckylook32/periyar-01.jpg" alt="Photo Sharing and Video Hosting at Photobucket" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திடீரென்று இந்த இளைஞரின் மனத்தில் சில கேள்விகள் தீப்பொறிகளாகத் தெறித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு திராவிட அறப்பணியாளர் பணத்தில் கட்டப்பட்ட சத்திரத்தில் திராவிட இனத்தவர்  உணவு அருந்துவதைப் பார்ப்பனர் தடுப்பது ஏன்? திராவிடரைப் பட்டினிச் சாவுக்கே  தள்ளும் அளவுக்குத் தங்களின் கொடுமையான சாதி முறையை விடாப்பிடியாகக்  கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வளவு இரக்கம் இல்லாமலும்  மதவெறியோடும் பார்ப்பனர் நடந்து கொள்ள வேண்டுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வினாக்களுக்கு உரிய நியாயமான விடைகள் பெரியாரின் அறிவுக் கூர்மையான சிந்தனைக்குக் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காசியில் துளி அளவும் இரக்கம் அற்றுப் பார்ப்பனர் இழைத்த அவமானம் பெரியார் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கிற்று. அதுவே ஆரிய இனத்தின் மீதும் அவர்களின் படைப்புகளான கணக்கற்ற கடவுள்கள் மீதும் அழுத்தமான வெறுப்பு&lt;br /&gt;நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக உயர்ந்த ‘புனித நகரம்’ ஆகப் பார்ப்பனரால் போற்றப்படுவதுதான் காசி என்னும் வாரணாசி. ஆயினும் அங்கே காணப்பட்ட மிகமிக அருவருப்பான ஒழுக்கக்கேடான நடவடிக்கைக் காட்சிகளும், பரத்தைத் தொழிலும் (விபச்சாரமும்), ஏமாற்றுதலும், பகற்கொள்ளையும், கெஞ்சிப் பிச்சை கேட்கும் கூட்டங்களும், கங்கை ஆற்றில் மிதந்து செல்லும் பிணங்களும் புனித நகரம் என அழைக்கப்படும் அந்தக் காசியை வெறுக்கும்படியாகவே பெரியாரைத் தூண்டின. அதன் விளைவாக, தமது துறவு வாழ்க்கை பற்றி எழுந்த மறு சிந்தனை, இவர் தமது குடும்ப வாழ்க்கைக்கே திரும்பிச் செல்வதற்கு  வழி கோலிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஈரோடு திரும்பியதும், இவர்தம் தந்தையார் தமக்குள்ள வணிக உரிமைகள்&lt;br /&gt;அனைத்தையும் இரண்டாவது மகனான இவருக்கே ஒப்படைத்தார். தமது மிகப்பெரிய நிறுவனத்திற்கும் ‘ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி’ என மறுபெயர் சூட்டிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-6847067811699900566?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/6847067811699900566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=6847067811699900566' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/6847067811699900566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/6847067811699900566'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/05/1.html' title='தந்தை பெரியார் - வாழ்க்கை வரைபடம் - 1'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-5993836983223469712</id><published>2007-05-15T11:41:00.000+05:30</published><updated>2007-05-15T11:42:06.346+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார் திரைக்காவியம்'/><title type='text'>பெரியார் திரைக்காவியம் – சில துளிகள்!</title><content type='html'>• படத்தின் டைட்டில் கறுப்பு வண்ணத்தில் சிகப்பு எழுத்துக்கள் என திராவிடர் கழக கொடி நிறத்தில் மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• படத்தில் நகைச்சுவைக்கு என்று தனியான கேரக்டர்கள் எதுவும் இல்லை. உயர்சாதியினரின் அக்காலத்திய நடவடிக்கைகள் சித்தரிக்கப்படும் காட்சிகளே வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;• தந்தை பெரியார் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் பல வரிசைக்கிரமமாக பதிவு செய்யப்படாமல் திரைக்கதையின் வசதிக்காக முன்பின்னாக மாற்றி படமாக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• பின்னணி இசைக்கு அதிக வேலையில்லாத படம். பல காட்சிகள் இசையில்லாமலேயே நகருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• தந்தை பெரியாருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று பலர் கருதுவார்கள். அவருக்கு ஒரு மகள் பிறந்து ஐந்து மாதங்களிலேயே இறந்து விட்டதை இப்படத்தின் வசனம் ஒன்றின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• நிறைய சம்பவங்களை காட்சிகளாக காட்டாமல் சிறு வசனங்கள் மூலமாக சொல்கிறார்கள். 94 ஆண்டுகள் வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளரை 3 மணிநேர படத்தில் குறுக்க வேண்டிய தர்மசங்கடம் இயக்குனருக்கு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• படத்தின் முன்பாதியில் காட்டப்படும் பெரியார் நம் இப்போதைய தலைமுறைக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர். இந்தியாவிலேயே முதன்முறையாக வீடுகளுக்கு குழாய் மூலமாக தண்ணீர் வினியோகித்த முனிசிபாலிட்டி சேர்மன் தந்தை பெரியார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;• மதுவிலக்கு மறியல் போராட்டங்களின் போது தனக்கு சொந்தமான தென்னந்தோப்பு மரங்களை பெரியார் வெட்டி வீழ்த்தியதை காட்சியாக வைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;• வைக்கம் போராட்டத்தின் போது பெரியாரை அழிக்க உயர்சாதி எதிரிகள் யாகம் வளர்க்கிறார்கள். யாகத்தின் பயனாக (?) எதிர்பாராவிதமாக திருவாங்கூர் மகாராஜா மரணமடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;• பெரியாரின் பிரச்சார வண்டியை வழிமறித்து தொண்டர் ஒருவர் தன் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்லி அய்யாவிடம் ஒரு ரூபாய் அளிக்கிறார். ஒரு ரூபாய்க்கு சுமாரான பெயர் தான் வைக்க முடியும். ரெண்டு ரூபாய் கொடுத்தால் சூப்பர் பெயர் வைக்கிறேன் என்கிறார் அய்யா. ரெண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு அய்யா வைக்கும் பெயர் “காமராஜி”&lt;br /&gt;&lt;br /&gt;• பெரியாரின் இளமைக்காலம் வரையிலான காட்சிகளின் போது பெரியாராக நடிப்பவர் சத்யராஜ் என்ற உணர்விருக்கிறது. வெள்ளை தாடி வைத்த பெரியாராக காட்சிகள் மாறும்போது சத்யராஜ் என்ற நடிகர் ஒருவரையே மறந்து விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;• தந்தை பெரியார் தன் வாழ்க்கையில் அதிகமாக உச்சரித்த “பார்ப்பான்” என்ற வார்த்தை படத்தில் எங்குமே இடம்பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;• திமுக ராபின்சன் பூங்காவில் உருவாகும்போது மேடையில் கலைஞர் கருணாநிதியும் இருப்பதாக காட்டியிருப்பது தேவையற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;• அறிஞர் அண்ணா பெரியாரின் பத்திரிகை ஒன்றில் தலையங்கம் எழுதியபோது தடியில்லாமல் மாடி ஏறிச்சென்று அண்ணாவை பாராட்டுகிறார். பெரியார் முதுமை காரணமாக தடியை கையில் எடுக்கவில்லையாம். ஸ்டைலுக்காக தடியெடுக்க ஆரம்பித்தார் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;• பெரியாரின் ரஷ்ய பயணத்தின்போது ரஷ்ய அதிபர் ஸ்டாலினுடனான அவரது அப்பாயிண்ட்மெண்ட் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் கைவிடப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• பெரியாரின் இறுதி ஊர்வலத்தின் ஒரிஜினல் காட்சிகளை க்ளைமேக்ஸில் இணைத்திருப்பது சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;• இப்படத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கையில் வந்த பல கட்டங்கள் இல்லாதிருக்கலாம். எனினும் இப்படம் தந்தை பெரியாரை சாமானியனுக்கும், விளிம்பு நிலை மனிதனுக்கும் எளிய அறிமுகத்தை கொடுக்கும் நோக்கத்துடன் சரிவிகிதத்தில் வணிகநோக்கும் கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• படம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க இயலவில்லை. ஆனந்த விகடன் இதழே இந்த வரலாற்றுக் காவிய முயற்சிக்கு யாராலும் மதிப்பெண் இட முடியாது என தெரிவித்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-5993836983223469712?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/5993836983223469712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=5993836983223469712' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5993836983223469712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5993836983223469712'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/05/blog-post.html' title='பெரியார் திரைக்காவியம் – சில துளிகள்!'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-7547519353011565180</id><published>2007-04-18T06:22:00.000+05:30</published><updated>2007-04-18T09:13:31.386+05:30</updated><title type='text'>ஆனந்த கும்மி !</title><content type='html'>ஏற்கனவே விட்டது சிகப்பு என்ற பெயரில் பெண் பதிவரை 'கும்மியடி பெண்ணே'  கேவலமாக எழுதி கும்மியடித்த முகமூடி குழுதான் (பதிவர் முகமூடி அல்ல) அவைகள். இப்பொழுது போலிப் பதிவு எழுதியவர் முகவரி தெரிந்துவிட்டதால் குற்றம் செய்தவரை மறைக்க குற்றத்தை கண்டுபிடித்தவர்கள் மீதே சேறுவாரி தெளிக்கின்றனர். 3000 வருடங்களாக ஆட்சி பீடத்தை ஆட்டி வைத்தவர்கள் என்ற நினைப்பு இன்னமும் இருக்கிறதோ என்னவோ. &lt;br /&gt; &lt;br /&gt;போலி யார் அவன் முகவரி என்ன என்று எவருக்குமே தெரியாது. சிலர் சாட்டில் பேசியதாகவும், போனில் பேசியதாகவும் சொல்கிறார்கள். போலி இவராக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தான் சொல்கிறார்களே தவிர்த்து போலியை நேரில் பார்த்து பேசினேன் என்று ஒருவரும் சொல்லவில்லை. அவன் ஆபாசமாக எழுதினான், குடும்ப பெண்களைப் பற்றி எல்லாம் எழுதினான் என்பதை எவரும் ஆதரிக்கவில்லை. போலியின் செயலில் உடன்பட்ட பலரும் அவன் அனுகுமுறையில் உடன்படுகிறோம் என்று சொல்லவில்லை. எதோ ஒரு தவறான அனுமானத்தினால் பெண்பதிவரைப் பற்றி போலி வலைத்தளம் அமைத்து பின்பு பலர் அது தவறென சுட்டியதும் நீக்கிவிட்டான். &lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் நாங்கெளெல்லாம் அப்பாவிகள், எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே இல்லை அதானால் ஒண்ணுக்கும் போகமாட்டோம் என்றும் திராவிட திம்மிகள் தான் இழிபிறவிகள் இதுபோல் செயல்படுபவர்கள் என்று கூறிக் கொண்டிருந்த முகமூடிக் கூட்டம் (பதிவர் முகமூடி அல்ல) தாம் அமைத்த ஆபாசக் கதை வலைத்தளம் ( போலி பிரச்னைக்கும் முன்பே  ப்ரொபைல் படி 2005 லேயே உருவாக்கப்பட்டது) அமைத்து இருந்து சரோஜா தேவி நடையை விட கூடுதலாகவே விரசம், காமம் பொங்கும் கதைகளை எழுதியது தகுந்த ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மட்டுமின்றி, முகத்துக்கு நேராகவே பார்த்துப் பழகிய பெண் பதிவர் பெயரில் ஆபாச இணைய தளம் அமைத்ததும் மட்டுமில்லாமல் அந்த பெயரில் போலி பின்னூட்டம் போட்டு பெண் பதிவரை அவமானப்படுத்த துணிந்ததை, சல்மா என்ற பெயரில் எழுதியதையும் பதிவரே ஒப்புக் கொண்டு எழுதியும் கொடுத்துள்ளார். மேலும் அதில் தொடர்புள்ள பெரிய மனிதனையும், பால் மனம் மாறாத பதிவரின் பங்கு குறித்துக் கூறியுள்ளார். &lt;br /&gt; &lt;br /&gt;பெயர் வெளியிடாமல் பாலாபாரதி சம்பவத்தை மட்டும் சொல்லிவிட்டு இந்த பிரச்சனையை மன்னித்து விட்டுவிடலாம் என்று பதிவில் சொல்லிவிட்டு இருந்தார். அதில் பெரும்பாலனவர்கள் மன்னிப்பது சரியென்றே சொல்லி இருக்கின்றனர். சல்மா / ஜோதி என்ற பெயரில் வெறும் ஆபாசமாக மட்டும் எழுதி இருந்தால் பிரச்சனை இருப்பதாக திராவிடத் தமிழர்கள் கருதவில்லை. சல்மா ஐயூப் விவகாரம் வெளியில் வந்ததும் தான் தெரிந்தது சல்மா ஐயூப் என்ற பெயரில் சம்பந்தப்பட்ட பதிவர்கள் இஸ்லாம் மதத்தை இழிவாக விமர்ச்சித்து இருந்த விசயமே. சல்மா ஐயூப் பதிவினால் ஏற்கனவே அவமானம் அடைந்த இஸ்லாமிய பதிவர்கள் சிலரில் நன்பன் சாஜி மற்றும் சிலர் சல்மா ஐயூப் என்ற பெயரில் எழுதியவரை பெண் பதிவர் மன்னித்தாலும் தாங்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்றும் வெளிப்படையாக் தன் குற்றத்தை சம்பந்தப்பட்டவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறினர். &lt;br /&gt; &lt;br /&gt;இதையே இந்துத்துவா வாதிகள் திரித்து இந்து முஸ்லிம் பிரச்சனை ஆக்கி ஆதரவு திறட்ட முயன்று முடியாமல் போனதால் திரட்டியை திட்டிக் கொண்டு இருக்கின்றனர். சல்மாவின் குறிப்பிட்ட பதிவு தேன் கூடு திரட்டியில் தான் வந்தது என்று தெரிந்தும் தேன் கூட்டின் மீது சந்தேகம் கொள்ளாமல் தேவையின்றி பல்வேறு பதிவர்களின் வழி பார்பனீயத்திற்கு எதிராக பதிலடி கிடைப்பதால் தமிழ்மணத்தின் மீது புழுதி வாரி தூற்றுகின்றனர். அதாவது எவனோ மெயில் அனுப்பி ஐபி தமிழ்மணம் கொடுத்து இருக்கலாம் என்று சொன்னானாம், இவருக்கும் சந்தேகமாக இருக்கிறதாம் தமிழ்மணம் தெளிவு படுத்த வேண்டுமாம். சந்தேகப் பட்டு கட்டிய மனைவி சீதையையே தீக்குளிக்க வைத்த இராம ராஜிய கணவு கானும் அனுமான்களுக்கு எவர் பெயரிலும் சந்தேகம் வருவது பற்றி எவருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா ? &lt;br /&gt; &lt;br /&gt;ஆதாரத்தைக் கொடு என்று சொல்லிய தமிழ்மணத்தின் செயல் அடாவடியாக தெரிகிறதாம். நேசகுமார் எங்கிருந்து எழுதுகிறார் என்று சொல்ல வேண்டு மென்ற நிர்பந்தம் தமிழ்மணத்திற்கு இருந்திருந்து கொடுத்திருந்தால் அண்ணார் இஸ்லாமியருக்கு கிளப்பிய அவதூறுகளுக்காகவே பல பிரச்சினைகளை சந்தித்திருப்பார். நேசகுமார் யார் என்ற விபரங்களை கிச்சு போன்றவர்கள் சொல்லியதைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. பதிவர்கள் பற்றிய விபரங்களை தமிழ்மணம் காக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. நேசகுமார் சொல்கிறார் பதிவுகளை 150 பேர் படிக்கிறார்களாம் அதானால் இதைவிட்டு விலகுவதில் நட்டம் ஒன்றும் இல்லையாம். அந்த 150 பேருக்குத்தான் நேசகுமார் என்ற பெயரும் தெரிந்து இருக்கிறது, திண்ணை, தமிழோவியம் மற்றும் சிபி டாட் காம் தவிர ஏனைய இதழ்களின் வாசகர்களுக்கு நேசகுமார் எவர் என்றே தெரியாது. அதுவும் வலைகளில் எழுதியதால் தான் அவர் பெயரே தெரிந்து இருக்கிறது. இவரை எத்தனைபேர் தெரிந்து வைத்து இருக்கிறார்களோ அதே அளவுக்குத்தான் நாகூர் ரூமியையும், பதிவர் நல்லடியாரையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;ஆறு மாதத்திற்கும் குறைவான கால அளவுகளில் தான் நேசகுமாரும், இந்துமத இடிதாங்கி அரவிந்தன் நீலகண்டனும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இவர்கள் இல்லாத போதும் பதிவுகள் வந்து கொண்டிருந்தது, புதிதாக பதிவர்களும் வந்து கொண்டிருந்தனர். எத்தனைப் பேர் போனாலும் புதிதாக வருபவர்களும் ஏற்கனவே எழுதுபவர்களும் இந்த ஆரிய கூத்தர்களை கண்டு ஒன்றும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்கள் &lt;br /&gt; &lt;br /&gt;*****&lt;br /&gt; &lt;br /&gt;பதிவுலகை கெடுத்ததில் போலியும் போலிக்கு ஒரிஜினலும் தான் முக்கிய காரணம். ஒரிஜினல் குறிப்பிட்ட ஜாதியை சார்ந்து இருப்பதால் அவருக்கு சப்பைக் கட்ட ஆரம்பித்தே சக பார்'பினி'ய ஆதரவலர்களால் சல்மா போன்ற பெரிய விசயங்கள் நடந்தேறிவிட்டன. முகமூடிகள் கூட்டம் ( பதிவர் முகமூடி அல்ல) அடிப்பது ஆனந்த கும்மியா ? இல்லை ! மாட்டிக் கொண்டு அவமானப்பட்டதன் ஆற்றாமை ஒப்பாரி. கேட்டுவிட்டு 'ஐயோ பரிதாபம்' என்று அடுத்த பதிவை எழுதுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-7547519353011565180?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/7547519353011565180/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=7547519353011565180' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/7547519353011565180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/7547519353011565180'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/04/blog-post.html' title='ஆனந்த கும்மி !'/><author><name>திராவிட தமிழர்கள்</name><uri>http://www.blogger.com/profile/01449620850052649523</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-2026381284800305508</id><published>2007-04-13T15:07:00.000+05:30</published><updated>2007-04-13T15:13:36.404+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>"பெரியார்" திரைக்காவியம் - மே 25 வெளியீடு!</title><content type='html'>&lt;a href="http://www.tn.gov.in/tamiltngov/memorial/periyar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://www.tn.gov.in/tamiltngov/memorial/periyar.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பெரியார்' திரைப்படத்தின் முதல் பிரதி, கடந்த சில வாரங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. தணிக்கைக் குழுவினர் எவ்வித மறுப்போ, வெட்டோ செய்யாமல் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம் என்பதை உணர்த்தும் 'யூ' சான்றிதழ் தந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பகவான் ஒரு நாளில் என்று பெரியாருக்கும், சனாதனவாதிகள் இருவருக்கும் அப்போது நடைபெற்ற கதாகாலட்சேப ரூபத்தில் கேள்வி, பதிலாக அமைந்த பாடலின் வரிகள் தங்களைப் புண்படுத்துகிறது என்று கூறி இந்து மக்கள் கட்சியின் பொருளாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கை அனுமதிக்கவே முடியாது என்பதற்குச் சரியான காரண, காரியங்களை தனது 17 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விலாவாரியாக விளக்கிய தலைமை நீதிபதி பெஞ்ச், பெரியார்தம் கொள்கை, தொண்டு பற்றியெல்லாம் விரிவாக விளக்கியுள்ளது. வழக்கு 24ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பிரதி தயாரான நிலையில், உலகத் தலைவரான பெரியார் திரைப்படம் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியவற்றில் மொழிமாற்றம்-உரையாடல்கள் செய்யப்படும். இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படும். அதே நாளில் உலகின் பற்பல நாடுகளிலும் வெளியிடத் தேவையான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெறத் தொடங்கிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் எங்கும், எத்திக்கிலுமிருந்தும் இதே கேள்வி, பெரியார் படம் எப்போது வெளிவரும், எப்போது வெளிவரும் என்ற கேள்விதான். அப்படி ஆவலோடு இருந்த அனைவரும் உலகம் முழுவதும் பெரியார் மே மாதம் 25ஆம் தேதி முதல் உலா வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்பது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;- லிபர்ட்டி கிரியேஷன்ஸ் இயக்குநர் கோ.சாமிதுரை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-2026381284800305508?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/2026381284800305508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=2026381284800305508' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/2026381284800305508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/2026381284800305508'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/04/25.html' title='&quot;பெரியார்&quot; திரைக்காவியம் - மே 25 வெளியீடு!'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-9025690037353396984</id><published>2007-03-20T16:52:00.000+05:30</published><updated>2007-03-20T17:07:26.250+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பனியம்'/><title type='text'>பார்பனீய கிச்சு கிச்சு !</title><content type='html'>தமிழ்மணத்தில் திரட்டப்படும் வலைப்பதிவுகள் பலவற்றில் வராலாறு அறியாத கத்துக்குட்டிகள் பல பெரியாரையும் தமிழ் சான்றோர்களையும் ஏக வசனத்தில் தனக்கே உரித்தான பாசையில் 'அர்சித்து' வருகின்றனர். இவர்கள் அனைவரும் பார்பனீயத்தை தாங்கிப் பிடிக்கும் பார்பனர்கள் என்பது அவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியது என்பது இல்லை. &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff6666;"&gt;பார்பனீயம் என்பதை பார்பனர்கள் தாங்களாகவே குற்றம் உள்ள நெஞ்சாக தங்களுக்குப் பொருத்திப் பார்பதுதான் அவர்களின் இத்தகைய தூற்றலுக்கு துணையாக இருப்பது துரதிஷ்ட வசமான உண்மை.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;em&gt;ஊருக்குள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அதற்கான அறிகுறி கிஞ்சித்தும் இல்லாமல் &lt;span style="color:#ff6666;"&gt;தரம் தாழ்ந்த விமர்சனங்களைப் &lt;/span&gt;பெரியார் மீதும், திராவிட தலைவர்கள் மீதும், திரவிட உணர்வாளர்கள் மீதும் &lt;span style="color:#ff6666;"&gt;மலிவு ஆபாசத்தில்&lt;/span&gt; வைப்பதைப் பார்க்கும் போது &lt;span style="color:#ff6666;"&gt;இவர்கள் உயர்வு என்பதற்கு இவர்கள் இதுகாறும் கற்பித்த வரைமுறைகளை நாம் 'இனம்' காண முடிகிறது&lt;/span&gt;. &lt;/em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தமிழனாகப்பிறந்து தமிழுணர்வு உள்ள அனைவரும் திராவிடர்கள் என்று பலர் பலமுறையில் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலவே பயனற்றதாக நினைக்க முடிகிறது&lt;/span&gt;&lt;/strong&gt;. திராவிடத்தை தூற்றுகிறார்களே 'அரிப்பு' சொறிந்து கொள்ளட்டுமே என்று அப்படியே விட்டுவிடலாமா ? என்றால் முடியவில்லை. தமிழர் இலக்கியத்திலும், தமிழர் வழிபாட்டு முறைகளிலும், தமிழர் வணங்கும் தெய்வங்களிலும் இவர்கள் ஆபாசம் கற்பிப்பது எல்லையைக் கடந்த பெரும் தொல்லையாக இருக்கிறது என்பது கண்கூடு. பட்டுப் போன மனுதர்ம மரத்தின் ஆனி வேர்கள் துளிர்காதா ? என்ற இவர்களின் எதிர்ப்பார்ப்பில் இவர்கள் செய்யும் திரித்தலுக்கு அளவின்றி போய் கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;திராவிடத் தலைவர்களை திட்டுகிறேன் என்ற போர்வையில் எழுதும் இத்தகைய விசமிகள் உண்மையிலேயே பெரியாராலும், கருணாநிதியாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்றால் அது இல்லை. &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff6666;"&gt;எங்கோ வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இன்றும் தமிழ்நாட்டில் தற்பொழுதும் பூணூல் அறுக்கப்படுகிறது&lt;/span&gt;&lt;/em&gt;,&lt;/strong&gt; 8 ஆம் நம்பர் நூல்கண்டு விற்பனையை திராவிட அரசுகள் தடை செய்தது பார்பனர்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டது என்பது போல் நினைத்துக் கொண்டு தமிழக வரலாறு அறியாமல் தூற்றிவருகிறார்கள். &lt;/span&gt;இவர்களின் இழிசெயலுக்கு ஆதரவாக இந்து என்ற போர்வையில் அப்பாவிகளை ஒருங்கினைக்க வேதங்கள், வாதங்கள், பேதங்கள் என்று உளரிக் கொட்டி பழம் பெருமை வாதத்திற்கு பச்சிலை வைத்தியம் பார்த்து உயிர்பிக்க முயல்கிறார்கள். &lt;span style="color:#ff6666;"&gt;&lt;em&gt;சைவம் வைணவம் என்று இவர்களின் சமயங்கள் இன்றும் பிரிந்தே கிடக்கின்றன, &lt;strong&gt;மனுதர்மத்தை தாங்கிப் பிடிக்கவே இந்து என்ற சொல்லாடலில் அதை சாமார்த்தியமாக பாதுகாக்கவே அடிக்கடி இவர்கள் ஹிந்துக்கள் என்ற பதத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt; காலத்துக்கு ஒவ்வாதவை என்று பலரும் விமர்சித்து தூற்றக்கூடிய இதிகாசங்கள் இவர்களுக்கு மட்டும் புனிதமாக தெரிவதற்கு வருண ஆதாயமே காரணமின்றி வேறு என்ன இருக்க முடியும்?. அன்று சூத்திரரும், &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பஞ்சமரும் படிக்க கூடாது என்ற வேதங்களை இன்று அனைவருக்கும் பொது என்று சொல்லவது பார்பனீயம் இறங்கி வந்ததைக் காட்டுகிறதா ? அழிந்து போகாமல் தற்காக்க அது ஒரு யுக்தி மட்டுமே. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் செய்பவர்கள் ஒரு பெரிய திட்டத்துடன் செய்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. &lt;strong&gt;இரத்ததில் ஊறிய பார்பனீய அழுக்கு இவற்றிற்கு மாற்றாக சிந்திக்கவே செய்யாது என்பதைத்தான் நாம் கண்ணுற முடிகிறது. &lt;span style="color:#ff6666;"&gt;&lt;em&gt;முதலில் இந்திய தேசியம் என்று சொல்வார்கள், பின் இந்து என்று சொல்வார்கள் இறுதியில் பார்பனீயத்தில் மட்டுமே இருப்பார்கள். &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;சோ மொட்டைத் தலையில் முடி வளராவிட்டால் அதுவும் திராவிட பெத்தடின்களின் சதி என்று பேசுவார்கள். சரி திராவிட வெறுப்பை உமிழ்ந்தாயிற்று அடுத்து திராவிடர்களின் பற்றான தமிழும், தமிழ் தெய்வங்களும் இருக்கின்றன என்ற ரீதியில் இவர்களின் கோணல் பார்வையின் குறி மாறிக் கொண்டே இருக்கிறது. &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;பார்பன புலவர்கள் தமிழில் எழுதிய ஆபாச புராணங்களைக் காட்டி தமிழ் தெய்வம் முருனைப் பார் ஆபாச ஆண்டியாக நிற்கிறார். இதுவா உயர்ந்த தமிழ் பண்பாடு ? என்று கேள்வி எழுப்புவார்கள்,&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; சிதைத்து புண்ணாக்கி விட்டு சீழ் வடிகிறது உன்காலில் என்று சொல்லும் இவர்களது குத்தல் வெறும் காது குத்தல் அல்ல கண்ணையும் சேர்த்து குத்துவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலில் ஜே ஜே என்று கூட்டம் வழிந்து &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எங்கள் வருமானத்துக்கு பங்கம் இல்லைப் பார் &lt;/span&gt;&lt;/strong&gt;என்று இவர்கள் மார்தட்டுவதைப் பார்க்கும் போது இன்னும் பெரியாரின் தேவை நமக்கு அதிகமாகவே வேண்டி இருக்கிறது என்பதைத் தான் அது நமக்கு சொல்கிறது. இவர்கள் சொற்பொழிவுகள் அனைத்திலும் &lt;strong&gt;பகவானை நிந்தவர் படும் பாடு இவை இவை என்று பயமுறுத்தல் என்ற வகையில் தான் இருக்கிறது. &lt;/strong&gt;பகவானை என்று மட்டும் எடுத்து கொள்ள முடியுமா ? பகவானே பார்பனை வணங்கியதாக இராம காதை எழுதி வைத்திருக்கிறார்கள். &lt;strong&gt;இவர்கள் மறைமுகமாக சொல்லி வருவது பார்பன நிந்தனை பற்றியது, பிரம்மஹத்தி தோசம் என்ற பயமுறுத்தலைச் சொல்லி தங்களுக்கு எதிர்ப்பு வராமல் இருக்க தந்திரங்களை செய்து வருகிறார்கள். பார்பனர்களுக்கு பங்கம் வரக்கூடாது என்ற எல்லாவித முட்டுக் கட்டைகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் &lt;em&gt;&lt;span style="color:#ff6666;"&gt;இன்றைய இந்துமதம் பார்பனீய மதமின்றி வேறென்ன ?&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; இன்றைய பார்பனர்கள் பொதுவாக எல்லோரிடமும் பழகுகிறார்கள் என்றால் சமத்துவம் பார்கிறார்கள் என்ற சொல்ல முடியுமா ? &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தீண்டாமை பேசினால் செவிட்டில் அறைவிழும் என்பதால் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறார்கள். &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;பார்பனீயம் இன்றைக்கு செத்தபாம்பு ? இருக்கலாம் அதன் விசப்பற்கள் சாகவில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt; கோவில்களும், பெரிய மதில்களும் இன்னும் பார்பனீயத்தின் கோட்டையாகவே இருக்கிறது. அதன் பலமான கதவுகள் திறக்காது, &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பயன் கருதி பராமரிப்புக்காக அவ்வப்போது சமத்துவம் பேசும் பார்பனீயம் கோட்டைக்குள் யாரையும் அனுமதிக்காது. மனுதர்மமும், பார்பனீயமும் கருவரை சாமியைக் காவல் வைத்துக் கொண்டு மந்திர சூனியத்தில் தந்திரமாக தற்காத்துக் கொள்கின்றன. &lt;/span&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff6666;"&gt;அவரவர் தொழிலை அவரவர் செய்வது மனுநீதி என்பர் ஆனால் அவர்கள் மட்டும் &lt;span style="color:#3366ff;"&gt;பணம் கொழிக்கும் தொழில்கள் எதுவாக இருந்தாலும் &lt;/span&gt;மனுவுக்கு பரிகாரம் செய்துவிட்டு அடுத்தவர் பிழைப்பை கெடுக்க அலைவர்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; விதிக்கப்பட்டது என்று சொல்லும் பார்பனீயம் வீதிக்கு வந்து வேதாந்தம் பேசுவது எதனால் ? &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;em&gt;சத்திரியன் செய்யும் தொழிலுக்கான படிப்பை படித்துவிட்டு இடஒதுக்கீடு அபத்தம் என்று பேசுவது என்பது எதனால் ?&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; அவர்கள் தாங்கிப் பிடிக்கும் மனுதர்மம் அவர்களுக்காக இல்லை என்று தெளிவாகிறது. &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff6666;"&gt;காவல்காரர்களில் எத்தனை பார்பனர் இருக்கிறார்கள் ? சிப்பய்களாக எத்தனை பார்பனர்கள் இருக்கிறார்கள் ? இவை எல்லாம் கடை நிலை ஊழியம் என்று இவர்கள் செய்வது இல்லை. இவர்களின் தேசப் பற்று, நாட்டுப் பற்று ஐபிஸ், ஐஏஎஸ் வேலைகளை குறிவைத்து மட்டும் இருக்கிறது, &lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;பணமும் அதிகாரமும் உள்ள பதவிகளுக்கு மட்டும் ஏன் பார்பனர் போட்டி இடவேண்டும் ? பார்பனன் மூட்டை தூக்கியதாகவோ, செங்கல் சுமந்ததாகவோ யாரேனும் பார்த்திருக்கிறீர்களா ? ஆனால் அவர்கள் பார்பனர் மிகவும் ஏழைகளாக இருக்கிறார்கள் என்று புலம்புவார்கள். சித்தாள் வேலை கேவலம் என்பது போல் ஒரு பெரியவர் எழுதி இருக்கிறார். இவர்களுக்கு கேவலாமாக இருக்கும் வேலைகளைத்தான் இன்னும் பலர் செய்து வருகின்றனர் என்பது இவர்களுக்கு தெரியாதது அல்ல. சளி இருக்கும் வரை மூக்கு சிந்துவோம் என்பது போல் தான் இருக்கிறது இவர்களின் ஏழ்மை நிலை பற்றிய புலம்பல்கள். &lt;span style="color:#ff6666;"&gt;பிச்சை எடுத்துதான் வாழவேண்டும் என்ற மனுநீதியை பார்பனர்கள் மீறிவிட்டு அதே மனுநீதியை மற்றவர்களிடம் பெருமையாக பேசுவதும் தின்ணிக்க முயல்வதும் ஏன் ?&lt;/span&gt; மனுநீதிப்படி பார்பனன் தொழில் செய்தால் இங்கு இடஒதுக்கீடே தேவையற்றதாகி இருக்கும். &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர் என்ற சொல்லில் தென்னகத்தாரை அடக்கிவிட்டு இன்று அதே திராவிடர்கள் என்ற பெயரில் ஒன்றுபட்டவர்களிடம் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை என்கிறார்கள். எல்லாம் இல்லை ஆனால் பார்பனன் பாதிக்கப்படக் கூடாது என்ற சிந்தனையின் ஊற்று என்னவாக இருக்கிறது ? &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பார்பனர்கள் தாங்கள் தலித் வீட்டில் உண்டோம் என்று பெருமையாக சொல்லும் போதே அவர்கள் தான் பார்பனீயத்தில்தான் இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; தலித் வீட்டில் உண்ட பெரியவர்கள் என்று இவர்களை நினைக்கவேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff6666;"&gt;எல்லோரும் மனிதர்களே, அவனை தலித் என்ற அடையாளத்தில் வைத்துக் கொண்டு அவனுடன் உண்டேன் என்று சொல்வது பெருமையா ? &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;உண்மையில் பெருமைபடுவது, அல்லது பாராட்டுதல் என்பது இவர்களின் கீழிருக்கும் வருணங்களில் எதோ ஒன்றில் இவர்கள் திருமண சம்பந்தம் கொண்டிருந்தால் பெருமை படலாம். சேர்ந்து உண்டது, சினிமா பார்ப்பதும் சமத்துவம் என்கிறார்கள். &lt;em&gt;&lt;span style="color:#ff6666;"&gt;இவை எல்லாம் சமூக ஒழுங்காக இருக்க வேண்டியவைகள். அதற்கு இவர்கள் சிறப்பு செய்தது போல் காட்டுவதே நான் தலித் வீட்டில் தண்ணீர் அருந்தினேன் என்று சொல்வது. &lt;strong&gt;அவன் அறுத்த நெல்லில் தான் நைவேத்யம் பண்ணுகிறோம் என்பது தெரியாது போலும். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-9025690037353396984?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/9025690037353396984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=9025690037353396984' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/9025690037353396984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/9025690037353396984'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/03/blog-post_20.html' title='பார்பனீய கிச்சு கிச்சு !'/><author><name>திராவிட தமிழர்கள்</name><uri>http://www.blogger.com/profile/01449620850052649523</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-5270955331374082899</id><published>2007-03-15T10:00:00.000+05:30</published><updated>2007-03-15T10:02:43.754+05:30</updated><title type='text'>தந்தை பெரியார் திரைப்படத்துக்கு வாழ்த்துக்கள் !</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rWQ2exQuCDU/RfjMJ21tx5I/AAAAAAAAAAM/w07xdnkyB5A/s1600-h/main.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_rWQ2exQuCDU/RfjMJ21tx5I/AAAAAAAAAAM/w07xdnkyB5A/s320/main.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5042004252552972178" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஞான சம்பந்தன்  இசைப்பாட&lt;br /&gt;ஒரு கோவில் கதவு மட்டுமே திறந்தது !&lt;br /&gt;&lt;br /&gt;தன்மான நம்பந்தன் வசைபாடிட&lt;br /&gt;அனைத்துக் கோவில் கதவுகளும் திறந்தன !&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பு நிறத்தை நெருப்பு நிறம்&lt;br /&gt;ஆக்கியவன் நீ !&lt;br /&gt;&lt;br /&gt;செருப்பு தைப்பவனை கண்டதும்&lt;br /&gt;உருக்கமானவன் நீ !&lt;br /&gt;&lt;br /&gt;உண்டு கொளுத்த தண்டங்களை&lt;br /&gt;கண்டு சினந்தவன் நீ !&lt;br /&gt;&lt;br /&gt;உண்டியல் காசுக்கு உபதேசம் செய்தவரின்&lt;br /&gt;சிண்டைப் பிடித்தவன் நீ !&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோட்டில் பிறந்த நீ, ஓட ஓட&lt;br /&gt;விரட்டியது சதி செய்த பேய்களை !&lt;br /&gt;&lt;br /&gt;சாத்திரம் என்று சொல்லுபவர்களின் சாதித்திமிர் உம்&lt;br /&gt;ஆத்திரத்தால் அடங்கியது !&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திகம் பேசி அடிமைநிலை ஆதரித்தோர்க்கு&lt;br /&gt;நாத்திகன் நீ அளித்தது நல்ல தீர்ப்பு !&lt;br /&gt;&lt;br /&gt;கற்பு இருக்கிறதா ? கன்னி வியாபரிகளுக்கு&lt;br /&gt;கற்கொண்டு பொட்டில் அடித்தவன் நீ !&lt;br /&gt;&lt;br /&gt;பொற்சிலை ஆனாலும் கண்ணில்லை என்றால்&lt;br /&gt;நிற்பதில் பயனில்லை என்றவன் நீ !&lt;br /&gt;&lt;br /&gt;சொற்பதம் சிறக்க நல் தமிழில் சீர்திருத்த&lt;br /&gt;அற்புதம் செய்தவன் நீ !&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்ந்த காலம் யாம் அறியோம், அண்ணலே&lt;br /&gt;மீழாது இறந்த காலம் என்றும் உமக்கில்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-5270955331374082899?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/5270955331374082899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=5270955331374082899' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5270955331374082899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/5270955331374082899'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/03/blog-post_15.html' title='தந்தை பெரியார் திரைப்படத்துக்கு வாழ்த்துக்கள் !'/><author><name>திராவிட தமிழர்கள்</name><uri>http://www.blogger.com/profile/01449620850052649523</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rWQ2exQuCDU/RfjMJ21tx5I/AAAAAAAAAAM/w07xdnkyB5A/s72-c/main.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-1197106307572209039</id><published>2007-03-08T15:23:00.000+05:30</published><updated>2007-03-08T15:24:21.885+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடமும் தமிழும்'/><title type='text'>தமிழும், திராவிடமும்!</title><content type='html'>&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;சமயம் மட்டுமே இம்மொழியைக் காத்தது என்ற புனையுரைகள் இணையத்தில் புனையப்பட்டு வரும் சூழ்நிலையில் இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இம்மொழியின் வளர்ச்சிக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;பண்டிதர்களும், சமயத் தலைவர்களும் தங்களுக்குள்ளாகவே நம் மொழியின் பயன்பாட்டினை பிரித்து எடுத்துக் கொண்டு சமயம் பரப்ப மொழியைப் பயன்படுத்திய வேளையிலே திராவிடர் இயக்கம் மட்டுமே தமிழை பாமரருக்கும் உரிமை கொண்டதாக்கியது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;தமிழிலே புதிய சொற்களை அறிமுகப்படுத்தியதில் முன்னோடிகளாக மறைமலையடிகளாரும், திரு.வி.க.வும் மற்ற பேராசிரியர்களும் பாடுபட்ட போதிலும், அவர்களது பணி எந்த அளவுக்கு மக்களை அடைந்தது என்பது கேள்விக்குறியே. புதுத்தமிழை சாமானியனும் பயன்படுத்தலாம், படைப்புகளை உருவாக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க முன்னோடிகள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;தேசிய இன உணர்வானது தேசிய மொழியையே நேசிக்கச் செய்யும் இயல்பு கொண்டது என்ற நிலையில் மண்டல மொழியான தமிழின் தனித்தன்மையை காக்கும் வேலையை திராவிடர் இயக்கம் செவ்வனே செய்தது. சமயங்கள் தமிழை வாழவைத்தது என்ற கருத்தாக்கத்தை நாமும் ஒப்புக் கொண்டாலும் கூட சமயத்தமிழால் அடித்தட்டு தமிழனுக்கு விளைந்த நன்மை என்ன என்ற நியாயமான துணைக்கேள்வியையும் நம்மால் புறந்தள்ள முடியாது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;திராவிடர்கள் நடத்திய பத்திரிகைகளான குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம், முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை, முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி, திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு, பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு, முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம், எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு ஆகியவவை எளிய உரைநடையில் புதுத்தமிழ் சொற்களை சாமானிய மக்களிடையே பரப்பியது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;வேறு வழியில்லாமல் கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற ஆரியப் பத்திரிகைகளும் தங்களது சொந்த அடையாள நடையை மாற்றவேண்டிய கட்டாயம் இப்பத்திரிகைகளால் ஏற்படுத்தப்பட்டது. பழைய ஆனந்தவிகடன், கல்கி இதழ்களை இன்றைய இதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த உண்மை புலப்படும்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;இதுமட்டுமல்லாமல் சிறுகதை, நெடுங்கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என இலக்கியத்தின் மற்ற கூறுகளிலும் திராவிட இயக்கத்தின் அழகுத்தமிழ் அரசாட்சி மொழியின் பயன்பாட்டை அதற்குரியவர்களுக்கு கொண்டு சென்றது. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியே பலமுறை ஒத்துக் கொண்ட ஒரு உண்மை “திராவிட இயக்கத்தினரால் தமிழர்களுக்கு நல்ல தமிழ் கிடைத்தது” என்பது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;புலவர் குழந்தையின் “இராவணக் காவியம்”, அதுவரை இருந்த இதிகாசத் தமிழ் செயற்பாட்டுக்கு மரண அடி கொடுத்தது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா முதற்கொண்டு திராவிட இயக்கத்தின் கடைநிலை எழுத்தாளர் வரை இனமான எழுச்சித் தொடரினை தமிழரிடையே தொடக்கி வைத்தார்கள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் தினத்தந்தி எளியத் தமிழில் தினச்செய்திகளை தமிழருக்கு தரத் தொடங்கியது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;தமிழர்களின் வாழ்விலையில் முறையில் நடக்கும் இயல்பான நிகழ்ச்சிகளின் தலைப்புகள் தனித்தமிழில் மாற்றப்பட்டது திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு செய்த மறுக்க முடியாத சாதனை எனலாம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;விவாகசுபமுகூர்த்தப் பத்திரிகை &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;–&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt; திருமண அழைப்பிதழ்&lt;br /&gt;கர்ணபூஷனம் &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;–&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt; காதணிவிழா&lt;br /&gt;ருதுசாந்தி &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;–&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt; மஞ்சள்நீராட்டு விழா&lt;br /&gt;கிரஹப்பிரவேசம் &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;–&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt; புதுமனை புகுவிழா&lt;br /&gt;உத்தரகிரியை &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;–&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt; நீத்தார் வழிபாடு&lt;br /&gt;நமஸ்காரம் &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;–&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt; வணக்கம்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் தமிழன் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகள் நீக்கப்பட்டு, தமிழின் அழகுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வர திராவிட இயக்கம் அடிகோலியது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;அதுமட்டுமா? அரசியல் மேடைகளிலும் தமிழ் கொஞ்சத் தொடங்கியது&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;அக்ரசானர் &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;–&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt; அவைத்தலைவர்&lt;br /&gt;காரியதரிசி &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;–&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt; செயலாளர்&lt;br /&gt;அபேட்சகர் &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;–&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt; வேட்பாளர்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;இவ்வாறாகத் துறைதோறும் தனித்தமிழ் வளர்ச்சி திராவிட இயக்கத்தாரால் நித்தமும் நடைபெற்றது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;வேட்பாளர் என்ற சொல்லை திமுக 1957ல் தேர்தலிலே முதன்முறையாக கலந்துகொண்ட போது தான் தமிழகத்திலே பயன்பாட்டுக்கு வந்தது. இம்மாற்றத்தை பாராட்டி அக்காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகை தலையங்கமே எழுதியது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;“சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றியபோது எதிர்த்தார்கள். மந்திரிகளை அமைச்சர்கள் என்றபோது எதிர்த்தார்கள். மகாஜனம் வேண்டாம், பொதுமக்கள் போதும் என்றபோது எதிர்த்தார்கள். உபன்யாசத்தை சொற்பொழிவு என்றபோதும் எதிர்த்தார்கள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;இவர்கள் எங்கேயிருந்து தமிழை வாழவைக்கப் போகிறார்கள். நெருப்பு எரிகிறவரையே குளிர்தெரியாமல் இருக்கும். நெருப்பு அணைந்துவிட்டால் மீண்டும் குளிர் நடுங்க வைக்கும்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;தமிழ்மொழி மீது ஆர்வமும், சுறுசுறுப்பும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தமிழ் வாழும். இல்லாவிட்டால் மீண்டும் மகாஜனம் வந்துவிடும். பொதுமக்கள் அழிந்துவிடும்” என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;அதாவது திராவிடர் இயக்கம் என்ற நெருப்பு அணைந்துவிட்டால், மீண்டும் மணிப்பிரவாள குளிர்நடுக்கம் தமிழனுக்கு ஏற்படும் என்பதையே பேரறிஞர் சூசகமாக குறிப்பிட்டார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:aAvarangal;"&gt;இந்த குள்ளநரிக்கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம். அவர்களது எதிர்ப்பு நமக்கெதிராக எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் நாம் சரியான பாதையில் வீறுநடை போட்டு வருகிறோம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-1197106307572209039?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/1197106307572209039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=1197106307572209039' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/1197106307572209039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/1197106307572209039'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/03/blog-post.html' title='தமிழும், திராவிடமும்!'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-6749655260670721022</id><published>2007-02-27T12:36:00.000+05:30</published><updated>2007-02-27T12:42:05.631+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழரும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழும்'/><title type='text'>தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - 3</title><content type='html'>&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;கம்பனுக்கு சிலை வைத்தது மானம் கெடுவதா?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;இன்று நம் நாட்டில் சமதர்மம் என்பது ஜாதியில், செல்வத்தில், பொருளில் என்பது மாத்திரம் அல்லாமல் குணத்திலும் சமதர்மம் என்பதாக கருதப்படுகிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;பார்ப்பானும், பறையனும் சமம்; முதலாளியும், பிச்சைக்காரனும் சமம் என்பதோடு யோக்கியனும், அயோக்கியனும் சமம். தமிழர் சமுதாயத்திற்கு நன்மை செய்தவனும், கேடு செய்து கூலிவாங்கி பிழைப்பவனும் சமம், சாணியும், சவ்வாதமும் சமம் என்ற அளவுக்கு இன்று நம் நாட்டில் சமதர்மம் தாண்டவமாடுகிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;மக்களிடம் சமத்துவம் ஏற்படுவதற்கு முட்டுக்கட்டை போடுவதா?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;இது ஒருபுறம் இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழ்மைப்படுத்தப்பட்டு இழிநிலையில் இறுத்தப்பட்ட தமிழன் விடுதலை பெற்ற மனிதத் தன்மை அடைந்த மற்ற உலக மக்களுடன் சரிசமமாய் வாழவேண்டுமென்று உயிரைக் கொடுத்து சிலர் பாடுபடுகிற போது இந்த தமிழ்ப் புலவர் கூட்டமும், அவர்களால் முட்டாள்களாகப்பட்ட தமிழர் கூட்டமும், தமிழ், தமிழ் மொழி, தமிழர் சமுதாயம் என்னும் பேரால் முட்டுக்கட்டை போடுவது என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றைக்குத் தான் தன்மான உணர்ச்சி வந்து மனிதத்தன்மை ஏற்படப் போகிறது?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;பார்ப்பான் உன் தமிழை ஏற்கிறானா? ஏன்?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;அட முட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாஸ்திரங்களில் எழுதிவைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமில்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டத்தகாதவான வைத்திருக்கிறானே?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக்கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய்; நான் கேட்கிறேன், உன் தமிழையும், உன்னையும் உள்ளே விடாமல் இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று&lt;span style=""&gt;  &lt;/span&gt;குனிந்து கும்பிடுகிறாயே? மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;தமிழ்ப்படித்தான் பலன் இதுதான்!&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொருவனையும் பார்த்து “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று கேட்கும்படி செய்கிறாயே? இதுதானே உன் தமிழின், தமிழ் சமுதாயத்தின் பெருமை?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;font-size:85%;"  &gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானது எப்படி?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதிவைத்து, “கீதை” வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே? நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்கு பிறந்தாய் என்பது பற்றி சிறிதவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றி கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: Arial;"&gt;–&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt; தம்பீ! உன்னாலும், அதாவது நீ யாருக்கு பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும் தான் தேவை.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;font-size:85%;"  &gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;மனிதனுக்கு மானம் தேவை!&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா? என்னிடம் இருக்கிறதா? என்பது தான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;அதையும் விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்கு தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவது கேள்வி.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;ஈனசாதியாக்கிய முட்டாளை வணங்குவது ஈனமல்லவா?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்கு பொத்துக் கொண்டது. ஆனால் தமிழன் ஈனஜாதிப்பயன் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அது மாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள். அவனை சாமி என்று கூறுகிறீர்கள், பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;சிந்தித்துப் பார்! நீ யார், நீங்கள் யாரென்று?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;“வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட சமத்துவ சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் ஒண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளியும், அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாய் இருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ்சாதியார் என்பவர்களுக்கு சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தின் இடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழ வேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும், நமது சகோதரிகள் விஷயத்திலும் நம் பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;(முற்றும்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;நன்றி : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: Arial;"&gt;–&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt; 600 007.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-6749655260670721022?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/6749655260670721022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=6749655260670721022' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/6749655260670721022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/6749655260670721022'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/02/3.html' title='தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - 3'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-3107450327316890764</id><published>2007-02-23T11:35:00.000+05:30</published><updated>2007-02-23T11:45:21.710+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழரும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழும்'/><title type='text'>தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - 2</title><content type='html'>&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;பழமையில் பிடிப்பு இன்னும் நீங்கவில்லையே?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;இன்று நமது வாழ்வு, மதம், கடவுள், மொழி, இலட்சியம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தன்மை பொருந்தியவை தவிர வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம்? எதை குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம்?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;நான் நாற்பதாண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகிறேன், எழுதி வருகிறேன் (குடிஅரசு பத்திரிகையை பார்)&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;span style="font-weight: bold;"&gt;“கடவுளை கற்பித்தவன் முட்டாள்,&lt;/span&gt;&lt;o:p style="font-weight: bold;"&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="font-weight: bold;" class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;பரப்பினவன் அயோக்கியன்,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வணங்குகிறவன் காட்டுமிராண்டி”&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;என்று! அதற்காக கோபப்படாத அரசியல்வாதிகள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றால் இவனுக்கு என்ன பெயர் இடுவது என்றே நமக்கு புரியவில்லை.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt; &lt;/o:p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;தமிழை சீர்திருத்தி வளர்க்க எவனும் முன்வரவில்லையே?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;தமிழை, தமிழ் எழுத்துக்களை திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன்; வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள்; நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்கவில்லை.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;பிறகு தமிழ் மொழிக்கு (கமால் பாட்சா செய்தது போல) ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிக்கால எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன். இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாக சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்? கூலிக்கு மாரடிக்கும் அழுகைத் தொழிலில் வாழ்பவர்கள் போல ஏன் அடித்துக் கொள்ளுகிறாய்?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt; &lt;/o:p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்கு பாதகம் என்ன?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;இங்கிலிஷினால் சிறுமை என்ன?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியமானவனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால் பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது? என்று கேட்கிறேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;நம் மக்கள் வளர்ச்சியில் நாட்டம் வேண்டும்?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;நம் மக்கள் வளர்ச்சி அடையவேண்டிய நிலை இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதனால் வேகமாய்ச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;தமிழ் காட்டுமிராண்டி மொழி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:Arial;font-size:85%;"  &gt;&lt;span style="font-size: 10pt; font-family: Arial;"&gt;–&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; ஏன்? எப்படி?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;புலவர்களுக்கு (தமிழ் படித்து தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்று பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆகவேண்டி இருக்கிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;இத்தனைக் காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால் எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;முக்கிய புலவர்களும், மத உணர்வுள்ள ஆரிய அடிமைகளே!&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;இன்று தமிழ் உலகில் தமிழ்ப் புலவர்களில் 2, 3 புலவர்களின் பெயர்கள் அடிப்படுகின்றன. அவர்கள் தொல்காப்பியன், திருவள்ளுவன், கம்பன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;இம்மூவரில்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;தொல்காப்பியன்      ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;திருவள்ளுவன்      அக்காலத்திற்கு ஏற்றவகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பகுத்தறிவைப்      பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ      கூறிச்சென்றார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;கம்பன்      இன்றைய அரசியல்வாதிகள், தேசபக்தர்கள் பலர் போல அவர் படித்த தமிழ் அறிவை தமிழ்      எதிரியாகிய பார்ப்பனர்க்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப்      பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழு பித்தலாட்டக்காரன்.      தன்னை பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்ல பயப்படும்      கருத்துக்களையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;      &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாதியை சாதித்தொழிலை ஆதரித்தவர்கள்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;br /&gt;இம்மூவர்களும் சாதியையும், சாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சந்தர்ப்பம் நேரும் போது இக்கருத்தை நல்ல வண்ணம் விளக்க காத்திருக்கிறேன். இவர்களை விட்டு தமிழர்கள் இனி எந்த புலவனை, எந்த இலக்கியத்தை தமிழன் நன்மைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்ட தமிழபிமானிகள் என்பவர்கள் முன்வரப்போகிறீர்கள் என்று கேட்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;நன்றி : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt;50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: Arial;"&gt;–&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:aAvarangal;font-size:85%;"&gt;&lt;span style="font-size: 10pt; font-family: aAvarangal;"&gt; 600 007.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-3107450327316890764?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/3107450327316890764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=3107450327316890764' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/3107450327316890764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/3107450327316890764'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/02/2_23.html' title='தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - 2'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-117204316673334284</id><published>2007-02-21T12:59:00.000+05:30</published><updated>2007-02-21T13:02:47.006+05:30</updated><title type='text'>தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - 1</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;தமிழ் காட்டு மிராண்டி மொழி – ஏன்? எப்படி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;ஆங்கிலத்துக்கு ஆதரவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும் முயற்சித்தும் வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலத்தில் எல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100க்கு சுமார் 5 முதல் 10பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்க வழக்க பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ – வருகிறதோ அது போன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது, வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;தமிழ்ப்புலவர்கள் நிலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் தமிழ் படித்த தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்துவான்களாக… தமிழ்ப்புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும், பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;புலவர்களின் மூட நம்பிக்கையும், பிடிவாதமும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் புலவர், வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக, வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப் பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவும் இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூடநம்பிக்கைக் காரர்களாகவும், பிடிவாதக் காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;பகுத்தறியும் தத்துவ விசாரணை அறவே இல்லாதவர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள், வித்துவான்கள் என்றால் 100க்கு 90 பிச்சை எடுத்தே  அதாவது இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழில் உடையவர் என்று ஆகிவிட்டதால் பொய்யோ, புளுகோ, கற்பனையோ, ஏதேதோ பேசி பணம் பெறுவதிலேயே கவலையுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்காக அல்லாமல், மற்றெதற்கும் பயன்படுவதற்கு இல்லாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;ஆசிரியர், மாணவர் நிலையும் பகுத்தறிவைத் தரவில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலவர்களை நீக்கிவிட்டால் மற்ற ஆசிரியர்கள் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாகவே சமீப காலம் வரை அமர்ந்திருக்கும்படியாக நம் நாடு இருந்து வந்ததால், அவர்களிடம் பயின்ற எந்த மாணவனுக்கும் பகுத்தறிவு என்றால் எத்தனை படி? என்று கேட்கும் நிலை தான் மாணவர்களது நிலையாக ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானம் பயிற்றுவிக்கும் ஆசிரியனும், விஞ்ஞானம் பயிலும் மாணவனும் அதில் முதல் வகுப்பாக பாஸ் பெற்ற மாணவனும் கூட நெற்றியில் முக்கோடு சாம்பல் பட்டை அணிந்தவனாக இருந்து கொண்டுதான் பயிலுவான். என்னய்யா அக்கிரமம் நீ சயின்சு படிக்கிறாய்; தத்துவ சாஸ்திரம் படிக்கின்றாய்; நெற்றியில் சாம்பல் பட்டை போட்டிருக்கிறாயே என்றால் சிறிதும் வெட்கமில்லாமல் இதற்கும், அதற்கும் என்னய்யா சம்பந்தம்? நீ என்ன நாத்திகனா? என்று கேட்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், குறிப்பாக புலவர் வித்துவான்களுக்கும் இவருடன் உழல்வோருக்கும் தமிழை, தமிழ் மொழியைப் பற்றிய அறிவு எவ்வளவு இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;மக்கள் சிந்தனைக்கு முட்டுக்கட்டை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அயோக்கியர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு கடைசி மார்க்கம் அரசியல் துறை” என்பது ஆக ஒரு மேல்நாட்டு அறிஞர் சொன்னதுபோல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள் மக்களின் மடமையை நிறுத்தி அறிந்ததன் காரணமாய் அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாகக் கொண்டு தாய்மொழிப்பற்று வேஷம் போட்டுக்கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம் மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;சிந்திக்காத எதிர்ப்புப் பேச்சுக்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம்” என்பதைத் தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலேயே பேசிவருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் “தமிழ்மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி” என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கிய காரணமாய் சொல்லுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன் தானாகட்டும் இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லாவிட்டால் நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனா?&lt;br /&gt;&lt;br /&gt;பிரிமிட்டிவ் (Primitive) என்றால் அதன் தத்துவமென்ன? பார்பேரியன் (Barbarian), பார்பரிசம் (Barbarism) என்றால் அதன் பொருள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;3000 – 4000 ஆண்டுகளுக்கு முன் என்பதற்கு பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பரிசம் என்பதற்கும் அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பவற்றிற்கும் என்ன பேதம் கற்பிக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்&lt;br /&gt;50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28310446-117204316673334284?l=dravidatamils.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dravidatamils.blogspot.com/feeds/117204316673334284/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28310446&amp;postID=117204316673334284' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/117204316673334284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28310446/posts/default/117204316673334284'/><link rel='alternate' type='text/html' href='http://dravidatamils.blogspot.com/2007/02/1.html' title='தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - 1'/><author><name>லக்கிலுக்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SdXWlRfZ1eI/AAAAAAAACBk/uNbwTda2U7Q/S220/lucky.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28310446.post-117189872832688557</id><published>2007-02-19T20:54:00.000+05:30</published><updated>2007-02-19T20:55:28.380+05:30</updated><title type='text'>தமிழிசை ஏன்? தந்தை பெரியார் பகுதி - 2</title><content type='html'>&lt;a href="http://dravidatamils.blogspot.com/2007/01/blog-post_10.html"&gt;தமிழிசை ஏன்? தந்தை பெரியார் பகுதி-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே! இன்று உங்களிடையே சொற்பொழிவாற்றுவது எனக்கு மகிழ்ச்சிக் குரியதாயினும், சொற்பொழிவின் தலைப்பு எனக்கு அத்தனை மகிழ்ச்சிக்குரியதாயில்லை. ‘தமிழ்இசை’ என்பது பற்றிப் பேசவேண்டியது இன்று மிக்க அவசியமாகி விட்டது என்றாலும், அது எனக்கும் மிக்க உற்சாகமான தலைப்பே ஆனாலும், எப்படியோ அந்தத் தலைப்பும் சேதிகளும் இன்று விவாதத்துக்கு இடமுள்ளதாகப் போய்விட்டதால் முதல் முதல் - அதுவும் கட்டுப்பாடானதும் உங்களுக்-குச் சுதந்திரமற்றதுமான ஒரு °தாபனத்தில், விவாதத்துக்கு இடமான விஷயத்தைப் பற்றிப் பேசினால் அது எனக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சியாய் இருந்தாலும், சிலருக்காவது விரும்பத் தகாததாக ஆகக்கூடும். அப்படி ஏற்பட்டால் அது அவ்வளவு நன்மையான காரியமாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும், இன்று நாட்டில் இத்தலைப்பு ஒருவித உணர்ச்சியைக் கொண்டதாக இருப்பதால் நீங்கள் அதை விரும்புகிறீர்கள் என்று கருதி அதுபற்றிய என் கருத்தைச் சொற்-பொழிவு வழியாகச் சொல்லுகிறேன். நீங்கள் நடுநிலைமையில் இருந்து கேட்டு, கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ள வேண்டிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொன்னால், தமிழன் தான் நுகரும் இசையை, ‘தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு’ என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும்? என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழ-னால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்ட-வன், ஏன் மறுக்கவேண்டும்? இது மிக மிக அதிசயமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் - தமிழ்மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன், தனக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடப்படவேண்டு மென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக் கேட்-பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந் தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது’ என்பதாகத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, ‘தமிழில் பாடவேண்டும் என்பது பொதுநலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை நலத்துக்குக் கேடு’ என்று சொல்ல வந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர் -- தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களா, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக் கொள்ளக்கூடுமா? தமிழில் பாடி-னால் இசை கெட்டுப் போகும் என்றால், மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்களைவிட இராஜா சர். அண்ணாமலை செட்டியார், சர். சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அளவு கலை அறிவோ பொது அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன். காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லோ-ருக்-கும் ஒன்றுபோல் இருக்கமுடியாது என்பது அறிஞர் ஒப்பமுடிந்த விஷயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தமிழில் பாடு’ என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே, ‘தமிழ் இசை இயக்கம்’ வகுப்புத் துவேஷத்தையும் உண்டுபண்ணக் கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆகவேண்டியதாய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘இத்தனை பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழரல்லாதவர
